05/13/2026
මෙරට හෘද රෝග ප්රතිකාර ක්ෂේත්රයේ සුවිශේෂී සන්ධිස්ථානයක් සනිටුහන් කරමින්, 2026 වර්ෂය තුළ දිවයිනම ආවරණය වන පරිදි ප්රධාන රෝහල් රැසක අති නවීන තාක්ෂණයෙන් යුත් හෘද කැතීටකරණ යන්ත්ර (Cath Lab) 16ක් ස්ථාපිත කිරීමට සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්යාංශය කටයුතු යොදා ඇත.
රුපියල් මිලියන 3,103ක දැවැන්ත පිරිවැයක් දරමින් ක්රියාත්මක කරන මෙම ව්යාපෘතිය යටතේ කොළඹ, මහනුවර සහ ගාල්ල යන ජාතික රෝහල් ත්රිත්වයේ මෙන්ම මඩකළපුව, රත්නපුර, බදුල්ල, යාපනය, කලුබෝවිල, අනුරාධපුර, කුරුණෑගල යන ශික්ෂණ රෝහල්වල සහ ත්රිකුණාමලය දිස්ත්රික් මහ රෝහලේ ද මෙම යන්ත්ර ස්ථාපිත කෙරෙනු ඇත.
මෙම ව්යාපෘතිය සඳහා සෞඛ්ය හා ජනමාධ්ය අමාත්යාංශයේ මූල්ය ප්රතිපාදනවලට අමතරව ආසියානු සංවර්ධන බැංකුව (ADB) සහ ජයිකා (JICA) ආයතනයේ සහයෝගය ද හිමිව තිබේ. ඒ අනුව සෞඛ්ය අමාත්යාංශය මගින් රුපියල් මිලියන 715ක් ද, ආසියානු සංවර්ධන බැංකුවේ සෞඛ්ය පද්ධති වැඩිදියුණු කිරීමේ ව්යාපෘතිය යටතේ රුපියල් මිලියන 1,188ක් ද, ජයිකා ආධාර යටතේ රුපියල් මිලියන 1,200ක් ද ලෙස මෙම ආයෝජනය සිදු කෙරේ.
දැනට රෝහල් පද්ධතියේ ක්රියාත්මක යන්ත්රවලට අමතරව මෙම නව යන්ත්ර 16 ස්ථාපිත කිරීමත් සමඟ රජයේ රෝහල් සතු මුළු හෘද කැතීටකරණ යන්ත්ර සංඛ්යාව 26 දක්වා ඉහළ යනු ඇත.
මෙම තාක්ෂණික දියුණුවත් සමඟ ඇන්ජියෝග්රෑම් පරීක්ෂණ, ස්ටෙන්ට් (Stent) ඇතුළත් කිරීම සහ පේස්මේකර් (Pacemaker) බද්ධ කිරීම වැනි අත්යවශ්ය හෘද රෝග ප්රතිකාර සේවාවන්හි ධාරිතාව වත්මන් මට්ටමට වඩා දෙගුණයකටත් වඩා වැඩි කිරීමට අපේක්ෂිතය.
இலங்கையின் இதய நோய் சிகிச்சைத் துறையில் ஒரு விசேட மைல்கல்லைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் பிரதான வைத்தியசாலைகளில் அதிநவீன கத்தீட்டரைசேஷன் ஆய்வக இயந்திரங்கள் (Cath Lab) 16 ஐ நிறுவுவதற்கு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
சுமார் 3,103 மில்லியன் ரூபாய் பாரிய செலவில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், கொழும்பு, கண்டி மற்றும் காலி ஆகிய மூன்று தேசிய வைத்தியசாலைகளிலும், மட்டக்களப்பு, இரத்தினபுரி, பதுளை, யாழ்ப்பாணம், களுபோவில, அனுராதபுரம், குருநாகல் ஆகிய போதனா வைத்தியசாலைகளிலும், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையிலும் இந்த இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன.
இந்தத் திட்டத்திற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் ஜைக்கா (JICA) நிறுவனங்களின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது. இதற்கமைய, சுகாதார அமைச்சினால் 715 மில்லியன் ரூபாயும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1,188 மில்லியன் ரூபாயும், ஜைக்கா (JICA) நிதியுதவியின் கீழ் 1,200 மில்லியன் ரூபாயும் என மொத்தம் 3,103 மில்லியன் ரூபாய் முதலீடு இத்திட்டத்திற்காக மேற்கொள்ளப்படவுள்ளது.
தற்போது வைத்தியசாலை கட்டமைப்பில் செயல்படும் இயந்திரங்களுக்கு மேலதிகமாக, இந்த 16 புதிய இயந்திரங்கள் நிறுவப்படுவதன் மூலம், அரசாங்க வைத்தியசாலைகளில் உள்ள மொத்த கத்தீட்டரைசேஷன் ஆய்வக இயந்திரங்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வடையும்.
இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம், அஞ்ஜியோகிராம் (Angiogram) பரிசோதனைகள், ஸ்டென்ட் (Stent) பொருத்துதல் மற்றும் பேஸ்மேக்கர் (Pacemaker) பொருத்துதல் போன்ற அத்தியாவசிய இதய நோய் சிகிச்சை சேவைகளின் திறன் தற்போதைய நிலையை விட இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.