15/11/2024
கடந்த 29 மே 2024 அன்று பாங்காக் வந்த மயிலாடுதுறை மாவட்டம் நீடூரைச் சேர்ந்த திரு. முபாரக், அவர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஜூன் 17 2024 அன்று கனரக வாகனம் மோதிய விபத்தில் தலையில் அடிப்பட்டு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இருமுறை தலையில் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து சுயநினைவின்றி இன்றுவரை பாங்காக்கில் உள்ள லெர்ட்சின் மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பல மாதங்கள் சுய நினைவின்றி இருப்பதாலும் தலையில் அறுவைச் சிகிச்சைகள் மேற்கொண்டதாலும், மருத்துவச் செலவு கடுமையாக அதிகரித்து வந்துள்ளது. எனவே தமிழ்நாடு திரும்பி அங்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நாங்கள் மருத்துவமனையை வேண்டினோம். அவரது காயங்களின் அளவு காரணமாகவும், கோமாவில் இருப்பதாலும் ஸ்ட்ரெச்சர் படுக்கையில் வைக்கப்பட்ட நிலையில் மட்டுமே பயணிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர், இது அவரது குடும்பத்தினருக்கு மேலும் மன வருத்தைத்தையும் குறிப்பிடத்தக்க நிதிச் சுமையையும் ஏற்படுத்தியது
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எம்.எம்.அப்துல்லா M M Abdulla அவர்களிடம் DMK NRI WING தாய்லாந்தின்* சார்பாக கோரிக்கை வைத்தோம் .இதனை அவர்கள் மாண்புமிகு துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட நபரை இந்தியா அழைத்துச் செல்ல அயலகத்துறையின் சார்பாக ரூ.10,41,648/- வழங்கப்பட்டது.
அவர் வரும் 16.11.2024 அன்று தாய் ஏர்வேஸ் விமானத்தில் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டுசெல்லப்பட இருக்கிறார்
இது குறித்து தாயுள்ளத்தோடு துரித நடவடிக்கை எடுத்த
- திரு M. K. Stalin (மு.க.ஸ்டாலின்), தமிழக முதல்வர்
- திரு உதயநிதி ஸ்டாலின், தமிழக துணை முதல்வர்
- திரு எம் முகமது அப்துல்லா, நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை
- திரு கிருஷ்ணமூர்த்தி, ஆணையர், புலம்பெயர் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நல ஆணையர், தமிழ்நாடு
- திரு. அசோக்குமார், உதவி ஆணையர், மறுவாழ்வு மற்றும் புலம்பெயர் தமிழர்கள் நல ஆணையர், தமிழ்நாடு
- சிகிச்சைக்கு ஆதரவளித்த நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும் DMK NRI WINGதாய்லாந்து சார்பாகவும் முபாரக் அலியின் குடும்பத்தினர் சார்பாகவும் வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்..