02/11/2024
யார் இந்த ?
எதிரிகளினாளும் கூட "இவரைப் போன்று சேவை செய்ய முடியாது" என்று சொல்லக்கூடிய சேவைநாயகன்.
🙇வன்னி மக்கள் வழங்கிய அதிகாரத்தின் மூலமாக. புத்தளத்தில் வாழ்ந்து வன்னி மக்கள் அனைவருக்கும் வீடு முதல் காணி உறுதி வரை. உட்கட்டமைப்பு வசதி முதல் பாடசாலை வரை. எங்கெல்லாம் இடம்பெயர்ந்த மக்கள் இருந்தார்களோ அங்கெல்லாம் இவருடைய சேவைகள் பரந்து விரிந்திருந்தது. இவை அனைத்தும் உள்ளூர் மக்களையும் இனைத்தே பல சேவைகளை வழங்கினார்.
🙇சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்ட மக்களின் வரலாற்றினையும் அவல நிலையையும் பாராளுமன்றத்தில் உரத்த குரலில் ஒலிக்கச் செய்தார்
🙇அனைத்து ஒலை வீடுகளையும் கல்லு வீடுகளாக கட்டி அந்த சமூகத்தை நிம்மதியாக உறங்க வைத்தவர்
🙇எப்போதெல்லாம் அங்குள்ள அரசியல் வாதிகளினால் மக்களை அச்சுறுத்த படுகின்றார்கள் அப்பொழுதெல்லாம் தான் ஒரு பாதுகாப்பு அரணாக காணப்பட்டார்
🙇உயர் அதிகாரிகளினால் எப்பொழுதெல்லாம் அநியாயம் இழைக்கப்படுகின்றதோ அப்பொழுதெல்லாம் அந்த அநியாயத்துக்கு எதிராக கொதித்தெழுந்து
நியாயம் பெற்றுக் கொடுத்தார்.
🙇இடம்பெயர்ந்த மக்களின் நன்றிக் கடனுக்காக இரண்டு வருடங்கள் நவவி Sirக்கு பல பிரச்சினைக்கு மத்தியில் தேசியப்பட்டியல் பதவியினை புத்தளத்திற்க்கு வழங்கி செஞ்சோற்று கடன் தீர்த்ததை நாம் மரக்கவில்லை.
🙇மீண்டும் சொந்த மண்னில் மீள்குடியேற்றத்தின் பின் மரக்காடாய் கிடந்த எங்கள் ஊரினை மிகவும் துரிதமாக துப்பரவு செய்து அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து நீர்ப்பாசன குளங்கள் புனர்நிர்மாணம் செய்து அனைத்தும் மிகவும் விரைவாக செய்து முடித்தார்
🙇அனைவருக்கும் தற்காலிக நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்
🙇மீள்குடியேற்றத்தின் பின் சகல கிராமத்திற்கும் ஒரு மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டது. அரை ஏக்கர் காணி மற்றும் வீடு, நீர் மற்றும் சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
மேலும அதற்க்காக இவருக்கு எதிராக எத்தனையோ வழக்குகள் இன்று வரை இதற்காக தொடுக்கப்பட்டது.
🙇பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் முஸ்லிம் உறவுகளுக்கு உத்தியோகத்தையும் வழங்கினார்.
🙇மேலும் இங்கு வன்னி மக்கள் அனைவரையும் தமிழ் முஸ்லிம் என்ற பிரிவினை இன்றி ஒன்றுறினைத்தார்.
இங்கு குறிப்பிட்டது எல்லாம் மிகவும் இரத்தினச் சுருக்கமாக என்னுடைய பதிவில் ஒரு ஞாபகமுட்டலுக்காக இதனை நான் குறிப்பிட்டுள்ளேன். எண்ணிலடங்கா சேவையினை அவர் மக்களுக்கு வழங்கி இருக்கின்றார். அனைத்தையும் இதில் சுரிக்கி விடமுடியாது.
அதிகமான மக்களில் நான் தற்காலத்தில் கேள்விப்பட்ட ஒரு விடயம் "என்ன இருந்தாலும் அவரைப்போல ரிசாத் பதியுதீன் போல சேவை செய்ய முடியாது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்" அதிகமான மக்கள் வாய்களில் மொழிந்தது நாம் கேள்விப்பட்டோம்.
எந்தவித சிறிய சேவைகளோ பெரிய சேவைகளொ அவருடைய ஆட்சி அதிகாரம் இல்லாத பொழுது இந்த மக்களுக்கு வந்து சேரவில்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.