15/05/2025
வவுனியாவின் வீராங்கனை கஜேந்தினிக்கு ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம்!
வவுனியா சேர்ந்த இளம் குத்துச்சண்டை வீராங்கனை கஜேந்தினி லோகநாதன், கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சம்மேளன சுற்றுப்போட்டியில் 22 வயதுக்குட்பட்ட பிரிவில் இலங்கைக்கு முதல் வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
57 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில், இந்தியாவின் இடதுகை வீராங்கனை நான்சிக்கு எதிராக மோதிய கஜேந்தினி, இறுதிச் சுற்றில் போட்டி நிறுத்தப்படும்வரை துணிச்சலான மற்றும் போராடும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளை, நான்கு இலங்கை வீரர்கள் தோல்வியடைந்த நிலையில், தோல்வியில்கூட தனித்துவமான வீரத்துடன் களமிறங்கிய ஒரே வீராங்கனையாக கஜேந்தினி திகழ்ந்தார்.
இவளது சாதனை,சக வீரர்களுக்கே மட்டுமல்லாது நாட்டுக்கே பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.