29/01/2022
கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் - முதலாம் ஆண்டு நிறைவு💉
எமது நாட்டில் கோவிட் 19 இற்கு எதிரான தடுப்பூசி வழங்கல் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் பூரத்தியாகியுள்ளது. ஆரம்பத்தில் கோவிட் 19 முன்களப்பணியாளர்களிற்கு வழங்கப்பட்டு படிப்படியாக 60வயதிற்கு மேற்பட்டோர், 30-60 வயதானவர்கள், 20 வயதிற்கு மேற்பட்டவர்கள், 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களென அனைவரிற்கும் வழங்கப்பட்டு வருகின்றது.
தடுப்பூசி வழங்கல் ஆரம்பிக்கப்பட்டதன்பின்பு படிப்படியாக நோய்த்தாக்கம் மற்றும் கோவிட்டால் ஏற்படும் மரணங்கள் என்பன குறைவடைந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாடு முடங்கல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டு படிப்படியாக சாதாரண செயற்பாடுகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன.
இவ்வாறாக நாட்டை சாதாரண நிலைமைக்கு மறுபடி கொண்டுவருவதற்கு கோவிட் 19 தடுப்பூசிகளை நாட்டிற்கு உடனடியாக வரவழைத்த கெளரவ ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சிற்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் எமது பிரதேசத்தில் தடுப்பூசிகளை உரிய நேரத்தில் வழங்க தடுப்பூசிகளை பெற்றுத்தந்த வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனையிற்கும் எமது நன்றிகளைத்தெரிவிக்கின்றோம்.
அத்துடன் எமது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசிவழங்கலின் போது ஒத்தாசை வழங்கிய வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பணிமனை, வவுனியா வடக்கு வலையக்கல்வி பணிமனை, கனகராயன்குளம் வைத்தியசாலை, நெடுங்கேணி வைத்தியசாலை, புளியங்குளம் வைத்தியசாலை, வவுனியா வடக்கு பிரதேசசபை, இராணுவத்தினர், விமானப்படையினர், கிராமசேவையாளர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த தடுப்பூசி வழங்கலை எமது பிரதேசத்தில் உரியநேரத்தில் வினைத்திறனான முறையில் விரைவாக வழங்குவதற்கு இரவு பகல் பாராது உழைத்த வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார குடும்பநல உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாகசேவை உத்தியோகத்தர்கள், பட்டதாரிப்பயிலுணர்கள், வாகன சாரதிகள், சுகாதாரசேவை உதவியாளர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அனைவரிற்கும் சிரம்தாழ்த்திய நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் தடுப்பூசி வழங்கப்பட்டோர் பற்றிய எம்மால் வழங்கப்பட்ட விபரங்களை கோர்வையாக்கி தந்து அடுத்தடுத்த தடுப்பூசி வழங்கலின்போது தரவுகளை பதிவதை இலகுவாக்கிய Covid cell இற்கும் மனமார்ந்த நன்றிகள். “தடுப்பூசி உயிர் காக்கும்”.
சுகாதார வைத்திய அதிகாரி,
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,
வவுனியா வடக்கு