02/06/2026
ஆயிரம் கிராமங்கள் ஆயிரம் கருத்திட்டங்கள்” ஓட்டமாவடியில் ஆரம்பம்.
வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் பிரஜாசக்தியின் “ஆயிரம் கிராமங்கள் – ஆயிரம் கருத்திட்டங்கள்” திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மேற்கு - ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி 01ம் வட்டாரம் வடக்கு பி/2 பிரிவில் ஆழ் கடல் மீன்பிடி படகுககளை பைபர் மூலமாக திருத்தும் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று (02.06.2026) செவ்வாய்க்கிழமை இடம் பெற்றது.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி வடக்கு பி/2 பிரஜாசக்தி தவிசாளர் எம்.பி.அஹமட் இர்ஷாட் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ. தாஹிர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.ஏ.ஹாதி, கிராம சேவை உத்தியோகத்தர் பஸ்மி, பிரதேச சபை உறுப்பினர் லத்தீப் ஹாபிஸ், ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவுக்கான கிளீன் சிறீலங்கா அமைப்பாளர் மௌலவி. எம்.புக்கான், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச ஒருங்கிணைப்பாளர் சேகு இஸ்மாயில் பாரூக், பிரஜா சக்தி தவிசாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், படகு திருத்துனர் சங்க உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
கல்குடா தொகுதியில் உள்ள படகு உரிமையாளர்கள் பழுதடையும் படகுகளை மிக விரைவாக திருத்திக்கொள்வதற்கான வாய்ப்புகக்கள் ஏற்படுவதோடு படகு திருத்துனர் சங்கத்தில் இருக்கும் ஐம்பதுக்கும் அதிகமான உறுப்பினர்களின் வாழ்வாதாரமும் இத்திட்டத்தின் ஊடாக மேம்பட இருப்பதாக ஓட்டமாவடி வடக்கு பி/2 பிரஜாசக்தி தவிசாளர் எம்.பி.அஹமட் இர்ஷாட் தெரிவித்தார்.