07/10/2023
குறைபாடுகளை விமர்சித்தாலும் அதிகாரம் இல்லாவிட்டாலும் கல்வித்துறையில் உள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கியுள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறைக்கு நிலையான தீர்வை வழங்குவதே இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருளாக அமைந்திருந்தாலும்,
அந்தப் பிரச்சினை எந்த அளவிற்கு தீர்க்கப்பட்டது என்பது ஒரு கேள்விக்குறியே என்றும்,ஆசிரியர்கள், அதிபர்கள்,கல்வியியலாளர்கள்,ஆலோசகர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கல்வித் துறை நிர்வாகிகள் ஆகிய துறைகளில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் போது கல்வித் துறையில் திருப்திகரமான மனித வளம் உருவாகும் என்றும்,இந்த பிரச்சினைகள் ஒரே பேனாவால் தீர்க்கப்படும் என்று உறுதியளிக்க முடியாது என்றும்,இவ்வாறான பிற்போக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோதும் பல்வேறு குறைகளை விமர்சித்தாலும் அரச தரப்புடன் கலந்துரையாடல் நடத்தி பிரச்சினைகளுக்கு சாதகமாக தீர்வு தேடுவதாகவும்,கல்வியின் பல்வேறு நிலைகளைப் பற்றிய தெளிவான புரிதல் தமக்குள்ளதாகவும்,
குறைபாடுகளை சுட்டிக்காட்டுவது எளிது என்றாலும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பது கடினமான பணி என்றும்,இந்த பணியை எவ்வாறோ மேற்கொண்டாலும்,இப் பணியில் நாசகார செயற்பாடுகளை மேற்கொண்டு அரசியல் இலாபம் அடையும் நோக்கமில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் கல்வித்துறை தொடர்பான 7 பகுதிகளுடன் சுமூக ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு செயற்படுவதாகவும்,இது தேர்தல் நெருங்கும் போது கொடுக்கும் வாக்குறுதி அல்ல என்றும், புதிய கட்சியாக மத்திமமான ஓர் பாதையில் பயணிப்பதாகவும்,இந்தப் பயணத்தின் போது, அதிகாரம் பெறுவதற்கு முன்பே சில சேவைகளைச் செய்ய முடிந்தது என்றும், நாட்டின் கல்வித்துறைக்கு 75 வருட வரலாற்றில் எந்தவொரு எதிர்க்கட்சியும் செய்யாத வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி செய்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமகி கல்வி ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குரு ஹரசர 2023 நிகழ்ச்சியில் இன்று (6) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
220 இலட்சம் மக்களும் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடும் காலத்தில்,இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்க்க டொலரும் ரூபாவும் தேவை என்றும்,சம்பள முரண்பாடு,சேவை உயர்வு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கவும் இந்தப் பணம் தேவைப்படுகிறது என்றும்,என்றாலும் இதற்குத் தேவையான பணத்தைப் பெற, பொருளாதாரம் சுருங்காமல் பொருளாதார விரிவாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த அரசாங்கம் தவறான இடத்திலிருந்து ஆரம்பித்து மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சுருக்கினாலும்,ஐக்கிய மக்கள் சக்தி நம்புவது போன்று இந்நிலையிலிருந்து நாடு மீள வேண்டுமாயின் பொருளாதார விரிவாக்கத்துடன் கூடிய விருத்தியை உருவாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசின் இந்த தவறான நடவடிக்கையால் எதிர்பார்த்த அரச வருவாயை பெற முடியவில்லை என்றும்,இதனால் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணை கூட தாமதமாகி வருவதாகவும்,இந்த நிதிப் பிரச்சினைகளைத் தீர்க்க,பொருளாதாரத்தை மேம்படுத்தி,அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும் என்றும்,அதனூடாக சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஏனைய கட்சிகளைப் போன்று பொய் சொல்லி ஏமாற்றுவதற்கு தயாரில்லை என்றும்,அதிகாரம் கிடைத்தவுடன் இப்பணிகள் அனைத்தும் முறையாகவும்,நேர்மையாகவும், தூய்மையாகவும்,வெளிப்படைத் தன்மையுடனும் மேற்கொள்ளப்படும் என்றும், குறைவாகப் பேசி அதிகமாக வேலை செய்வதற்கான நேரம் எழுந்துள்ளதாகவும், நாட்டில் தற்போது பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.