30/03/2026
தந்தை வபாத்தான நிலையில் தாயின் அரவனைப்பின்றி வாழும் 13 வயது நிரம்பிய மாணவன் ஒருவருக்கு ஸதகா ஜாரியாவாக இன்றைய தினம் சைக்கிள் ஒன்றினை வழங்கி வைத்தோம்.
_____________________________________________
30-03-2026-திங்கள்
எம்மைத் தொடர்பு கொண்ட ஒரு ஏழைக் குடும்பமானது,தமக்கு நெருக்கமான சிறுவன் ஒருவரை தாம் பராமரித்து வருவதாகவும்,இச் சிறுவன் பாடசாலை செல்வதற்கு சைக்கிள் இல்லாத காரணத்தினால் தினமும் நடந்து செல்லக் கூடிய நிலை உள்ளதாகவும்,
தற்போது இச் சிறுவனை பராமரிப்பதற்கு தாயும்,தந்தையும் இல்லாத காரணத்தினால் மேற்கொன்டு தம்மால் சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்வதற்கு இயலாத காரணத்தால்,எமது அமைப்பினூடாக சைக்கிள் ஒன்றினை கொள்வனவு செய்து தருமாறு எம்மிடம் வேண்டிக் கொண்டதற்கினங்க,
இது தொடர்பாக நேரடியாகச் சென்று உறதிப் படுத்திய எமது அமைப்பினர், உதவுவதற்கு தகுதியானவர் என்பதை உறுதிப் படுத்தியதற்கினங்க,இன்றைய தினம் உரிய மாணவனுக்கு ஸதகா ஜாரியாவாக துவிச்சக்கர வண்டியினை வழங்கி வைத்தோம்.
வல்ல அல்லாஹ் இதற்காக உதவிய அன்புச் சகோதரரிற்கு நோயற்ற வாழ்வினையும், குறைவற்ற செல்வத்தினையும் வழங்க வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.
ஆமீன்..
சமூக சேவைப் பிரிவு
அல் பbஷாயிர் அமைப்பு நிந்தவூர்(EP)இலங்கை