02/06/2026
*දිවයින වටා මුහුදු තීරය ඉතා රළු වෙයි: ධීවර කටයුතුවල නිරත වීමෙන් වළකින්න – ධීවර දෙපාර්තමේන්තුවෙන් හදිසි දැනුම්දීමක්*
කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව විසින් අද (02) පෙරවරු 10.30ට නිකුත් කරන ලද විශේෂ කාලගුණ නිවේදනයට අනුව, ඉදිරි පැය 24 ක කාලය තුළ දිවයින වටා වන වෙරළ ආසන්න මුහුදු කලාපය රළු හෝ ඉතා රළු විය හැකි බැවින් ධීවර කටයුතුවල නිරත වීම අතිශය අවදානම් සහගත බව ධීවර හා ජලජ සම්පත් දෙපාර්තමේන්තුව නිවේදනය කරයි.
විශේෂයෙන් මුලතිව් සිට කන්තකසන්තුරය, මන්තනාරම, පුත්තලම, කොළඹ, ගාල්ල සහ හම්බන්තොට හරහා පොතුවිල් දක්වා වෙරළට ඔබ්බෙන් වන මුහුදු ප්රදේශවල සුළඟේ වේගය විටින් විට පැයට කිලෝමීටර් 50-60 දක්වා ඉහළ යා හැකි බැවින් එම ප්රදේශ ධීවර රැකියාව සඳහා ඉතා අනතුරුදායක මට්ටමක පවතින බව දන්වා සිටියි.
මේ සම්බන්ධයෙන් ධීවර හා ජලජ සම්පත් දෙපාර්තමේන්තුවේ අධ්යක්ෂ ජනරාල් සුසන්ත කහවත්ත මහතා මෙසේ අවධාරණය කරයි:
"ඉදිරි පැය 24 තුළ ඉහත සඳහන් කළ මුහුදු කලාපවල ධීවර රැකියාවේ නිරත වීමෙන් වළකින ලෙස මම සියලුම ධීවරයින්ගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිනවා. මේ වන විටත් මුහුදු කලාපවල රැකියාවේ නිරත වන ධීවර යාත්රා ඇත්නම් වහාම ක්රියාත්මක වන පරිදි ආරක්ෂිතව ගොඩබිම කරා පැමිණිය යුතුයි. එමෙන්ම, ඕනෑම ධීවර කටයුත්තකදී ජීවිතාරක්ෂක කබා (Life Jackets) පැළඳ සිටීම අනිවාර්ය බව මම විශේෂයෙන් මතක් කර සිටිනවා."
පවතින මෙම අවදානම් කාලගුණ තත්ත්වය පිළිබඳව නිරන්තර අවධානයෙන් පසුවන ලෙසත්, තම ජීවිත හා දේපළ ආරක්ෂා කර ගැනීම වෙනුවෙන් බලධාරීන් ලබාදෙන උපදෙස් අකුරටම පිළිපදින ලෙසත් ධීවර හා ජලජ සම්පත් දෙපාර්තමේන්තුව සමස්ත ධීවර ප්රජාවට දැනුම් දෙයි.
நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் : மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் – கடற்றொழில் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (02) முற்பகல் 10.30 இற்கு வெளியிடப்பட்ட விசேட வானிலை அறிக்கையின்படி, அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதிதி கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் அவதானமிக்கது என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்தப் பகுதிகள் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்கள் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார் :
"அடுத்து வரும் 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கூறப்பட்ட கடல் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து மீனவர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். தற்போது கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீன்பிடிப் படகுகள் ஏதேனும் இருப்பின், அவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பாகக் கரை திரும்ப வேண்டும். அத்துடன், எந்தவொரு மீன்பிடி நடவடிக்கையின் போதும் உயிர் காக்கும் அங்கிகளை (Life Jackets) அணிந்திருப்பது கட்டாயமாகும் என்பதையும் நான் விசேடமாக நினைவூட்டுகிறேன்"
நிலவும் இந்த ஆபத்தான வானிலை குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறும், தங்களது உயிர் மற்றும் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை கட்டாயமாக பின்பற்றுமாறும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தையும் வலியுறுத்துகிறது.