தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை.

தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை., Political Party, Kilinochchi.

28/03/2026

நாட்டை நிர்வகிக்க தெரியாவிட்டால் தமிழர் தேசத்தை தமிழர்களிடம் கையளியுங்கள் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன் கோரிக்கை..

நாடு தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் நிர்வாக சவால்களை சமாளிக்க முடியாமல் தள்ளாடும் அரச இயந்திரமே தற்போது காணப்படுகிறது.

அது பல்வேறு விடயங்கள் மூலமாக வெளிக்கொணரப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் (ச.கீதன்) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் எரிபொருள் முகாமைத்துவம் முறையாக செயற்படுத்தபடாமல் கடந்த அரசு கையாண்ட அதே வழிமுறையை பிரதி செய்து பயன்படுத்துவதிலும் இந்த அரசு தோல்வி கண்டுள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் விவசாயத் துறையினருக்கு எரிபொருளை பகிர்ந்தளிக்க முடியாமல் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயல்பாட்டினை இந்த அரசு மேற்கொண்டு வருவதுடன் இன்னும் பல நிர்வாக குறைபாடுகளையும் நிவர்த்திக்க முடியாமல் தள்ளாடுகிறது.

ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சி ஏறிய அரசு பல்வேறு ஊழல்களுக்கு துணை போவதுடன் பாரிய ஊழல் மோசடிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக பொருத்தமற்ற சில கைதுகளை மேற்கொண்டு வருகிறது
அத்தோடு தேர்தல் வாக்குறுதியில் மாகாண சபை தேர்தல்கள் நடாத்தப்படும் என உறுதி அளித்த இந்த அரசு தற்போது தங்கள் மக்கள் செல்வாக்கின் வீழ்ச்சியை கண்டு தேர்தல்களையும் இழுத்தடித்து வருகின்றனர்.

இவ்வாறு இந்த அரசு தொடர்ந்து இதே குறைபாட்டுடன் நாட்டை நிர்வகிக்க அனுமதிக்க முடியாது.

எனவே நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் தமிழர் தேசத்தை அங்கீகரித்து கடந்த காலத்தில் எவ்வாறு தமிழர்கள் தாங்கள் தங்கள் தேசத்தை நிர்வகித்தார்களோ அதுபோல மீண்டும் நிர்வகிக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

24/11/2025

தமிழர் தாயகம் எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளினால் அலங்கரியுங்கள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழ்த் ...

05/09/2025

#கிளிநொச்சி_மாவட்ட_அரச_அதிபருடன்
#விசேட_கலந்துரையாடல்.

அண்மையில் கிளிநொச்சி #மாவட்ட_அரச_அதிபருக்கும் #தமிழ்த்_தேசிய_இளைஞர்_பேரவைக்கும் சினேகிதபூர்வமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பிலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி செயற்திட்டங்கள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

குறித்த #மாவட்ட_அரச_அதிபருடனான கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் செயலாளர் ுமாரசிங்கம், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் உப தலைவரும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை.யின் பொதுச் செயலாளருமான ீதன் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

05/09/2025

#மாவட்ட_பொது_வைத்தியசாலையின் #பணிப்பாளருடன் விசேட கலந்துரையாடல்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாகவும், நோயாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பாகவும் இன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் திரு.பிரபாத் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடல் வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி பற்றாக்குறை, வைத்திய துறைசார் குறைபாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் பணிப்பாளரினால் முன்வைக்கப்பட்டதுடன் பல்வேறு தரப்பினரின் உதவிகள் தங்களுக்கு கிடைக்கப்பெற வேண்டும் என்றும் சுட்டி காட்டினார்.

இதன்போது துறை சார் குறைபாடுகளை அந்தந்த தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று இயலுமான ஒத்துழைப்புக்களை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன் மேலும் பல விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டது.

குறித்த வைத்தியசாலை பணிப்பாளருடனான கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் செயலாளர் ுமாரசிங்கம், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் உப தலைவரும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை.யின் பொதுச் செயலாளருமான ீதன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் #கருப்பையா_ஜெயக்குமார் ஆகியோர் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

ஊடக அறிக்கை15.08.2025.வட,கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவுமுல்லைத்தீவு,முத்தையன்கட்டு இளைஞனுக்கு நீதி கோரியும், வட...
15/08/2025

ஊடக அறிக்கை

15.08.2025.

வட,கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

முல்லைத்தீவு,முத்தையன்கட்டு இளைஞனுக்கு நீதி கோரியும், வடக்கு கிழக்கில் அதிகரித்து காணப்படும் இராணுவ பிரசன்னத்தை முற்றாக நீக்ககோரியும் விடுக்கப்பட்ட 18.08.2025 பொது முடக்க போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பூரண ஆதரவை வழங்குகின்றது.

குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள், தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இப் போராட்டத்தின் கனதியை கருத்தில் கொண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட தொடர் அநீதிகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையிலும் இடம்பெறவுள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவை வழங்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் (கீதன்)
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை.

15/06/2025

#கரைச்சிப்பிரதேச_சபையின் 13.06.2025 அன்று நடைபெற்ற முதலாவது கன்னி அமர்வின் போது #கௌரவ சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் அவர்கள்..

அவைக்கு தலைமை தாங்கும் கௌரவ தவிசாளர் அவர்களே

சபையின் கௌரவ உறுப்பினர்களே

மதிப்புக்குரிய சபையின் செயலாளர் அவர்களே

அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்

கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் சுயேச்சை குழுவாக வண்டில் சின்னத்தில் நாம் களமிறங்கியபோது,
எம்மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்து,
இச்சபையில் எமது சுயேச்சை குழு இரண்டு உறுப்பினர்கள் அங்கம் பெற காரணமான மக்களுக்கு,
நான் எனது நன்றியை இத்தருணத்தில் மிகவும் நன்றிப்பெருக்குடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்னமும் ஆறாத போர்ச் சிதிலங்களோடும், தியாகங்களின் நினைவுகளோடும்,
போருக்கு பிறகும் பதினாறு ஆண்டுகளாய், நீறு பூத்த நெருப்பாய் பயணிக்கும் இந்த மண்ணில்,
அபிவிருத்திக்கான உள்ளராட்சி சபையிடம்,
இந்த மண்ணின் அடையாளங்களையும், நிலத்தையும்,
அதிகார வரம்பை பயன்படுத்தி காப்பாற்றும் கனதியான பொறுப்பும்,
நாமே நம்மை ஆளுதல் என்கிற எமது இனத்தின் நெடுங்கால தத்துவத்திற்கு அமைய,
இச்சபையை செவ்வனே வழிப்படுத்தும் சீரிய பணி என்னிடமும் நம் எல்லோரிடமும் உண்டு என்பதை உணர்ந்தவனாய் இருக்கிறேன்.

கரைச்சிப்பிரதேச சபையின் எல்லை,
பரந்தது என்பதால் அதற்கான பணிகளும் பரந்து விரிந்ததாய் இச்சபையிடம் எதிர்ப்பார்த்துக்கிடக்கின்றது.

இச்சபை போருக்குப்பின், இரண்டு தடவைகள் மக்கள் பிரதிநிதிகளின் கையில் இருந்திருக்கின்றது.

இருப்பினும் நிறைவுடைய கிராமங்களையும் நகரங்களையும் இன்னமும் எமது மக்கள் அடையவில்லை என்கிற குறை மக்களிடம் இன்னமும் மேலோங்கி நிற்கின்றது.

எனவே கூட்டுணர்வுடன் சிந்தித்து எமது நகரங்களை கிராமங்களை, தூரநோக்கான செழிப்பான அபிவிருத்தி நோக்கி, கொண்டு செல்லவேண்டிய கடமை இம் முறை தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவரிடம் உண்டு.

மழை வெள்ளம் வரும்போது, தீ விபத்துக்கள் ஏற்படும் போது,
பொதுக்கழிப்பறைகள் துர்நாற்றம் வீசும்போது,
தெருக்கள் குப்பைகளால் நிறைகின்றபோது,
மக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மீது காறி உமிழவும், சினங்கொள்ளவும் ஆரம்பிப்பார்கள்.

இவை இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல எந்த பிரதேசத்திலும் யதார்த்தம்.

ஆதலால் நாம் இப்போதிருந்தே விழித்துக்கொள்ளவேண்டும்.

எமது கிராமங்களை, நகரத்தை சிறந்த அழகான முன்னுதாரணமாக்க நாம் பூரண ஒத்துழைப்பை இச்சபைக்கு வழங்குவோம்.

ஆனால் கடந்த காலத்தில் செய்யப்பட்டவை சில கூவைகள் குடிகொள்ளும் இடமாகவும், காடு பற்றியும் இருப்பதை காண்கின்றோம்.

மக்களின் வரிப்பணம் எதிர்காலத்தில் பொருத்தமற்றது என்கிற பெயரில்,
இடித்து அழிக்கப்படும் கட்டிடங்களாக அமையுமாயின்
நாம் ஒத்துழைக்கப்போவதில்லை.

ஒரு காலத்தில் கிளிநொச்சி நகரத்தில்,
கட்டியெழுப்பட்ட பட்டிண சபை கட்டிடம் நகரத்தை கடப்போர் திருப்பிப்பார்க்க வைக்கும்.
அது கம்பீரமானதாகவும் மிடுக்கானதாகவும் இருந்துள்ளது.

அக்காலத்தில் அதைப் போன்றதொரு கட்டிடத்தை கண்டி நெடுஞ்சாலையில் அரிதாகவே காண முடிந்துள்ளது,

பின்னாளில் அக்கட்டிடம் பட்டிணசபை அல்லாத பல துறைக்கும் பயனுடையதாய் இருந்துள்ளது.

இந்த நகரத்தில் எது எங்கிருக்க வேண்டுமோ அது அங்கிருக்கவேண்டும்.

இன்று அவ்வாறுதான் இருக்கின்றதா என்பதை எல்லோரும் கேள்விகளாய் கேட்டுப்பார்க்கவேண்டும்.

எனது நண்பர் என்றும், எனது கட்சிகாரர் என்றும், பார்த்து தனி நபர்களின் சுயநலனில் அடிப்படையில் ஒரு சட்டவிரோத முயற்சிக்கு, அனுமதி வழங்கி ஒத்தாசை வழங்கினால்,
அது இந்த மொத்த சமுதாயத்தை பாதிக்கும் ஒன்றாக மாறும்.

ஏனென்றால் பல விடயங்கள் பிரதேச சபையின் அனுமதியை பொறுத்துத்தான் அமையும்.

ஆகவே அனுமதி என்பது சட்ட ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமல்ல, சமுதாய பாரம்பரியம் எதிர்கால தலைமுறை என்ற பலவாறான சிந்தனையின் அடிப்படையில் தீர்க்கவேண்டியது.

ஏன் எனது கன்னியுரையிலே இதை குறிப்பிடுகின்றேன் என்றால்.

கிராமங்களின், நகரங்களின் நல்லாட்சி,
உள்ளுர் ஆட்சியாளர்கள் கையிலேயே தங்கியிருக்கின்றது.

இச்சபையின் அதிகாரங்கள், எதற்கு எப்போது எதற்காக யாருக்காக பிரயோக்கப்படுகின்றது என்பது,
இச்சபை உறுப்பினர்களுக்கு வெளிப்படைத்தன்மையுடன் தெரிந்திருக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன்.

பிரதேச சபை தீர்மானங்கள் பிரதேச சபை உறுப்பினர்களுடன் ஆலோசித்து எடுக்கப்படவேண்டும்.

கட்சி அலுவலகங்களின் தீர்மானங்களும் முடிவுகளும் பிரதேச சபையின் தீர்மானமாக மாறக்கூடாது என்பதை நான் இங்கு வலியுறுத்துகின்றேன்.

இறுதியாக,
எமது சபையின் முன்னுரிமை.
இம்மண்ணுக்காக அர்ப்பணித்தவர்கள், அங்கங்களை இழந்தவர்கள், முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், என்பவற்றிற்கு வழங்கப்படவேண்டும்.

இச்சபை நினைத்தால் போரினால் பாதிக்கப்பட்டவர்களை சிறந்த தொழில் முனைவோராக மாற்றலாம்.
வறுமையை போக்கலாம், ஏற்றத்தாழ்வற்ற சமுகத்தை உருவாக்கலாம்.
அது முன்னுரிமைகளில் தான் உள்ளது.
அது சட்ட திட்டதிற்கு உட்பட்டதாய் நடைமுறைக்கு வரவேண்டுமென ஆசைப்படுகின்றேன்.

 #கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்....தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சந்திரகுமாரன் ஸ்டீவெ...
02/06/2025

#கௌரவ பிரதேச சபை உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்....
தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் சந்திரகுமாரன் ஸ்டீவென்சன் (ச.கீதன்) மற்றும் நிதிச் செயலாளர் Sivalingam Kajeepan ஆகியோர் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

 #தமிழ்த்_தேசிய_இளைஞர்_பேரவையின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!
18/05/2025

#தமிழ்த்_தேசிய_இளைஞர்_பேரவையின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

 #மே18  #தமிழின_அழிப்பு_நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறுகின்ற அதேவேளை ம...
17/05/2025

#மே18 #தமிழின_அழிப்பு_நாள் நினைவேந்தல் நிகழ்வு நாளை காலை 10.00 மணிக்கு முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறுகின்ற அதேவேளை மாலை 5.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் இரணைமடுச் சந்தியில் நடைபெறுகின்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து எமது உயிரிலும் மேலான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதுடன் தமிழர் தேசம் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை சர்வதேச சமூகத்தின் நீதிக்காக முன் வைக்க அணிதிரளுமாறு அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

 ்ச்சிக்கான உன்னத பயணத்தில்..தமிழ்த் தேசியத்துடன் அபிவிருத்தியை நோக்கி.
06/05/2025

்ச்சிக்கான உன்னத பயணத்தில்..
தமிழ்த் தேசியத்துடன் அபிவிருத்தியை நோக்கி.

 #இனப்பற்றுக்_கொண்ட இளைஞர்களின் உயர்ச்சிக்கான சுமை தாங்கும் ஒரே சின்னம் வண்டில் சின்னம்...
04/05/2025

#இனப்பற்றுக்_கொண்ட இளைஞர்களின் உயர்ச்சிக்கான சுமை தாங்கும் ஒரே சின்னம் வண்டில் சின்னம்...

Address

Kilinochchi

Telephone

+94771710965

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share