24/11/2025
எமது கரங்களில் எமது சுற்றாடல்....
எமது சுற்றாடலில் பொதுவாக நுளம்பு பெருகும் இடங்களை அடையாளம் கண்டு நீர் தேங்காதவாறு
பாதுகாப்போம்
1. பிளாஸ்ரிக் பொருட்கள் பீங்கான் மற்றும் தகரப்பாத்திரங்கள் போன்றவற்றைச்
சரியான முறையில் சூழலிலிருந்து அப்புறப்படுத்தல்;
2. நீர் சேகரிக்கும் , தொட்டிகள் , பூச்சாடிகள் , குளிரூட்டிகளின் அடித்தட்டுக்கள் ,
எறும்புப் பொறிகள் போன்றவற்றை நன்கு தேய்த்துக் கழுவுதல்.
3. சீமெந்து பூசிய வடிகான்கள் சீமெந்துத் தரையில் சேரும் நீர் கொங்கிறீட்
கூரைகளை உரிய முறையில் நீரை வழிந்தோடச் செய்தலும் கூரைப் பீலிகளைக் கிரமமாகச்
சுத்தம் செய்தலும்.
4. பாவித்தபின் வீசப்படும் பாத்திரங்களைக் குறைத்தல், மீள்பாவனை மீள்சுழற்சி
மூலமாக உரிய முறையில் திண்மக் கழிவுகளை அகற்றுதல்.
5. பாவித்த டயர்கள் வீட்டுப்பாவனைப் பொருட்கள் மற்றும் தோட்டத்தில் பாவிக்கும்
பாத்திரங்களை நீர் தேங்காதவாறு முறையாகக் களஞ்சியப் படுத்துதல்.
6. இரும்பு மற்றும் உலோகப் பொருட்களிலுள்ள குழிகளுக்கு சீமெந்து, எண்ணெய் இடுவதன்
மூலம் அடைத்தல் அல்லது நிரப்புதல்.
7. மூங்கில், மரங்களைக் கணுக்களில் வெட்டுதல் அல்லது மூங்கில் குழல்கள் மற்றும்
மரப்பொந்துகளுக்கு மண் அல்லது சீமெந்து இட்டு நிரப்புதல்.
8. மரப்பொந்துகளில் மண்ணை நிரப்புதல் அல்லது அதனை இல்லாது செய்தல்.
9. கரடுமுரடான சீமெந்து நிலங்களில் நீர் தேங்கி நிற்காதவாறு பராமரித்தல்.
10. வீட்டின் மேற்புறம், வீட்டின் உட்புறம், வெளிச் சுற்றாடல் போன்றவற்றை
தொடர்ச்சியாக அவதானித்து நீர் தேங்கியிருப்பின் அதனை உடனடியாக அகற்ற
நீர் சேகரிக்கும் பாத்திரங்களை மூடி வைத்தல்.
11. கிணறுகள் மற்றும் சிறு நீர்த்தேக்க அழகு தடாகங்களில் மீன்களை வளர்த்தல்.
12. போன்ற பல்வேறு வகையான நீர்த்தேக்கக்கூடிய இடங்களை இனங்கண்டு அதனை சுத்தம்
செய்வதன் மூலம் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
எல்லோருமாக இணைந்து சுற்றாடலை சுத்தமாக பேணுவதனால் கொடிய டெங்கு காய்ச்சலில்
இருந்து எமது மக்களை பாதுகாப்போம். எமது கரங்களில் எமது சுற்றாடல்