15/02/2025
#அகில_இலங்கை_ஜம்இய்யதுல்_உலமா – #ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளையின் நன்றியுரை
இம்முறை நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஏழு கௌரவ உறுப்பினர்களை சந்திக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஒரு மாதமாக மேற்கொண்ட தொடர் முயற்சியின் மூலம், ஆளுங்கட்சியின் கௌரவ உறுப்பினர்களான ருவன் செனரத் மற்றும் அதுல வெலதகொட ஆகிய இருவரும் எமது வேண்டுகோளை ஏற்று, இன்று 2025.02.15 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை தர்மகபீர் ஜும்மா மஸ்ஜிதுக்கு வருகை தந்தமைக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்களுடன் நிகழ்ந்த இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியுடனும், நெருக்கமான உரையாடல்களுடன் நடைபெற்றது. ஜம்இய்யதுல் உலமா என்றால் என்ன? ஹம்பாந்தோட்டை மாவட்ட முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு என்ன? ஆகிய விடயங்களை அவர்கள் கேட்டறிந்ததோடு, ஆளும்கட்சியின் எதிர்கால திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது. மேலும், மக்ரிப் தொழுகையின் போது, தொழுகை முடியும் அவதானித்தனர்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வெளியீடுகளையும், எமது மாவட்ட ஜம்இய்யா சார்பாக ஒரு கடிதமும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
எம்முடன் நேரமிட்டு, மிக நேர்மையாகவும் உற்சாகமாகவும் கலந்துரையாடிய கௌரவ உறுப்பினர்களான ருவன் செனரத் மற்றும் அதுல வெலதகொட ஆகியோருக்கும், இந்த சந்திப்பை ஏற்படுத்த உதவிய அவர்களது கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கும், மேலும் அவர்களை நன்முறையில் வரவேற்று, கவனித்து, கௌரவித்து வழி அனுப்பிய எமது மாவட்ட ஆலிம்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜஸாகுமுழ்ழாஹு கைரா
செயலாளர்.
ஹம்பாந்தோட்டை மாவட்டக் கிளை,
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா.