31/12/2024
இராணுவத்தின் 24 வது தளபதியான ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களுக்கு பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் 2024 டிசம்பர் 30 ம் திகதி முறையான பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.
வாகன அணிவகுப்பு மற்றும் ஓட்டுனர்களுடன் வருகை தந்த இராணுவத் தளபதியை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் ஜேகேஆர்பீ ஜயசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் வரவேற்றார். இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, வெளிச்செல்லும் தளபதிக்கு இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையை மதிப்பாய்வு செய்தார்.