09/08/2024
#பாடசாலைகளில் #மாணவர்களின் #நெறிபிறழ்வான #நடத்தைகளுக்கு #பிரதான #காரணங்களில் #சில...!!!
ந.சந்திரகுமார் SLPS
இன்றைய காலகட்டத்தில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் மாணவர்களின் பொதுப் பரீட்சைகளுக்கு மட்டுமே அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளை, மாணவர்களின் சமநிலை ஆளுமை விருத்திக்கு உதவும் இணைப்பாட விதான செயற்பாடுகளில் போதியளவு அக்கறை செலுத்தாமையும், பாடசாலைகளில் மாணவர்களுக்கான ஆலோசனை வழிகாட்டல் சேவைகள் முறையாக நடைமுறைப்படுத்தாமையும் மாணவர்களின் நெறிபிறழ்வான நடத்தைகளுக்கு காரணங்கள் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனைத் தவிர்க்க சில ஆலோசனைகள்...!
#பெற்றோர்களுக்கான #ஆலோசனைகள்...
*உங்களது பிள்ளைகளை ஏதாவதொரு விளையாட்டு, இயல், இசை,நாடகம்,சாரணீயம், மாணவர் படையணி போன்ற ஏதாவது இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
*தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு கிறிக்கெற்,உதைபந்து,வலைபந்து, கூடைப்பந்து,ரெனீஸ், நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
*இசை, நாடகம் போன்றவற்றில் ஈடுபட்டு களிப்படைய சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
*கற்றல் அடைவை அதிகரிக்க காட்டும் அதேயளவு அக்கறையை, உங்கள் பிள்ளையின் சமநிலை ஆளுமை விருத்திக்கு உதவும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளுக்கு காட்ட வேண்டும்.
#அதிபர்கள் #மற்றும் #கல்வி #அதிகாரிகளுக்கான #ஆலோசனைகள்..!!?
*சகல மாணவர்களும் ஏதாவதொரு இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
*பாடசாலை மைதானத்தில் காலை வேளையிலும்,மாலை வேளையிலும் மாணவர்களுக்கு ஏதாவதொரு விளையாட்டு பயிற்சியில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
*சாரணியம்,மாணவர் படையணி,சுற்றாடல் கழகம், சூழல் பாதுகாப்பு படையணி போன்ற ஏதாவது செயற்பாட்டில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
*மாணவர்களுக்கு பாடசாலை மட்டத்தில் தலைமைத்துவத்தை விருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*பாடசாலை ஆலோசனை வழிகாட்டல் சேவைகளை வலுவூட்டி, மாணவர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆலோசனை வழிகாட்டலை பெற்றுக் கொள்ளுவதை உறுதி செய்ய வேண்டும்.
*மாணவர்களின் வலய, மாவட்ட, மாகாண, தேசிய மட்டச் சாதனை தொடர்பான பதிவுப்புத்தகத்தை பேணி வர வேண்டும்.அத்தோடு பகிரங்கமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் விருதுகள் வழங்கி கௌரவிக்க வேண்டும்.
மாணவர்களை வகுப்பறைகளில் அடைத்து வைத்து படிபடியென அழுத்தம் கொடுப்பதைப் தவிர்த்து, சிறிது நேரம் மைதானத்தில் விளையாட அனுமதிக்கும் போது, மன அழுத்தம் இன்றிமாணவர்கள் உற்சாகமாக கற்றலிலும் ஈடுபடுவர்.
திரு.ந.சந்திரகுமார்
சிரேஸ்ட அதிபர்