தமிழக வளர்ச்சிக் கழகம்

தமிழக வளர்ச்சிக் கழகம் அனைவருக்கும் வணக்கம்!!!

இயற்கை விவசாயம்!!!
இலவச கல்வி!!!
இலவச மருத்துவம்!!!
ஊழலற்ற ஊராட்சி!!!

        இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழக வளர்ச்சிக் கழகம் சார்பாக இரம்ஜான் வாழ்த்துக்கள்...
21/03/2026






இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழக வளர்ச்சிக் கழகம் சார்பாக இரம்ஜான் வாழ்த்துக்கள்...

 #இராஜீவ்காந்தி_ப  #நிறுவனத்தலைவர்  #தமிழக_வளர்ச்சிக்_கழகம்
11/03/2026

#இராஜீவ்காந்தி_ப
#நிறுவனத்தலைவர்
#தமிழக_வளர்ச்சிக்_கழகம்

 #இராஜீவ்காந்தி_ப  #நிறுவனத்தலைவர்  #தமிழக_வளர்ச்சிக்_கழகம்  டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு தமிழக வளர்ச்சிக் கழக...
09/03/2026

#இராஜீவ்காந்தி_ப
#நிறுவனத்தலைவர்
#தமிழக_வளர்ச்சிக்_கழகம்

டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு தமிழக வளர்ச்சிக் கழகம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 #சமூகநீதி, விவசாயிகள் உரிமை, தொழிலாளர் நலன் ஆகியவற்றுக்காக நீண்டகாலம் போராடிய அவரது வாழ்க்கை அரசியலில் ஒழுக்கம் மற்றும்...
25/02/2026

#சமூகநீதி, விவசாயிகள் உரிமை, தொழிலாளர் நலன் ஆகியவற்றுக்காக நீண்டகாலம் போராடிய அவரது வாழ்க்கை அரசியலில் ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டுகிறது. அவரது சேவைகள் மற்றும் சிந்தனைகள் அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் நினைவுகூரப்படும்.

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

25/12/2025
 #இராஜீவ்காந்தி_ப  #நிறுவனத்_தலைவர்  #தமிழக_வளர்ச்சிக்_கழகம்
25/12/2025

#இராஜீவ்காந்தி_ப
#நிறுவனத்_தலைவர்
#தமிழக_வளர்ச்சிக்_கழகம்


 #இராஜீவ்காந்தி_ப  #நிறுவனத்_தலைவர்  #தமிழக_வளர்ச்சிக்_கழகம்
24/12/2025

#இராஜீவ்காந்தி_ப
#நிறுவனத்_தலைவர்
#தமிழக_வளர்ச்சிக்_கழகம்

 #இராஜீவ்காந்தி_ப  #நிறுவனத்_தலைவர்  #தமிழக_வளர்ச்சிக்_கழகம்   பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 5 ...
23/12/2025

#இராஜீவ்காந்தி_ப
#நிறுவனத்_தலைவர்
#தமிழக_வளர்ச்சிக்_கழகம்


பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 5 நாட்களாக செவிலியர்கள் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அவர்களுடைய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றும் படி தமிழக வளர்ச்சிக் கழகம் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

சுகாதாரத்துறை அமைச்சருடன் 2-வது முறையாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தை செவிலியர்கள் தொடர்கின்றனர்.

பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் கடந்த 18-ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர்.

அன்றைய தினம், சங்க நிர்வாகிகளுடன், சுகாதாரத்துறை செயலர் செந்தில் குமார் நடந்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, செவிலியர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ஊரப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கேயே செவிலியர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று சங்க நிர்வாகிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுடன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அமைச்சரின் கோரிக்கையை சில சங்கங்கள் ஏற்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகள் ஏற்க மறுத்து, நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக கூறிவிட்டு சென்றனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்கத்தினருடன் பேச்சு நடத்தப்பட்டு, அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரந்தர பணியாளர்களைப்போல், தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைக்கு விரைந்து அரசாணை வெளியிடப்பட இருக்கிறது.

கடந்த 2014-15-ல் தற்காலிக செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலமாக அன்றைய முதல்வர் ஜெயலலிதா நியமித்தார். 2 ஆண்டுகள் பணி செய்த பின், செவிலியர் துறையில் காலிப்பணியிடம் உருவானால், பணி நிரந்தரம் என சொல்லப்பட்டு பணி நியமனம் நடந்துள்ளது. இந்த முறையே தவறு.

ஆனாலும், 7,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அரசு பொறுப்பேற்றப்பின், 3,614 பேரை பணி நிரந்தரம் செய்துள்ளோம். தற்போது, 8,322 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய செவிலியர்களின் ஊதியம் ரூ.14,000-ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.

723 தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவுள்ளனர். மற்ற, 7,599 பேருக்கு காலிப்பணியிடங் களுக்கு ஏற்ப பணி நிரந்தர ஆணை வழங்கப்படும். கரோனா காலத்தில் பணியாற்றிய 716 பேரும் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போராட்டம் தொடரும்: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுக் கழகம் செயலர் சுபின்கூறுகையில், "அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கையை ஏற்பதாக தெரியவில்லை.

8 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில், அதிக வேலை செய்து வருகிறோம். ஆனால், 723 பணியிடங்களை காரணம் காட்டி, மற்றவர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்வோம் என்பதை ஏற்க முடியாது. எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

Address

Gingee Road, Udaiyanatham Othiyathur Post
Villupuram
605701

Telephone

978 743-2384

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழக வளர்ச்சிக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share