11/07/2026
கடந்த பருவமழையில் காட்பாடி மற்றும் கழிஞ்சூர் ஏரியின் உபரிநீரால், குறுகிய பாலங்களும் போதிய கொள்ளளவு இல்லாத கால்வாய்களும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி, பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
அந்த நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்களின் துயரத்தை உணர்ந்த நம் மண்ணின் மைந்தர், கழக பொதுச் செயலாளரும், முன்னாள் நீர்வளத்துறை அமைச்சருமான திரு துரைமுருகன் அவர்கள், வெறும் ஆறுதல் வார்த்தைகளோடு நிற்காமல், நிரந்தர தீர்வை உருவாக்கும் உறுதியுடன் செயல்பட்டார்.
அதன் விளைவாக, பாண்டியன் மடுவு கால்வாயில் தடுப்புச் சுவர் அமைத்தல் மற்றும் கால்வாயின் கொள்ளளவை அதிகரிக்கும் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் விரைந்து நிறைவேற்றப்பட்டுள்ளன.
இன்று, பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், காட்பாடி நகர மக்கள் வரவிருக்கும் பருவமழையை அச்சமின்றி, நம்பிக்கையுடனும் பாதுகாப்புடனு�