அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்

  • Home
  • India
  • Vasudevanallur
  • அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்

அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், Public & Government Service, ரத வீதி , வாசுதேவநல்லூர், Vasudevanallur.

03/08/2021

அன்னை தாமிரபரணி ஒரு தெய்வீக நதி...

மதுரையில் இருப்பவனுக்கு மீனாட்சியின் மகிமை தெரியல என்பது நான் பிறந்த ஊரின் சொலவாடை.

அதாவது பொதுவாக அக்கரைக்கு இக்கரை பச்சை போன்ற பழமொழிகளில் நான் காண்பது நமக்கு நம் திறமை நமது பெருமை போன்றவை நமக்கே தெரிவதில்லை.

எவ்வாறு ஒரு பூக்கடையில் வேலை செய்பவருக்கு புஷ்பத்தின் வாசனை தெரியாதோ

மீன் கடையில் வேலை பார்ப்பவருக்கு மீன் வாசனை பழகி விட்டதோ

பால் விற்பவருக்கு பால் வாசனை பழக்கமோ.

அன்னை உடனிருந்தால் அன்னையை நாம் துதிப்பதில்லையோ (அன்னை இல்லாதவர்கள்தான் அன்னையின் மதிப்பு தெரியும்)

தாமிரபரணி என்னும் நதி உலகத்தில் உள்ள தீபகற்பத்தில் முக்கோண வடிவில் முற்றுப்பெறும் மலையில் உதித்து கடலில் கலக்கும் ஒரே நதி.

அது மட்டும் அல்லாது ஒரே இடத்தில் துவங்கி கிழக்காகவும் மேற்காகவும் பயணிக்கும் ஒரே நதி அதாவது தாமிரபரணி பொதிகை மலையில் அகத்தியர் உறையும் அகஸ்த்தியமலையில் உருவாகி கிழக்கே திருநெல்வேலியில் பயணித்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது மேலும் மேற்கே பேச்சிப்பாறை அணையிலிருந்து தாமிரபரணி எனும் பெயரில் விழுந்து அங்கிருந்து மார்த்தாண்டம் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. இந்தியத் தீபகற்பத்தில் இவ்வாறு ஒரு ஆறு ஒரே பெயரில் இருபுறமும் ஓடுகிறது என்றால் அது நம் தாமிரபரணி தவிர வேறு எதுவும் கிடையாது மார்த்தாண்டம் அருகே இருக்கும் தாமிரபரணிக்கு மறுகால்பரணி என்றும் பெயருண்டு.

தீபகற்ப இந்தியாவில் ஓடும் ஆறுகளிலேயே வற்றாத ஜீவ நதி என்பது தாமிரபரணி ஆகும். மற்ற நதிகள் வருடத்தில் ஒரு நாளாவது வற்றி விடும். அதாவது உலகில் எந்த மூலையில் எந்த ஆறு வற்றினாலும் தாமிரபரணி மற்றும் என்னாளும் வற்றாது எனும் பெருமை தாமிரபரணிக்கு சிவபெருமான் கயிலைலே வரமாக கொடுத்தார் என்றும் கங்கையைப் போல ஆயிரம் மடங்கு புனிதத் தன்மையையும் கொண்டதாக இருக்கக் கடவது என்றும் ஆசீர்வதித்தார் என்று தாமிரபரணி மகாத்மியம் எனும் நூலில் அகத்திய முனி கூறுவதாக உள்ளது.

சித்த புருஷர்கள் எழுதிய அரிய நூல்கள் அனைத்திலும் தாமிரபரணி நதியை குறிப்பிடாமல் எழுதியதில்லை பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனுக்கள் தாமிரபரணியை நோக்கி இமயத்திலிருந்து வந்து தவம்செய்து தாமிரபரணி நதிக்கரையில் சமாதியடைந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.

மச்ச அவதாரம் எடுத்த பெருமாள் வைகையிலே எடுத்தது எத்தனை பேருக்கு தெரியும். வைகைக்கு கிருத மாலை எனும் பெயரும் உண்டு.

18 புராணங்களில் இரண்டு இயற்கைக் கூறுகளை மிகவும் உன்னதமாக கூறுகின்றனர்.

1. தாமிரபரணி நதி

2. மலையாளச்சல் எனும் மலைய பருவதம்

மலய பர்வதமே இமயமலையைக் காட்டிலும் வயதானது என்று சிவமகா புராணம் கூறுகிறது.

மலையபர்வதம் என்பது எது என்றால் பழனி மலையில் ஆரம்பிக்கும் வராககிரி முதல் குமரி வரை இருக்கும் மருத்துவால் மலை வரை உள்ள மலைத்தொடரே மலைய பர்வதம் ஆகும்.

தமிழ் குடி மக்களுக்கு உலகத்தில் உள்ள மற்ற குடிமக்களைக் காட்டிலும் அதிக அறிவு வளமையை நோக்கிச் செல்லும் நோக்கம் மற்றும் அன்பு அரவணைப்பு மேன்மையான குணங்கள் இவற்றை மலைய பர்வதம் நமக்கு அளித்த வரம்.

மலய பர்வதத்தில் உதிக்கும் வைகையும் தாமிரபரணியும் அமராவதியும்(காவிரி) பாவங்களை கழுவும் மிகமிக நுட்பமான உன்னதமான சக்திகளை தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை உணர்ந்த ரிஷிகள் பலர் இந்த நதிகளில் தங்களது ஆசிரமங்களை அமைத்து உலகுக்கு நன்மை பல செய்து வருகின்றனர் என்று தாமிரபரணி மகாத்மியம் மற்றும் மச்ச, கூர்ம புராணங்கள் கூறுகின்றன

மலய பர்வத்ததின் சக்தி தான் மீனாட்சியாக மலையத்துவ பாண்டிய மன்னரின் மகளாக வேள்வித்தீயில் பிறந்து இன்றும் அங்கயர்கன்னியாக மதுரையில் வீட்டிருக்கிறாள். வேள்வியில் இருந்து பிறந்த கன்னி தெய்வங்களுக்கு சக்தி மிக அதிகம்.

நம் முன்னோர்கள் பல அமானுஷ்யமான விசயங்களை மறைத்ததன் விளைவு... இவ்வளவு அருமை பெருமை கொண்ட தாமிரபரணி, வைகை, அமராவதி, மலய பர்வதம், மீனாட்சி அன்னை போன்ற ஒப்பிலா சக்திகளை அனுகு திறன் இல்லாது நாம் கோவில் / சுற்றுலா அளவில் மட்டும் இந்த சக்திகளை நிலைத்து அனுட்டித்துக் கொள்கிறோம்.

தாமிரபரணி அன்னையை எங்கு எவ்வாறு வணங்க நமக்கு அன்னையால் வரும் சுபிக்ஷம் பல்கும் என்பதை உணர்ந்த அகத்திய மகரிசி பாவநாச நதி கரையில் சூர்ய லிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆசிரமும் அமைத்தார்.

அகத்தியரால் உருவாக்கப்பட்ட பல பாபநாசங்களில் உயர்ந்ததும் சித்த மலங்களை களைந்து புருஷசுத்தி அருளும் பேறு பெற்றதுமான திருநெல்வேலி பாபநாசம்.

சித்த மலம் தீர்ந்தால் என்ன லாபம் எனக்கு? புருஷ சுத்தினா என்ன அதனால எனக்கு என்ன பலன்? அப்பிடினு கேள்வி உங்களுக்குள்ள இன்னேரம் உதிச்சிருக்கும்.

பூமில பணம் மட்டும் சம்பதிக்கறவங்க பாவம் பண்ண அஞ்சுவதில்லை. பாவம் வருமுனு நினைக்கிறவங்க ரொம்ப கஷ்டப்படுறாங்கல...இந்த புண்ணியம் பாவம்லாம் ஓரு விதை மாதிரி தானங்க... ஒரு சிலது முலைக்காது, ஒரு சிலது முலைச்சு பெரிய மரமா ஆகிடும். அப்பறம் அதோட பலன நம்ம அனுபவிக்கனும்.

பாவம் செய்றவங்க எல்லாம் நல்லா வாழ்றாங்கனு நிறைய பேர் புலம்புறாங்க. அப்பிடின என்ன அர்த்தம் ஏதோ பெருசா ஒன்னு ரெடியாய்ட்டு இருக்குனு அர்த்தம். மரம் பெருசா வளர உரம் வேணும் இல்லயா. மரத்துக்கு அது உரம்.. ஆனா நமக்கு அது மலம் தானே. மலத்தை தினத்துக்கும் மரத்துக்கு போட்டா நல்லா செழிப்பா ஸ்ட்ராங்கா வேகமா வளரும் இல்லையா.

தாமிரபரணியோட அருமை தெரியாம நம்மல்லாம் வளந்திருக்கோம். தாமிரபரணில ஒரு தடவை பாபநாசத்துல மூழ்க பல நன்மை இருக்கு வாங்க..

07/02/2017

ஆன்மீகத்தில் அதீத ஈடுபாடு உள்ளவர்களே நம்பினால் நம்புங்கள்........
************************

1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.அதனால் கணவன் மனைவி உறவு மேம்படும் .

2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், கணவன் மனைவியுடன் சண்டை போடாதீர்கள்.(எப்போதும் சண்டையில்லாமல் ஒற்றுமையா இருப்பது நல்லது ) சுபகடாட்சம் குறைவு ஏற்படும்.

3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

4.வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும்.

5.அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

6.பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது.

7.பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

8.கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.

9.வீட்டின் நிலைகளில் ( வாசற்கால்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும்.
விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

10.நெய், விளக்கு எண்ணெய், நல்லெண்ணெய் , இலுப்பை எண்ணெய், புங்கஎண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
(தேங்காய் எண்ணெய் சேர்க்கவே கூடாது)

11.ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

12.வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

13.சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

14.யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும்.

15.பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

16.பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

17.விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய இணைவு, சண்டையிடுதல் கூடாது.

18.ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

19.தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

20.புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

21.தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

22. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

23.வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

24.செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

25. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு அன்றைய தினம் பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

26.பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களை
யும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

27.வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது அரளி பூதானம் கொடுக்க வேண்டும். அரளியோடு தரப்படும் தானம் சிறப்பானது.

28.வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

29.வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

30.செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்களுக்கு செல்வத்தை வாரி கொடுப்பவரே பரம்பொருள் ( சிவபெருமான்) ஒருவரே ஆவார் இவர்களின் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

31.நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

32.அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

33.கடல் நீரை கொஞ்சம் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் உடம்பில் உள்ள எதிர்மறை சக்திகள் அகலும். புத்துணர்ச்சி கிடைக்கும்

34.தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

35.சாமி படங்களில் உள்ள உலர்ந்த பூக்களை வீட்டில் வைக்கக் கூடாது..
காலில் மிதிபடாமல் நீர் நிலைகளில் சேர்ப்பது நல்லது.

36. வீட்டிற்கு வரும் சுமங்கலிகள் அனைவருக்கும் தாம்பூலம் குங்குமம் கொடுத்து அனுப்ப வேண்டும். வயது முதிர்ந்த சுமங்கலிகளிடம் காலில் விழுந்து ஆசி பெற்று குங்குமம் அவர்களை வைக்க சொல்லி பெறவேண்டும். அவர்களுக்கும் தர வேண்டும்.

காலம் காலமாக பலர் செய்து வருகின்ற
முறைகளை இங்கே தரப்பட்டுள்ளது.பண வரவுகள் நிறைய வரும் என்பதை விட தேவையற்ற செலவுகள் ,நஷ்டங்கள் முதலில் குறையும். நம்பிக்கை இல்லாதவர்கள்படி
க்கவேண்டாம்.நம்பிக்கையோடு கடைபிடித்தால் பலனை உணரலாம்.

1.வியாழக்கிழமை குரு ஹோரை காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
3. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
4. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேரனருள் வரும்.
5. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்க
ளுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
6. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது.மதியம்வரை பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
7. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
8. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
9. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
10. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
11. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
12. பசுவின் கோமியத்தில் தினமும் அல்லது வாரம் ஒரு முறையாவது சிறிதளவு (1ஸ்பூன்) குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
13. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
14. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
15. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
16. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சயமாக பணம் வரும்.

20/10/2016

#திருச்செங்கோடு_சுயம்பு_மரகத_லிங்க_மர்மம்:

#திருச்செங்கோடு_வரலாறு_சுருக்கம்..

முன்னொரு காலத்தில் ஆதிசேடனுடன் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என்பதை அறிய இருவரும் போர் செய்தனர். இப்போரினால் உலகில் பேரழிவுகளும், துன்பங்களும் நேரிடுவதை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர். இதன்படி ஆதிசேடன் தன்படங்களால் மேருவின் சிகரத்தின் முடியை அழுத்தி கொள்ளவேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியை தளர்த்த வேண்டும் என்றும் கூறினர். ஆனால் வாயுதேவன் பிடியை தளர்த்த முடியவில்லை இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்த பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிசேடனின் பிடியை தளர்த்த வேண்டினர். ஆதிசேடம் தன் பிடியை கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிசேடன் சிரத்தையும் பெயர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறுண்டு விழுந்தது.

அவற்றில்ஒன்றுதிருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடாகவும்) காட்சியளிக்கிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.

#மலை_கோவில்_சிறப்புகள்(அதிசயங்கள்)

மாதொருபாகனின் திருமேனி முழுவதும் வெண்பாசானம் எனப்படும் அற்புத மூலிகைக் கலவையாகும்.

உலகில் சிவபெருமான் 64 விதமான வடிவங்களை தாங்கியிருக்கிறார் . அவற்றில் 22வது வடிவம் இந்த அர்த்தநாரீஸ்வரமூர்த்தி வடிவமாகும்

அம்மையப்பனின் கருநிலைக் கூடத்தில் விலைமதிப்பற்ற பிருங்கி முனிவர் வழிபட்ட சுயம்பு மரகதலிங்கம், நாக மாணிக்கம் இன்றும் பக்தர்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது.

வேலவனை பாதுகாக்கும் இரு துவாரபாலகர்கள் சிலைகளை உற்று நோக்கினால் அதில் உள்ள கற்சிலை மணிகள் கண்கொள்ளா காட்சியாகும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாகத் தோற்றமளிக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கு முக உருவ வழிபாடு இல்லை.

அம்மையப்பனின் திருவடியின் கீழ் அமைந்துள்ள தேவதீர்த்தம் எப்பொழுதும் வற்றாத தீர்த்தமாகும்.

வேறு எங்கும் காணமுடியாத முக்கால் உடைய முனிவர் பிருங்கி மஹாரிஷியின் திருவுருவமானது அம்மையப்பனின் வலது பாதத்தின் அருகில் காணப்படும்.

மூலவர் செங்கோட்டுவேலவர்
திருச்செங்கோட்டில் எழுந்தருளியுள்ள செங்கோட்டுவேலவன் என்ற முருகப்பெருமானின் திருவுருவம் மிகவும் வித்தியாசமானது. அவர்தம் இடது கையில் சேவலை எடுத்து இடுப்பில் அணைத்தபடியும், அவர்தம் வலது கையில் வேலையும் பிடித்திருப்பது உலகிலேயே வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பாகும்.

அதே போல் முருகபெருமானின் வலது கையில் உள்ள வேலானது பெருமானின் தலையிலிருந்து சற்று உயரமாக இருக்கும். மற்ற அனைத்து முருகபெருமான் சன்னதியிலும் வேலானது சற்று தலையிலிருந்து உயரம் குறைவாகவே இருக்கும். செங்கோட்டுவேலவரின் இந்த அதிசிய வடிவம் உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும்.

#சுயம்பு_மரகத_லிங்கம்_வரலாறு

பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வலம் வந்து வழிபடுவார். அவரது அருகில் இருக்கும் உமாதேவியைக் கண்டு கொள்ளமாட்டார். இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்து சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, ""முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர்,'' என சாபமிட்டாள்.

இதையறிந்த சிவன், "நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை' எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். இடப்பாகத்தில் தான் இதயம் இருக்கிறது. மனைவி என்பவள் இதயத்தில் இருக்க வேண்டியவள் என்பதற்கேற்ப இந்த சம்பவம் நிகழ்ந்தது.

பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்க்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கவுரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார்.(இக்கோயிலில் கேதார கவுரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைபிடிக்கப்படுகிறது).அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவ பெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார். பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார்

இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார். தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்து கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்க்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார் (போகர் பழனியில் புலிப்பாணி முனிவருக்கு இட்டது போலே சில விதிமுறைகள்)மீதி நேரத்தில் சதாரணமாக இந்த லிஙத்தை (மரகதலிங்கம்) வைத்து விடுங்கள் என்றார். பின் அர்த்தநாரீசர் திருவுருவத்தை முக உரு இல்லாமல் வெண்பாசாணம் கொண்டு செய்தார். பின் அங்கு ஒரு ஊற்று நீரையும் ஏற்படுத்தி அந்த நீரை பக்தர்களுக்கு கொடுக்குமாறு செய்தார்.

#சுயம்பு_லிங்கத்தின்_மர்மம்:

யார் மார்கழி மாதத்தில் குளித்து முடித்து மலையின் மீது நடந்தே வந்து இந்த சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்கிறார்களோ அவர்க்கு வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்பது ஐதீகம் அல்ல உண்மை.

#குறிப்பு:குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும் இல்லை என்றால் அதற்க்கு பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து விடுவார்கள். இது அதை விட சற்று பெரியதாக இருக்கும் இது தான் சாதரணமான தினத்தில் வைக்கபடும் லிங்கம். இந்த உண்மை பலரும் மறைத்து உள்ளனர்.அங்குள்ள வம்சாவழிகளுக்கு மட்டுமே தெறிந்த உண்மை. மலையின் பஸ் ரூட்டு வழியாக நடந்தும் செல்லலாம்.

#நாகமாணிக்கம்_மர்மம்

நாகமாணிக்கம் எங்குள்ளது என்று தெரியவில்லை.சுயம்பு மரகத லிங்கத்தின் பால் அபிஷேகம் பார்பது மிகவும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் .

#அமைவிடம்:

திருச்செங்கோடு ஈரோடிலிருந்து 18 கிமீ தொலைவிலும் சேலத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும் நாமக்கலிருந்து 32 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தென் நாடு உடைய சிவனே, போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவா, போற்றி!

15/09/2016

முழு புறநிழல் கிரகணம் (16-செப்-2016-17-செப்-2016)
************************************************************************************

அன்பர்களே...

16 தேதி நள்ளிரவு முழு புறநிழல் கிரகணம் தெரியவுள்ளது.

இது சரியாக இரவு10:23 PM மணியில் ஆரம்பித்து 17 தேதி காலை 2:25 AM மணிவரை (4 மணி நேரம் 3 நிமிடங்கள்) இருக்கும்.

இது புறநிழல் கிரகணம் என்பதால் மற்ற கிரகணம் போல அல்லாமல் சந்திரனின் தெளிவு தன்மை மட்டுமே பாதிக்கப்பட்டு அதன் வெளிச்சம் மட்டுமே மங்கி குறையும்.

இது 20 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு அரிய வானியல் நிகழ்வு.

(சிறப்பு-இந்த கிரகணத்தின் சிறப்பு என்னவென்றால், கிரகண காலத்தில், அதிக கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், கிரகணம் முழுமை அடைந்து விலகும் தருணமாக 12:30 AM - 02-24 AM மணிக்குள், கடன்பட்ட தொகையில் சிறு தொகையை மட்டும் கடன் வாங்கியவர்களிடம் செலுத்தினால் (இது இரவு நேரம் என்பதால் இன்டர்நெட் மூலம் கூட செலுத்தலாம்), கடன்பட்டவர்கள் வெகு விரைவில் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள் என்பது நிதர்சனம்.
இந்த நிகழ்வை பயன்படுத்தி கொண்டு கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள்.
இந்த கிரகணம் நடைபெறுவது சிம்மம் மற்றும் கும்ப ராசிகளில் என்பதாலும் இது நள்ளிரவில் நடைபெறுவதாலும், இரவு 9 மணிக்குள் உணவு எடுத்து கொள்ளுங்கள்.
மேலும் 17 செப் 2016 அன்று சீக்கிரம் எழுந்து குளித்து கோளறு பதிகம் படித்து உங்கள் தின வாழ்க்கையை தொடருங்கள்.)

கிரகணத்தின்போது நமக்கு என்ன நடக்கிறது?

செப் 16, 2016 சந்திரகிரகணம் நிகழ உள்ளது. இரவு 10.24 மணி அளவில் துவங்கி, இரவு 2.24 வரை இது நீடிக்க உள்ளது.

சந்திரகிரகணத்தின் போது என்ன நிகழ்கிறது, அந்த சமயத்தில் ஏன் உணவு உண்ணக் கூடாது விளக்கம் இங்கே…

ஒரு பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரையுள்ள 28 நாட்களில், சந்திரன், முழு நிலவிலிருந்து தேய்ந்து, அமாவசையாகி, மீண்டும் மெதுமெதுவாய் வளர்ந்து பௌர்ணமி நிலவாகும் வரை, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அளவில், வடிவில் இருக்கும். அந்த 28 முகங்களையும் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது, சுமார் மூன்றே மணி நேரத்தில், நாம் பார்த்துவிட முடியும். அதாவது, ஒரு மாத காலத்தில் நடப்பது எல்லாம் சில மணி நேரத்தில் சூட்சுமமாக நடக்கிறது.

சக்திரீதியாகப் பார்த்தால், ஒரு மாத காலத்தை நாம் வெறும் 3 மணி நேரத்தில் கடந்து விடுகிறோம். இந்த அடிப்படையில் தான் பூமி, சந்திர கிரகணத்தை, நிலவின் முழு சுற்று என்று தவறாக எடுத்துக் கொள்கிறது.

கிரகணத்திற்கு முன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாய் இருப்பது, கிரகணத்திற்குப் பின் விஷம்போல் ஆகிவிடும்.

இதன் தாக்கம் உலகின் அனைத்துப் பொருட்களின் மீதும் இருக்கும். அதிலும், தன் இயற்கையான இயல்பில் இருந்து மாறியிருக்கும் பொருட்கள், அதிவிரைவாக சிதைய ஆரம்பித்து விடும். கிரகண நேரத்தில் பழங்களிலும், காய்களிலும் அதிக மாற்றம் இல்லாவிட்டாலும், சமைத்த உணவு கிரகணத்திற்கு முன்பும் பின்பும் மிக வித்தியாசமாக இருக்கிறது. கிரகணத்திற்கு முன் ஊட்டச்சத்து நிறைந்த உணவாய் இருப்பது, கிரகணத்திற்குப் பின் விஷம்போல் ஆகிவிடும்.

விஷம் என்றால்… அந்த உணவை உண்டால் இறந்திடுவோமா? இது அவ்வாறல்ல. விஷம் வெவ்வேறு தீவிரத்தில் வேலை செய்யும். அடிப்படையாகப் பார்த்தால், விஷம் என்பது உங்கள் விழிப்புணர்வைக் குறைப்பது. அது சிறிதளவே உங்கள் விழிப்புணர்வைக் குறைத்தது என்றால், நீங்கள் மந்தமாக இருப்பீர்கள். இன்னும் அதிகமாகக் குறைத்தால், தூக்கத்தில் ஆழ்வீர்கள். அதுவே மொத்தமாய் உங்கள் விழிப்புணர்வை எடுத்துவிட்டது என்றால், நீங்கள் இறந்தே விடுவீர்கள். மந்தம், தூக்கம், மரணம்… இவை அடுத்தடுத்த படிநிலைகள் தானே! அதனால், கிரகணத்தின்போது, மற்ற நாட்களைவிட சமைத்த உணவு சக்தி அளவில், அதிவிரைவாக சிதைவுறும். இது உணவிற்கு மட்டுமல்ல, உங்கள் உடலிற்கும், உலகில் உள்ள ஒவ்வொன்றிற்குமே இது நடக்கிறது. அதிலும், அந்த உணவு உங்கள் உடலில் இருந்தால், இதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும். தோராயமாக 2 மணிநேரம் அந்த உணவு உடலில் இருந்தால், உங்கள் சக்தி கிட்டத்தட்ட 28 நாட்கள் மூப்படைகிறது. அதாவதுb சக்தியளவில் உங்கள் வாழ்வில் 27 நாட்கள் சூட்சுமமாகக் குறைகிறது.

இது வெறும் உணவு பற்றியல்ல. இது உங்களைப் பற்றியும் தான்.
அப்படியென்றால், கிரகணத்தின்போது, பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உண்ணலாமா? கூடாது. அவற்றை உண்டவுடனேயே உங்கள் செரிமானம் செயல்படத் துவங்குவதால், அது பாதி சமைத்த உணவுபோல் ஆகிடும். அதனால், சமைத்த உணவின் நிலைதான் அதற்கும் ஏற்படும். இது வெறும் உணவு பற்றியல்ல. இது உங்களைப் பற்றியும் தான். உங்களின் இயல்பான நிலையை விட்டு நீங்கள் எந்த அளவிற்கு விலகி இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு இதன் தாக்கம் உங்கள் மீது அதிகமாக இருக்கும். உங்கள் இயல்பான நிலையிலேயே நீங்கள் இருந்தால், இந்தச் சக்தி உங்களின் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தமுடியாது.

நிலவின் சுழற்சி மனிதனின் அமைப்பிலே – உடலிலே, மனதிலே, சக்தி நிலையிலே அதிக தாக்கம் செலுத்தக் கூடியது. இது நம் தாய்மார்களின் மாதாந்திர சுழற்சி நிகழ்வதிலேயே வெளிப்படையாகத் தெரிகிறது. நான் குறிப்பிட்டு தாய்மார்கள் என்று சொல்லக் காரணம், அவர்கள் நிலவின் சுழற்சியோடு ஒன்றியிருந்ததால் தான் நாம் பிறந்தோம். அவர்களின் உடல், நிலவின் சுழற்சியோடு ஒன்றி இருந்திருக்காவிட்டால், நாம் பிறந்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படிப்பட்ட சம்பந்தம் நிலவும்போது, இந்த முழு சுழற்சியும், 2 அல்லது 3 மணிநேரத்தில் நடந்து முடியும் சமயத்தில், நம் தாயின் உடல்களில் சிறிதளவு குழப்பம் ஏற்படும். இது ஆண்களின் உடலிலும் நடக்கும், ஏனெனில் அவர்களின் உடலிலும் தாயின் பங்களிப்பு உள்ளது.

உடலில் வெளிப்படையாய் இல்லாவிட்டாலும், வேறு வழிகளில் தாயின் பங்களிப்பு அவர்களுள் இருக்கிறது தானே!
உடல் இப்படிப்பட்ட குழப்பத்தில் உழலும்போது, அதில் உணவின்றி காலியாக வைத்திருப்பது (அ) அதை ஓரளவிற்கு விழிப்புணர்வோடு வைத்திருப்பது நல்லது. விழிப்புணர்வோடு இருப்பதற்கு ஒரு எளிய வழி, உணவருந்தாமல் இருப்பது.

உணவருந்தவில்லை எனில், குறைந்தபட்சம் அந்த ஒன்றைப் பற்றிய கவனமேனும் உங்களுக்கு இருக்கும். வயிறு காலியாக இருந்தால், விழிப்புணர்வோடு இருப்பது எளிதாகவே நடக்கும். அப்போது, உங்கள் உடலை, உங்கள் உடலில் என்ன நடந்துகொண்டு இருக்கிறது என்பதை தெளிவாய், எளிதாய் கவனிக்க முடியும்.

கிரகண முக்கியத்துவம்:
நிலவின் ஒரு சுழற்சி, மனிதனிற்கு எப்படி முக்கியமாகிறது?

மனிதனின் பிறப்பிலும் வாழ்விலும் சூரிய மண்டலத்தின் ஒன்பது கிரகங்களும் தாக்கம் உண்டு செய்கின்றன. அதில் மிக முக்கியம், சூரியன், சந்திரன் மற்றும் இந்த பூமி. ஒரு மனிதனின் சக்திநிலை 1008 முழுநிலவுகளை சந்தித்ததென்றால், அதாவது ஒரு மனிதர் தோராயமாக 84 ஆண்டுகள் வாழ்கிறார் என்றால், அவரது சக்திநிலை ஓரளவிற்கு முதிர்ச்சி அடைகிறது.

அந்நிலையில், எவ்வித ஆன்மீக செயல்முறைகளை கடைபிடிக்காவிட்
டாலும், அவர் எளிதாக மலர்ந்திட முடியும். அவர் முக்தி அடைந்திடுவார் என்று சொல்ல முடியாது, ஆனால் அவர் மீண்டும் பிறப்பெடுக்காமல் இருப்பதற்கு சாத்தியம் நிறையவே இருக்கிறது.

சந்திர கிரகண சமயத்தில் நிலவு வேகமாக இருக்கிறது. அதன் 28 முகங்களையும் சில மணி நேரங்களிலேயே நாம் பார்க்க முடியும். ஒரு மாத காலத்தில் நடப்பது எல்லாம் சில மணி நேரத்தில் சூட்சுமமாக நடக்கிறது. இதனால் நம் வாழ்க்கையும் வேகமாக முன்னோக்கி செல்கிறது. அடிப்படையில் ஆன்மீகம் என்றாலும் அதுதான். நம் வாழ்கையை வேகமாக முன்னெடுத்துச் செல்வது.

நீங்கள் நடந்து பயணம் போகும் போது, வழியில் மாம்பழங்கள் பார்த்தால் பறித்து உண்ணலாம். நெல்லிக்காய் இருந்தால் அவற்றையும் ருசிக்கலாம்.

பயணத்தை இன்ப சுற்றுலாவாக அனுபவிக்கலாம். ஆனால் இதுவே விமானத்தில் பயணம் செய்தால், வழியில் நீங்கள் மாம்பழங்கள் பறிக்கப் போவதில்லை. பத்தாயிரம் ஏக்கர் மாம்பழத் தோட்டம் இருந்தாலும், அவற்றைப் பார்க்கக் கூட மாட்டீர்கள். காரணம், குறிப்பிட்ட உயரத்தில், மிக வேகமாக பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். வேகமாக முன்னே செல்லும்போது, நாம் ஒன்றும் மாம்பழங்களுக்கு எதிராக இல்லை… உயரம், வேகம் காரணமாக நம்மால் அவற்றைப் பறிக்க முடிவதில்லை, அவ்வளவுதான். அதுபோல் இந்த நேரத்தில், நம் வாழ்வும் விரைவாக முன்னோக்கிச் செல்கிறது.

09/08/2016

இன்று ஒரு தகவல்

இன்று சர்வதேச உலக பூர்வ குடிமக்கள் தினம் / International Day of the World’s Indigenous People (ஆகஸ்டு 9)

இன்று நாகசாகி தினம் / Nagasaki Day (ஆகஸ்டு 9)

கோயிலுக்குச் சென்றால் மூன்று தடவை பிரதட்சணம் செய்வதற்கான காரணம் என்ன?

கோயிலுக்கு செல்லும் நாம் சொல், செயல், சிந்தனை ஆகிய மூன்றினாலும் இறைவனிடம் நம்மை ஒப்படைக்க வேண்டும். இந்தக் கருத்தில் அமைந்த ஒரு வழக்கத்தையொட்டி, நாம் ஆலய வழிபாட்டில் மூன்று தடவை பிரதட்சணம் செய்கிறோம்.

02/08/2016

பனிரெண்டாம் அத்தியாயம்

1. மூங்கில் மரங்களுக்கு இலைகள் இல்லாதது யார் குற்றம், இரவில் விழிக்கும் ஆந்தை சூரியனை பார்க்காமல் இருப்பது யார் குற்றம், வானத்தில் வாழும் சாதகப் பறவையின் வாயில் மழைத்துளி விழவில்லை என்றால் யார் குற்றம். யாருக்கு என்ன , எப்பொழுது கிடைக்க வேண்டும் என்று நாம் பிறக்கும் போதே இறைவன் நிர்ணயம் செய்து விடுகிறான்.

2. பிணம் தின்னும் நரியே, எவன் ஒருவன் வாழ்நாளில் தன் கைகளால் தானம் செய்யவில்லையோ, எவன் காதுகள் நல்ல விஷயங்களை கேட்கவில்லையோ, எவன் கால்கள் இறைவனின் திருத்தலங்களுக்கு செல்லவில்லையோ, எவன் ஒருவன் வயிறு தவறான வழியில் நிறைந்துள்ளதோ, அவர்களுடைய பிணங்களை தின்னாதே, உன் தூய்மை குறைந்துவிடும்.

3. கெட்ட மனிதன் நல்ல மனிதனுடன் சேர்ந்து நல்லவனாகிறான். ஆனால் நல்ல மனிதன் கெடுவதில்லை. மரங்களின் பூக்கள் விழுந்து பூமி வாசம் வீசும். பூமியின் வாசம் மலர்களில் வீசாது.

4. நம் உடம்பு அழிந்து விடக்கூடியது. நாம் சேர்க்கும் பணம் நிலை இல்லாதது. ஆதலால் காலம் உள்ள போதே நல்ல காரியங்கள் செய்யுங்கள்.

5. யோசிக்காமல் செலவு செய்பவனும், எப்போதும் சோம்பேறியாக இருப்பவனும், மனைவியின் தேவைகளை உதாசீனம் செய்பவனும், கவனம் இல்லாமல் செயல்கள் செய்பவனும் மிக விரைவில் அழிந்து போவார்கள்.

6. புத்திசாலி மனிதன் உணவில் ஆர்வம் செலுத்த மாட்டான், கல்வி கற்பதில், தர்மம் செய்வதிலும் தான் ஆர்வம் காட்டுவான்.

7. வெட்கப்படாமல் பணம் சேர்பவனும், உணவு உன்பவனும், அறிவை வளர்ப்பவனும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

8. முட்டாள் பெரியவனாக வளர்ந்தாலும் முட்டாளாகவே இருப்பான். எட்டிக்காய் பழுதாலும் இனிக்காது.

01/08/2016

கிறிஸ்த்தவர்களுக்கு பைபிள் தெரிகின்றது, ஏனென்றால் அவர்களது ஆலயத்தில் வரும் வருமானத்தை அவர்களே எடுத்து கொண்டு , அவர்களது பைபிளை பரப்பிகின்றனர்.
முஸ்லீம்களுக்கு குரான் தெரிகின்றது, ஏனென்றால் அவர்களது ஆலயத்தில் வரும் வருமானத்தை அவர்களே எடுத்து கொண்டு , அவர்களது குரானை பரப்பிகின்றனர்.
இந்துக்களின் ஆலயத்தில் வரும் வருமானத்தை அரசே
எடுத்து கொள்கிறது. வருமானத்தை எடுக்கும் அரசு, பகவத்கீதை மற்றும் இந்து மத நூல்களை கற்ப்பிக்க வேண்டும் அல்லது எந்த மதத்தையும் பாராமல் அனைத்து ஆலங்களின் வருமானத்தையும் அரசு எடுக்க வேண்டும் அல்லது அரசு இந்துக்களின் ஆலயத்தை விட்டு வெளியேறவேண்டும்.

01/08/2016

ஒருநாள் என் கனவில் இறைவன் வந்தான் நலமா......??? என்றான்

நறுக்கென்று என்னுள் தோன்றியது ஒரு கேள்வி.....

"காசில்லா பக்தனுக்கு தூரத்திலும்.....

காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!!!

இது என்ன நியாயம்.....??? " என்றேன்.

கலகலவென சிரித்தான் இறைவன்

"தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;

தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;

ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;

எனக்கான இடத்தை,

எனக்கான நேரத்தை,

எனக்கான விழாக்களை,

என்னை வணங்கும் முறையை

எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!

இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான் இறைவன்.....!!!

சரிதானே.......!!!

நம்முடைய வசதிக்கு ஏற்றார்போல் ஒவ்வொன்றும் மாற்றியமைத்துக் கொண்டு.......

குறையை மட்டும் கடவுளின் மேல் சுமத்தினால் கடவுள் எழுந்து வந்து பேசப்போவதில்லை என்ற துணிச்சல் தானே.....!!!

"சிந்தித்து தெளிவோமா"

26/07/2016

*"இறைவன் நம்மை தேடி வருவார்..."*

புதிதாக தன்னிடம் வந்து சேர்ந்த சீடனிடம் குரு கேட்டார்,
“ஆன்மிகத்தின் நோக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?”

புதிய சீடன், “இறைவனை அறிவது தான், அடைவது தான் ஆன்மிகத்தின் நோக்கம்...”

“அப்படியா?”

“என்ன அப்படியா என்று கேட்கிறீர்கள்... அப்படித்தானே இருக்க முடியும்?”

“சரி. இத்தனை நாள் ஆன்மிகத்தில் சாதகம் செய்து வருகிறாயே இறைவனை அறிந்தாயோ?”

“இல்லை. ஆனால் முயன்று கொண்டிருக்கிறேன்.”

“நல்லது... உண்மையிலேயே இறைவனை அறிந்து கொண்டுவிட முடியும் என்று நம்புகிறாயா?”

சீடன் சற்றே யோசித்துவிட்டுச் சொன்னான்.

“நம்புகிறேன்... இருப்பினும், கொஞ்சம் சந்தேகமாகவே இருக்கிறது.”

“எதனால் இந்த சந்தேகம் வருகிறது?”

“பலர் பலவிதமாக இறைவனைப் பற்றிச் சொல்கிறார்கள். மிகவும் ஆராய்ந்து பார்த்தால் தெளிவை விடக் குழப்பமே மிஞ்சுகிறது.”

“நல்லது... எப்போது நீ உள்ளது உள்ளபடி சொன்னாயோ அதுவே நல்லது. சீடனே, இப்போது நான் வேறு விதமாகக் கேட்கிறேன். நீ ஆண்டவனைத் தெரிந்துகொள்ள, அடைய விரும்புகிறாயா...?”

“ஆமாம் குருவே.”

“உன் விருப்பத்தின் காரணமாகத்தான் நீ ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறாய். அப்படித்தானே?”

“ஆமாம் குருவே.”

“அன்புள்ள சீடனே! நீ இறைவனைத் அடைய, ஓர் எளிமையான மாற்று வழியைச் சொல்லித் தருகிறேன்...”

“மிகவும் சந்தோஷம் குருவே. இந்த வழிக்காகத்தான் நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.”

“ஆனால் இந்த வழியில் நீ இறைவனை அடைய முடியாது. ஆனால் இறைவன் உன்னை வந்து அடைவான்.”

“இது குழப்பமாக இருக்கிறதே.”

“ஒரு குழப்பமும் இல்லை...
ஒரு அரசன் இருக்கிறான். பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு அவன் ராஜா. அவன் அருகே நெருங்குவதோ பேசுவதோ அறிவதோ எளிமையான விஷயம் அல்ல. முடியவும் முடியாது.”

“ஆம்.”

“ஆனால் ராஜாவை சந்திக்க வேண்டும் என்கிற பிரஜை, ஓர் அருமையான காரியத்தைச் செய்கிறான்...
அவன் தேசத்தில் உள்ள மக்கள் எல்லோருக்கும் பயன்படும்படியாக உழைக்கிறான். பல அறச் செயல்களைச் செய்கிறான். இந்தச் செய்தி ராஜாவுக்குப் போகிறது.

உடனே ராஜா பிரதிநிதிகளை அனுப்பி தன் அரசவைக்கு அவனை வரவழைக்கிறார். அல்லது அவரே நேரில் அவனைப் பார்க்க வருகிறார். அவனோடு உரையாடுகிறார். பாராட்டுகிறார். பரிசுகள் தருகிறார். இது நடக்கும் இல்லையா?”

“நடக்கும் குருவே.”

“இப்போது ராஜாதான் இறைவன்.
நீதான் அவன். நீ என்ன முயற்சி செய்தாலும் ராஜாவைப் நெருங்குவது கஷ்டம். ஆனால் உன் செயல்கள் பலருக்கும் பயனுடையதாக இருந்தால் அந்த ராஜாவே உன்னைப் பார்க்க வருவார்.

எனவே, இறைவனைப் பார்க்கும் முயற்சியைக் கைவிடு. இறைவன் உன்னைத் தேடி வரும் தகுதியான செயல்களில் ஈடுபடு... இறைவனே உன்னை வந்து அடைவான்... சரிதானே...?”

“மிகவும் சரிதான் குருவே...”

“நல்லது சீடனே, இனி ஆன்மிகம் உனக்குப் கை கூடும். போய் வா...”

சீடன் தெளிவடைந்து குருவிற்கு நன்றி தெரிவித்தான்...

*நம்*
*எண்ணங்களும்...*
*உணர்வுகளும்...*
*சிந்தனைகளும்...*
*சொல்களும்...*
*செயல்களும்...*

*நம்மை சுற்றி உள்ள மனிதர்களுக்கு...*

*நல்லது செய்யுமெனில்...*

*இறைவனை*
*நாம் தேட* *வேண்டியதில்லை...*

*இறைவனே நம்மை தேடி வருவார்..💐

12/07/2016

ஒரே நாளில் 3 விசே‌ஷங்கள்: ஆகஸ்டு 2–ந்தேதி ஆடி அமாவாசை, 18–ம் பெருக்கு, குருபெயர்ச்சி
இந்த வருடம் ஆகஸ்டு 2–ந்தேதி அன்று ஆடி அமாவாசை, 18–ம் பெருக்கு, குருபெயர்ச்சி போன்ற முக்கிய 3 விசேஷங்களும் சேர்ந்து வருகிறது.

ஓவ்வொரு மாதமும் அமாவாசை வருவது இயல்பு. இதேசமயம் ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசையை சிறப்பாக போற்றுகிறார்கள்.

இந்த நாளில் சிவலாயங்களில் பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக சதுரகிரிமலை, ராமேசுவரம், அழகர் கோவில் நூபுரகங்கையில் பக்தர்கள் குவிவார்கள். மேலும் மறைந்த தாய், தந்தை உள்ளிட்ட முன்னோர்களுக்கு தர்பணம் செய்யக் கூடிய நாளாகவும் ஆடி அமாவாசை திகழ்கிறது.

ஆடிப்பெருக்கு என்று சொல்லக்கூடிய ஆடி பதினெட்டாம் பெருக்கு விசே‌ஷத்திலும் விசே‌ஷமாகும். ஆடிப்பட்டம் தேடி விதை என்று பழமொழிக்கு ஏற்ப இந்த நன்நாளில் கிராமங்களில் பெரும்பாலோனோர் தங்களது வீடுகள் முன்பு உள்ள காலி இடங்களில் விதைபோட்டு (பயிர்குழிஅமைத்து) வீட்டு தோட்டம் போடுவார்கள். மேலும் விவசாயத்திற்கு உகந்த நாளாகவும் போற்றப்படுகிறது.

இதே நாளில் சித்திரை திருவிழாவிற்கு வந்த கள்ளழகருக்கு தீர்த்த உற்சவம் நடைபெறுவதும் தனி சிறப்பு. இதோடு சாமியாடிகள் மற்றும் பக்தர்கள் அழகர்கோவிலில் நூபுரகங்கையில் தீர்த்தமாடி வீடுகளுக்கு புனித தீர்த்தம் எடுத்து செல்வார்கள்.

ஆண்டிற்கு ஓருமுறை குருபெயர்ச்சி நடக்கிறது. இந்த நல்ல நாளில் குரு பகவான் பார்வை கிடைத்தால் கோடி நன்மை கிடைக்கும் ஆகவே நம்மில் பலர் தங்களது ராசிக்கு குருபகவான் ஆதிக்கம் வருமா? என்று எதிர்பார்ப்பார்கள்.

குருபெயர்ச்சி நாளில் குருபகவான் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். சிலர் ராசிக்கு ஏற்றவாறு பரிகாரம் அர்ச்சனை செய்து வழிபடுவார்கள். ஆகவே குரு பெயர்ச்சி எப்ப வரும்? என்று நம்மில் பலர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆடி அமாவாசை, பதினெட்டாம் பெருக்கு, குருபெயர்ச்சி ஆகிய விசே‌ஷங்களும் ஓரே நாளில் வருகின்ற ஆகஸ்டு மாதம் 2–ந்தேதி வருகிறது.

இதை நம்மவர்கள் விசே‌ஷத்திலும் விசே‌ஷமாக கருதுகிறார்கள். அதுவும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை அன்று விசே‌ஷங்களும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற ஆகஸ்டு மாதம் 2–ந்தேதி அன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என்பது சந்தேகமில்லை

Address

ரத வீதி , வாசுதேவநல்லூர்
Vasudevanallur
627758

Opening Hours

Monday 6:30am - 8:30pm
Tuesday 6:30am - 8:30pm
Wednesday 6:30am - 8:30pm
Thursday 6:30am - 8:30pm
Friday 6:30am - 8:30pm
Saturday 6:30am - 8:30pm
Sunday 6:30am - 8:30pm

Telephone

9894668746

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share