08/06/2026
பொருள்: திருவண்ணாமலை #புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து வெளியூர், மாவட்ட மற்றும் மாநில பேருந்துகளையும் இயக்கி, பழைய பேருந்து நிலையத்தில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க நடவடிக்கை எடுக்க கோருதல்.
மதிப்பிற்குரிய ஐயா,
திருவண்ணாமலை நகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் அனைத்து நவீன வசதிகளுடனும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போது பல வெளியூர், மாவட்ட மற்றும் மாநில பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்கப்படுவதால் நகரின் மையப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதனால்,
• நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது.
• பயணிகள் பேருந்துகளை கண்டறிவதில் குழப்பம் அடைகின்றனர்.
• பயண நேரம் வீணாகிறது.
• புதிய பேருந்து நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.
• விபத்து அபாயம் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள் அதிகரிக்கின்றன.
எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் நகரின் போக்குவரத்து ஒழுங்கை கருத்தில் கொண்டு,
1. அனைத்து வெளியூர், மாவட்ட மற்றும் மாநில அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்திலிருந்து மட்டும் இயக்கப்பட வேண்டும்.
2. பழைய பேருந்து நிலையம் நகர (Town) பேருந்துகளுக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கையை பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய உத்தரவு வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள,
📢 *BY*
🔅திருவண்ணாமலை🔅 🏛️மாவட்ட 🏛️வளர்ச்சி மற்றும்📖🖋️ திட்டமிடல் கூட்டமைப்பு👬👭
Tiruvannamalai District Development and Planning Organization
“📢மக்கள் குரல்📣 – வளர்ச்சி வழி”💹
“Voice of People, Path to Progress”📣
*🔅FORMELY🔅. 🔅திருவண்ணாமலை🔅 சமூக வலைதளங்களில் 👭நண்பர்கள் 🧑🤝🧑 குழு மற்றும் சமூக ஆர்வலர் 📣