23/11/2019
#தீபாவளி பலகார சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி: நிதி நிறுவன அதிபர்களிடம் பணத்தை பெற்று தர #இந்து_மக்கள்_கட்சியின்_மாநில_தகவல்_தொடர்பாளர் #ஹரிஹரன் தலைமையில் #கோரிக்கை…!!!
பகுதியில் வாசு மற்றும் தினேஷ் ஆகியோர் இணைந்து தீபாவளி பலகார சீட்டு நடத்தினர், இவர்களிடம் கடந்த 4-வருட காலமாக அப்பகுதி மக்கள் வார தவணையில் 100 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் இந்த வருடம் தீபாவளி அன்று
4 கோடி ரூபாய் வரை பணம் வசூலித்து இருவரும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி தலைமறை ஆகி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் #இந்து_மக்கள்_கட்சி_மாநில_தகவல்_தொடர்பாளர் ஹரிஹரன் தலைமையில்பணத்தை பெற்றுத் தர கோரி #திருப்பூர்_மாவட்ட_காவல் துறைகண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.அந்த புகார் மனுவில் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டம், முதலிபாளையம் பகுதியை சேர்ந்த வாசு மற்றும் தினேஷ் ஆகியோர் இணைந்து தீபாவளி பலகார சீட்டு நடத்தினர்.
தீபாவளி பலகார சீட்டு திட்டத்தில், தவணை தவறாமல் தொடர்ந்து வாரங்களுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு, தீபாவளி பண்டிகையின் போது, பித்தளை அல்லது செம்பு பாத்திரமும், தலா, 2 கிலோ இனிப்பு, காரம் மற்றும் கணக்கு முடித்து பணம் வழங்கப்படும் என தெரிவித்தனர். கடந்த ஆண்டில் திருப்பூர், முதலிபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த, 720 பேரிடம், வாரம் 100 முதல் 2000 ரூபாய் வரை தவணை தொகை வசூல் செய்தனர். தீபாவளி அன்று சீட்டு பணம் கொடுக்காமலும், பலகாரம், பட்டாசு உள்ளிட்ட பொருட்களையும் வழங்கவில்லை. சீட்டு நடத்திய இருவரிடம் முறையிட்ட போது இருவரும், பணத்தை வழங்காமல் மிரட்டல் விடுத்தனர். ஆகவே தீபாவளி பலகார சீட்டு நடத்தி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளனர். முதலிபாளையம் பகுதியில் தீபாவளி பலகார சீட்டு நடத்தி, 4 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.