06/08/2025
*வெற்றி.! வெற்றி.!! வெற்றி.!!!*
*போராட்டங்களின் முன்னாலே .!*
*யார் ஆட்டமும் செல்லாது.!!*
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொங்கு நகர் பகுதி கிளைகளின் சார்பில் கொங்கு நகர் பிரதான சாலைகளில் குப்பைகள் கொட்டுவதை கண்டித்து கடந்த வாரத்தில் தட்டி வைக்கப்பட்டது.
கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் சூழலில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று காலை மாநகராட்சி வாகனங்கள் பகுதி பொதுமக்கள் மற்றும் வாலிபர் சங்கத் தோழர்களின் சார்பில் சிறைபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏ கே ஜி நகர் பகுதியில் தினசரி குப்பை சுழற்சி முறையில் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் குப்பை தொட்டிகள் சாலையில் வைக்க படாது என்றும் உறுதி அளித்துள்ளனர்.
*இன்றைய போராட்டத்தின் மூலம் நீண்ட நாட்களாக நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ள ஏகேஜி நகர் பகுதியில் மக்கள் சந்தித்து வந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது.*
போராட்டத்தை முன்னெடுத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்திற்கு அந்த பகுதி மக்களும், வியாபாரிகளும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்தனர்.