25/06/2022
இன்று 25/06/2022 தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சியின் 2 நாள் மாநில தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது.
ஆம் ஆத்மி கட்சி மாநில தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் தமிழ்நாடு ஆம் ஆத்மி கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் அன்புடன் வரவேற்கிறோம்.
"வாய்ப்புகள் கிடைப்பது அரிது. ஒரு சிலர்க்கு மட்டுமே அந்த வாய்ப்பும் கிடைக்கிறது. அதை சரியாக பயன்படுத்தி கொள்வது நமது பொறுப்பாகும்." அந்த வகையில் 2 நாள் தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கு கூட்டத்திற்கு வருகை தந்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட உங்கள் அனைவருக்கும் எங்களது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.
கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆம் கட்சி தலைவர் திரு வசீகரன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் திரு ஜோசப் ராஜா அவர்கள் கூட்டத்தை வழி நடத்தினார். மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு வேல்முருகன், மாநில மகளிரணி செயலாளர் திருமதி ஸ்டெல்லா மேரி, மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் திரு ஆரிப், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் திரு சாரத் லோகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.