18/04/2021
*🌱🌱சேவகன் செயல் குழு🌱🌱*
அறம் திட்டம் செயல்
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை உங்கள் வழியில் நாங்கள் இருக்கிறோம் விவேக் அண்ணா!!!
சுற்றுப்புற சூழல் ஆர்வலர், நடிகர் என்று பன்முகத் திறமை கொண்ட விவேக் அவர்களின், மறைவு ஒரு பேரிழப்பு. அவர் விட்டுச் சென்ற பணிகளை முன்னெடுக்கும் விதமாக இன்று 18-04-2021 திருப்பத்தூர் மாவட்டம் பெரியகரம் கிராமத்தில், சேவகன் செயல் குழு சார்பாக விதை விதைக்கும் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சேவகன்செயல் குழுவின் செயலர் ஜே.பி. மோகன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், திரு. பொன்னுரங்கம் சமூக ஆர்வலர், திரு. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.. மரங்களின் பயன்பாடு, இன்றைய சுற்றுப்புற சூழல், எதிர்கால சந்ததி எப்படி நாம் காப்பாற்றப் போகிறோம்? என்பதை குறித்து பேசியது இன்றைய தலைமுறைக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது.. இந்த நிகழ்வில், பெண் குழந்தைகள், மற்றும் பெண்கள் கலந்துகொண்டு மிக சிறப்பான முறையில் முன்னெடுத்தது மட்டற்ற மகிழ்ச்சி அதோடு இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து விதைக்கும் விதை திருவிழா வெற்றி பெறச் செய்த ஐயா ஏழுமலை அவர்களுக்கு, சேவகன் செயல்குழு நன்றிக்கடன் பட்டிருக்கிறது.. விதைகளை சேகரித்து எங்களுக்கு வழங்கிய அத்தனை நண்பர்களுக்கும்,மிக தொலைவில் இருந்து வந்து எங்களோடு கலந்துகொண்ட தினேஷ், கார்த்திக் மீனா ஸ்வேதா தீபக் வெங்கடேசன், ஹம ஸ்ரீ,சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று சொல்வார்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். நண்பகல் விருந்தை ஏற்பாடு செய்த சுவேதா குடும்பத்திற்கும், சேவகன் செயல் குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.. நிறைவாக சேவகன் செயற்குழு உறுப்பினர், பிரசாந்த் நன்றி உரையாற்றினார். இயற்கையோடு இணைவோம் மனிதனாய் வாழ்வோம் என்ற முழக்கத்தோடு எப்பொழுதும் சமூகப்பணியில் சேவகன் செயல்குழு...
*🌱சேவகன் செயல் குழு🌱*
தலைவர் செந்தமிழ்ச்செல்வன்
ஏழமலை பெரியகரம்