05/09/2026
திருப்பத்தூர் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் இன்று காலை 11.00 மணியளவில் வாணியம்பாடியிலுள்ள மாவட்டக் கழக அலுவகத்தில்.
திருப்பத்தூர் மாவட்ட அவைத்தலைவர்
#ஆர்_எஸ்_ஆனந்தன் தலைமையில்
திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்
அண்ணன் ேவராஜி Ex.MLA அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில்
தலைமைக் கழக பிரதிநிதிகள்
விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளர்
#வே_கௌதமன் அவர்களும்,
தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் #வி_மு_விஜய_கதிரவன் அவர்களும் முன்னால் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ்லதம்பி, Ex.MLA, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ெ_வில்வநாதன்.MLA ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு
22.08.2026 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் கழக நிர்வாக சீரமைப்பு தீர்மானத்தின் படி ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழகம் மறு சீரமைப்பு பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் இன்னாள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
பவள விழா கண்டு நூற்றாண்டை நோக்கி நடைபோடும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் புத்தெழுச்சியைப் பெற - அடுத்தகட்டப் பயணத்தில் வெற்றிகளை அடைய, கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 22.08.2026 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழுவில் முன்மொழியப்பட்ட கீழ்கண்ட தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் : 1
“செயற்குழு தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும் – ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை; அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்”. “சுதந்திரமான – நேர்மையான தேர்தல் மூலமாகப் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் : 2
கிளைக் கழகங்கள்தான் நமது கழகத்தின் வலுவான கட்டமைப்புக்கு ஆணிவேர். கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள். கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் புது ரத்தம் பாய்ச்சிட, இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும் என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் : 3
நகர - பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் அப்பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் : 4
கிராமபுறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடைப்பட்ட அமைப்பு பேரூராட்சிகள். அந்தப் பேரூர்க் கழகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. ஒருவர் பேரூர்க் கழகச் செயலாளராக அதிகபட்சமாக, இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் : 5
இந்தியாவிலேயே வேகமாக நகரமயமாகிவரும் மாநிலம் தமிழ்நாடு. நிர்வாக வசதிக்காக மக்கள்தொகை அடிப்படையில் நகரக் கழகங்களைப் பிரிப்பது இன்றியமையாததாகிறது. அதன் அடிப்படையில், சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். நகரக் கழகங்களின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என்று நிர்ணயிக்கப்படுவதுடன், நகரச் செயலாளராக ஒருவர் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் : 6
மாவட்டக் கழகங்கள் எனும் வலிமைமிக்க அமைப்புகளைத் தாங்கி நிற்கும் தூணாக விளங்குபவை ஒன்றியக் கழகங்கள். அவற்றை மேலும் வலிமை பொருந்திய அமைப்பாக மாற்றிட சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஒன்றியக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயிக்கப்படுவதுடன், ஒருவர் ஒன்றியக் கழகச் செயலாளராக அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் : 7
கழகத்தின் நிர்வாகத்தில் வாய்ப்புகளை விரிவுபடுத்த மாவட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 70 என நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல், மாவட்டக் கழகச் செயலாளராகும் ஒருவர் அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்.
தீர்மானம்: 8
தலைமைக் கழகத்திலிருந்து கழக மறுசீரமைப்புக் குழுவால் அளிக்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டு மாவட்டத்தின் ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - வட்ட - கிளைக் கழக அமைப்புகளை 15 நாட்கள் என்ற காலவரையறைக்குள் உருவாக்க வேண்டும். அதன் பின்னர், தலைமைக் கழகத்தால் அனுப்பப்படும் பிரதிநிதியின் முன்னிலையில், மீண்டும் மாவட்டச் செயற்குழுவைக் கூட்டி, ஒப்புதலைப் பெற்று, இறுதிப் பட்டியலைத் தலைமைக் கழகத்துக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம்: 9
எங்கள் மாவட்டத்தில் ஏற்கனவே கிராம ஊராட்சிகளில் குக்கிராமங்கள் வாரியாக கிழைக்கழகங்கள் அமைந்துள்ளது. தற்போது நடைபெறகூடிய உட்கட்சி தேர்தலில் கிராம ஊராட்சிகளில் உள்ள வார்டு கிளை அடிப்படையில் கிளை அமைப்பு ஏற்படுத்தி தர தலைமை கழகத்தை மாவட்ட கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீர்மானம்: 10
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று காலை 9.00 மணியளவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் திருவுருவ சிலை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வு முடிவடைந்தவுடன் நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் மற்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பெரும் திரளாக கலந்து கொள்வது என்று ஏகமானதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.