02/06/2026
நவீன தமிழகத்தை கட்டமைத்த மாபெரும் தலைவர்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு ஜீன் 3 அன்று பிறந்தநாள்.
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு
நாளை காலை 9.00 மணியளவில்
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி அருகில் இருந்து பேரணியாக சென்று
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு
திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் அண்ணன் க.தேவராஜி Ex.MLA அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
அதுசமயம் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், கிளைக்கழக, வார்டு கழக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் புகழை ஓங்கிட செய்திடுவோம்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழகம், வார்டு கழகங்கள் தோறும் கழக இருவண்ணக்கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கியும், ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கிம், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் போன்ற இடங்களில் அறுசுவை உணவு மற்றும் நலத்திட்டங்களை வழங்கி சிறப்பாக கொண்டாடிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்..
்லதம்பி Ex.MLA.,
ஒன்றிய கழகச் செயலாளர்,
திருப்பத்தூர் மேற்கு ஒன்றிய திமுக.