09/03/2026
நெல்லை, திருநாவுக்கரசர் நற்செயல் மன்றம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா - 07.03.2026 (சனிக்கிழமை)
இறையருளோடும், சமயக்குரவர்கள் நால்வர் திருவருளோடும், விழா நெல்லை, கதீட்ரல் காலனி, "பைம்பொழில் கு.பாலசுப்பிரமணியன் நினைவு நூலகம்" அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இறை வணக்கப்பாடலுடன் விழா இனிதே தொடங்கியது.
மன்றத்தின் நிறுவனர்/தலைவர்,
நூலகத்தின் அமைப்பாளர், திரு.பா.ஹரிஹர கார்த்திகேயன், வரவேற்புரையாற்றினார்.
விழா தலைவர், பேட்டை, ம.தி.தா. இந்துக்கல்லூரியின் முதல்வர், முனைவர் கு.பாலசுப்பிரமணியன், அவர்கள், மாணாக்கர்கள் கல்வியில் சிறந்து தனித்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி, தலைமையுரையாற்றினார்.
விழாவின் சிறப்பு அழைப்பாளர், ம.தி.தா. இந்துக்கல்லூரி, ஓய்வு பெற்ற இயற்பியல் துறை த் தலைவர், பேராசிரியர் பா.ஆதிவராகமூர்த்தி அவர்கள், மன்றத்தின் நற்செயல்களை பாராட்டி, கல்வியின் பயனை எடுத்துரைத்து, கல்வி உதவித் தொகையினை மாணாக்கர்களுக்கு வழங்கி விழா சிறப்புரையாற்றினார்.
மன்றத்தின், துணைத் தலைவர் சீர்மிகு.பா.வேலாயுதம், துணைச் செயலாளர், சீர்மிகு.கைலாஷ் கட்டளை, பொருளாளர் திரு.சீ.கோபி,
மதிதா பள்ளி - தலைமையாசிரியர் திரு.மு.சோமசுந்தரம், (அறிவியல்) பட்டதாரி ஆசிரியை, திருமதி.கு.சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழா நிறைவாக, மன்றத்தின், செயலாளர், திரு.ரா. சிவக்குமார், நன்றியுரையாற்றினார்.
மன்றத்தின், செயற்குழு உறுப்பினர்கள், திரு.கோ.சீத்தாராமன், திரு.நெல்லை கோமான், திரு.பழனிக்குமார், திரு.பேச்சிமுத்து, திருமதி.கவிதா, செல்வி.மோனிக்கா, மதிதா பள்ளி ஆசிரியர், திரு.இரா.மார்கண்டன், ஆசிரியை, திருமதி.சு.மாரியம்மாள்,
செந்தில் ஸ்டூடியோ, திரு.செந்தில், திரு.முருகேசன், திரு.மாரியப்பன், மாணாக்கர்களின் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்வுகளை, பாளை, லொயோலா கான்வென்ட் தொடக்கப்பள்ளி, மாணவி ஹரி.சம்யுக்தா சீதா தொகுத்து வழங்கினார்.
விழாவில் இந்த கல்வியாண்டில் பணிநிறைவு பெற இருக்கும் ஆசிரியை திருமதி.கு.சுப்புலட்சுமி அவர்களை பாராட்டி, பரிசு வழங்கி மகிழ்ந்தனர் மன்றத்தின் நிர்வாகிகள், மாணாக்கர்கள்.
விழா இனிதே நிறைவு பெற்றது.