30/05/2026
அனைவருக்கும் இனிய வைகாசி விசாகத் திருநாள் நல்வாழ்த்துகள்!
வைகாசி விசாகம் என்பது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகும். அதாவது, வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரத்தில் தான் முருகன் அவதரித்ததாக கூறப்படுகிறது.
முருகப்பெருமான் அவதரித்த இந்த புண்ணிய நாளில், வேல் முருகனின் அருள் உங்கள் வாழ்வில் எல்லாத் தீங்குகளையும் நீக்கி, மகிழ்ச்சியும், தைரியமும், நலம் பல பெருகச் செய்யட்டும். வைகாசி விசாகம் என்பது அனைத்து முருகன் கோவில்களிலும் கொண்டாடப்பட்டாலும் திருச்செந்தூரில் மட்டுமே வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வங்க கடல் தாலாட்டும் கடற்கரையோரம் அமைந்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த திருத்தலமாக திருச்செந்தூர் உள்ளது. திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆசியால், உங்கள் வாழ்வில் வரும் சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கட்டும்.