29/09/2024
ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா மறைவுக்கு
இரங்கல்..
மனிதநேய மக்கள் கட்சியின்
தலைவர் பேராசிரியர்
எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை
ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர்ஹசன் நஸ்ருல்லா இஸ்ரேலின்
வான்வழித் தாக்குதலில்
கொல்லப்பட்டிருக்கிறார்.
லெபனானை ஆக்கிரமித்திருந்த
இஸ்ரேலியப் பயங்கரவாதத்தை
எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட ஹிஸ்புல்லா
இயக்கத்தை 32 ஆண்டு காலமாக
வழிநடத்திய சக்திவாய்ந்த
தலைவராக ஹசன் நஸ்ருல்லா
இருந்து வந்துள்ளார்.
தொடர்ச்சியாக இஸ்ரேல் தனது
பயங்கரவாத செயல்பாடுகளை
உலக அளவில் விரிவாக்கிக்
கொண்டே செல்கிறது. இதன் நீட்சியாகப் பல்வேறு உலக தலைவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
உலக நாடுகள் இன்னும் மௌனித்திருப்பது ஏற்புடையது அல்ல.
தொடர்ந்து பாலஸ்தீனத்தின்
காசா மேற்குக் கரை போன்ற
பகுதிகளை பெரும்பாலான உலக நாடுகளின் கண்டனத்தை பொருட்படுத்தாமல் தனது
பயங்கரவாத செயல்களை இஸ்ரேல்விரிவுபடுத்தி வருகிறது.
பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் இஸ்ரேல்
தம் தாய் மண்ணை பறிகொடுத்த பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகக் களம் கண்ட நஸ்ருல்லாவை பயங்கரவாதியாகச் சித்தரித்திருப்பது வேடிக்கையானது.
போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்.
பாலஸ்தீன மக்களின்
விடுதலைக்காக உயிர் நீத்த தியாகிகளின் பட்டியலில் தன்னையும்
இணைத்துக் கொண்டிருக்கிறார்
நஸ்ருல்லா. அவரின் வீர மரணத்திற்கு என் ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி