04/11/2022
அசம்பாவிதம் ஏற்படும் முன் பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க SDPI கட்சி கோரிக்கை.
*******************************************
திருச்சி தெற்கு மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் திடீர் நகர் 36 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை பள்ளியின் குழந்தைகள் விளையாட்டு மைதானம் கழிவறை, சமையலறை, உள்ள பகுதிகளில் செடி கொடிகளால் சூழப்பட்டு மழை காலத்தால் பாம்புகள் மற்றும் விஷச் பூச்சிகளால் குழந்தைகளுக்கு ஆபத்து நேரும் சூழல் இருப்பதால் அப்பகுதியை சுத்தம் செய்து தர பலமுறை பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பணியும் நடைபெறவில்லை.
உடனே அப்பகுதி மக்கள் SDPI- கட்சியின் நிவாகிகளுக்கு கோரிக்கை வைத்தனர்
இன்று உடனடியாக திருவெறும்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் மந்திரி அவர்கள் தலைமையில் பள்ளி மைதானத்தை ஆய்வு செய்தனர்.
பள்ளியின் துணை தலைமை ஆசிரியரை சந்தித்து அதிகாரிகள் பார்வைக்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
இந்த ஆய்வில் சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் ss.ரஹமத்துல்லா,தொகுதி செயலாளர் கைருதீன், காமராஜ் நகர் கிளை செயல்வீரர் இஸ்மாயில் ராஜா, 36வது வார்டு செயலாளர் இஸ்மாயில் பிரதிநிதி முகமது அனஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்
என்றும் மக்கள் பணியில்
SDPI கட்சி
36 வது வார்டு
திருவெறும்பூர் தொகுதி