Master Roast

Master Roast Daily news will be roast by us

04/05/2026

நாளை 11 மணிக்கு எல்லாம் தெளிவான நிலவரம் தெரிந்து விடும். இப்போது சும்மா, எக்ஸிட் போல் முன்வைத்து , விஜய் கட்சிக்கு ஏன் இவ்வளவு அமோக ஆதரவு? உண்மையான ஓட்டு எண்ணிக்கையிலும் , அதுவே எதிரொலித்தால், ஏன் இப்படி நடந்தது... என்பதைப் பற்றிய என்னுடைய பார்வை.

பலரும் விஜய் கட்சிக்கு 10 முதல் 15% ஓட்டு கிடைக்கும் என்றே நினைத்தார்கள், நான் உட்பட. ஆனால் நிலைமை வேறு மாதிரி என்பது புரிய வருகிறது. நாம் நினைத்ததை விட அதிகம் பேர் விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள்.

ஓட்டு சதவீதம் வேறு, எம்எல்ஏ சீட் ஜெய்ப்பது வேறு. சமச்சீராக ஓட்டுக்கள் அனைத்து தொகுதியிலும் விழுந்தால்தான் சில எம்எல்ஏக்களையாவது பெறலாம்.

விஜய் கட்சி எத்தனை எம்எல்ஏக்கள் பெறுகிறார்கள் என்பதை கூட விட்டு விடலாம். ஒருக்கால் தமிழக வெற்றி கழகம், 20 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் வாங்கினாலோ, அல்லது அதற்கு மேல் வாக்குகள் பெற்றாலோ, அல்லது சில பல எம் எல் ஏ சீட்டுக்கள் ஜெயித்தாலோ, அல்லது அதிர்ச்சிகரமான முறையில் ஆட்சியை பிடித்தாலோ அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

கட்சிக்காரர்கள் மட்டும்தான் தொடர்ந்து திமுகவையும் அதிமுகவையும் ஆதரித்து வருகிறார்கள், வருவார்கள்.

பொதுமக்கள் என்று சொல்லப்படுபவர்கள், தொடர்ந்து இரண்டு கட்சிகளையும் கவனித்து வருகிறார்கள். இரண்டு கட்சியின் அரசியல்வாதிகளும் தொடர்ந்து கொள்ளையடித்து பெரும் பணக்காரர்களாக வலம் வருவதை எரிச்சலுடனும் கோபத்துடனும் கவனித்து வந்திருக்கிறார்கள்.

அரசு திட்டங்களின் மூலம் பணம் கொடுத்தாலும், ஓட்டுக்கு பணம் பெற்றாலும்,

இதெல்லாம் எங்க காசுதான் என்ற எண்ணம்தான் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது.

"எங்க கிட்ட புடுங்கி தானே திரும்ப கொடுக்கிறார்கள் " இந்த டயலாக்கை பலதரப்பட்ட பொதுமக்களிடம் , நான் நேரில் கேட்டிருக்கிறேன்.

அளவுக்கு அதிகமான ஊழல், பெரும் கொள்ளை, அரசியல்வாதிகள் பகட்டாக வாழ்வது (எந்த உழைப்பையும் போடாமல்) இவையெல்லாம் பொதுமக்களை எரிச்சல் ஊட்டும் விஷயங்கள்.

அதற்காக பொதுமக்கள் மிக மிக நல்லவர்கள் , அறம் சார்ந்து வாழ்பவர்கள் என்று அர்த்தமல்ல.

இன்னொருவரை பார்த்து பொறாமைப்படுபவர்கள். நாம இவ்வளவு கஷ்டப்படுகிறோம், இவனுங்க அரசியல்வாதியாக இருந்து கொண்டு , இவ்வளவு கொள்ள அடிச்சு, ஜாலியா இருக்கானுங்க என்ற பொறாமை தான் காரணம்.

அதனால்தான் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எந்த குற்ற உணர்வு இல்லாமல் பெற்றுக் கொள்கிறார்கள். இதில் ஏழை பணக்காரன் என்ற எந்த வித்தியாசமும் இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு கூட, ஊழல் மற்றும் கொள்ளைகளை கொஞ்சம் மறைமுகமாக செய்வார்கள். கொஞ்சம் கூச்சமிருக்கும். வெட்கம் இருக்கும்.

இப்போது அதெல்லாம் சுத்தமாக போய்விட்டது.

பச்சை பச்சையாக மக்களுக்கு தெரிவது போலவே செய்கிறார்கள். யாரேனும் அதில் மாட்டிக் கொண்டால் கூட, கட்சி அவருக்கு துணை நிற்கிறது. கூட்டுக் கொள்ளையில் கூட்டாளியை எப்படி விட்டுக் கொடுப்பது? கூட்டுக் கொள்ளை எதிக்ஸ் ஒழுங்காக வேலை செய்தால் தானே கூட்டுக் கொள்ளை சிஸ்டம் நிலை நிற்கும்.

நான் ஒரு குக்கிராமத்தில் இருந்தபோது, ஒரு கட்சி ஓட்டு சேகரிக்க வந்தது. வேட்பாளர் மிகப்பெரிய பார்ச்சூனர் காரில் வந்தார். அவருக்குப் பின்னால் 20 கார்கள். பெரும்பாலும் விலை உயர்ந்த கார்கள். ஒரே ஹோதாவாக, ஒரு மாபியா கேங்க் கிராமத்திற்குள் நுழைவது போல இருந்தது.

இதையெல்லாம் பார்க்கும் பொதுமக்களுக்கு வயிறு எரியாதா?

ஒரு எம்எல்ஏ வேட்பாளருக்கு உதவுவதற்காக வரும் அல்ல கைகளுக்கே இவ்வளவு பெரிய கார்கள் என்றால்....என்று பொதுமக்கள் யோசிக்க மாட்டார்களா?

இதைப் போன்ற அல்ல கைகள் எல்லாம் எந்த வேலைக்கும் போவதில்லை... எந்த நேர்மையான தொழிலும் செய்வதில்லை.

ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கு பாடாய்படும் பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் கோடிக்கணக்கில் சுருட்டுபவர்களை பார்த்தால் வயிறு எரியாதா?

என்னைப் பொறுத்தவரை, விஜய்க்கு நாம் நினைப்பதை விட அதிக வாக்குகள் விழுந்தால், அது விஜய் க்காக விழுந்த வாக்குகள் அல்ல. அரசியல்வாதிகளும், அவரை சார்ந்தவர்களும் எந்த உழைப்பும் இல்லாமல், கோடிக்கணக்கில் சுருட்டி கன்னா பின்னா என சொத்து சேர்த்து , கூத்தடிப்பதை பார்த்த வயிற்றெரிச்சலில் விழுந்த ஓட்டுகள் தான்.

இன்னொன்று, கட்சித் தலைமைகள் பகட்டாக வாழ்வது, மற்றும் அவர்களது குடும்ப சொந்தங்கள் செல்வ செழிப்பில் மிதப்பது , இவற்றையெல்லாம் பார்த்து, அவர்கள் ஆக்சுவலாக கொள்ளையடித்து சேர்த்து வைத்திருப்பதை விட, பொதுமக்கள் அதீதமாக கற்பனை செய்தும் கொள்கிறார்கள்.

மற்ற மாநிலத்தை ஒப்பிட, கொள்கை சார்ந்து, அலசி ஆராய்ந்து ஓட்டளிப்பதில், தமிழக வாக்காளர்கள் எப்போதும் முன்னணி தான். ஆனாலும் கடந்த பல வருடங்களாக , இரண்டு கட்சிகளும் , அவற்றைச் சார்ந்த பலரும் வெளிப்படையாக வெட்கமே இல்லாமல் ஊழல் செய்து சொத்து சேர்த்ததை பார்த்து, வெறுப்பின் உச்சத்திற்கு போய் , கடுப்பாகி, ஏதேனும் ஒரு மாற்றம் செய்வோம் என விஜய் கட்சிக்கு ஓட்டு போட்டதாக தான் இதை நான் எடுத்துக் கொள்கிறேன்.

அதாவது கொள்கையை அடகு வைத்து அல்லது பூச்சாண்டி காட்டி ஊழல் செய்வதை பொதுமக்கள் ஏற்கவில்லை என எடுத்துக் கொள்ளலாம்.

தனிப்பட்ட முறையில் நான் விஜய் கட்சிக்கு பொதுமக்கள் நிறைய அளவில் ஓட்டு போட்டு இருப்பின் , இதை ஒரு தீர்வாக எடுத்துக் கொள்ள வில்லை.

ஆனால் இரண்டு கட்சிகளும், இதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக் கொள்ளலாம்.

மோகு
அரசியல் விமர்சகர்
7904061385

02/05/2026

ஒரு ஆண் கோபமாக இருக்கும்போது உங்களிடம் எப்படி நடந்துகொள்கிறான் என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள்... ஏனென்றால், அப்போதுதான் அவனது முகமூடி கழன்று விழும்.

எல்லாம் அமைதியாக இருக்கும்போது அல்ல, அவன் நல்ல மனநிலையில் இருக்கும்போது அல்ல, மாறாக உணர்ச்சிகள் அதிகமாகி, பொறுமை குறையும்போதுதான் உண்மை வெளிப்படும்.

ஒரு ஆண் முரண்பாடுகளைக் கையாளும் விதம், அவன் உங்களுக்கு வழங்கும் அன்பின் தன்மையைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அந்த கோபம் உங்களுக்குச் சொல்லிவிடும்.

ஒரு ஆண் உண்மையிலேயே அக்கறை காட்டும்போது, அவனது கோபத்திலும்கூட, அவன் தாண்ட மறுக்கும் ஒரு எல்லை இருக்கும். அவன் உங்களை அவமானப்படுத்த மாட்டான். அவன் உங்களை அவதூறாகப் பேசவோ, இழிவுபடுத்தவோ, அல்லது உங்கள் பலவீனங்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தவோ மாட்டான்.

ஒரு வாதத்தில் வெற்றி பெறுவதற்காக மட்டும் அவன் உங்கள் மன உறுதியை உடைக்க மாட்டான். அவன் வருத்தமாக இருக்கலாம்... ஆனால் அவனது குரலில், உடல் மொழியில், அவனது நிதானத்தில் அன்பு தொடர்ந்து இருக்கும்.

ஆனால் உங்களை உண்மையாக மதிக்காத ஒரு ஆணுக்கோ? கோபம் அவனது கொடூரமான செயல்களுக்கான ஒரு காரணமாகிவிடும். அவன் "சொல்ல விரும்பாத" விஷயங்களைச் சொல்வான், ஆனால் அவை ஏற்கனவே அவனது நாவின் நுனியில் இருந்தன. அவன் உங்களை ஆழமாகப் புண்படுத்தும் விதத்தில் நடந்துகொள்வான், பிறகு "நான் கோபமாக இருந்தேன்" என்று சொன்னால் எல்லாம் சரியாகிவிடும் என்பது போல மன்னிப்புக் கேட்பான். அது காதல் அல்ல. அது தற்காலிக வருத்தத்தின் போர்வையில் போர்த்தப்பட்ட ஒரு உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல்.

ஒரு கோபமான தருணத்தில் வெளிப்பட்டது என்பதற்காக, நச்சுத்தன்மையுள்ள நடத்தையை நியாயப்படுத்துவதை நிறுத்துங்கள். "அவன் மன வருத்தத்தில் இருந்தான்" என்று கூறி அதைத் ஏற்றுக்கொள்வதை நிறுத்துங்கள். இல்லை. உண்மை என்னவென்றால், கோபம் அவமரியாதையை உருவாக்குவதில்லை..... அது அதை வெளிப்படுத்துகிறது. அவன் கோபமாக இருக்கும்போது அவமரியாதை எளிதாக வெளிப்பட்டால், அது எப்போதுமே அவனிடம் இருந்திருக்கும்... ஒரு தூண்டுதலுக்காகக் காத்திருந்தது என்று அர்த்தம்.

உங்களை நேசிக்கும் ஒரு ஆண், தான் காயப்பட்டிருக்கும்போதும் கூட, ஒரு கணம் நிறுத்தி, உரையாடி, உங்களைப் பாதுகாக்கக் கற்றுக்கொள்வான். ஏனென்றால், உண்மையான காதல், விஷயங்கள் கடினமாகும்போது விஷமாக மாறுவதில்லை.... அது மென்மையாகவும், மெதுவாகவும், அதிக நோக்கத்துடனும் மாறுகிறது. காதல் சீறிப் பாய்வதில்லை. காதல், மோதல் தருணங்களில் உங்கள் இதயத்தைக் காயப்படுத்துவதில்லை.

எனவே, அந்த அபாய அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள்.

தற்காலிகக் கோபத்தை ஒரு நிரந்தரப் பழக்கமாக மாற விடாதீர்கள். "அவன் அதை வேண்டுமென்று செய்யவில்லை" என்பதை நீங்கள் அவனுடன் தங்குவதற்கான காரணமாக ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

ஏனென்றால், ஒரு மனிதன் தனது மிக மோசமான தருணங்களில் நடந்துகொள்ளும் விதம், அவன் உண்மையில் யார் என்பதைத் தெளிவாகக் காட்டிவிடும். அதுமட்டுமல்ல, ஒரு மோசமான மனநிலையின் பெயரால் உன்னைச் சிதைக்காத ஒருவனே உனக்குத் தகுதியானவன்.

புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.



நீங்கள் எப்போதாவது நம்பிக்கையற்றவராக உணர்ந்தால், மனநல ஆலோசனைகள், உறவுகளின் ஆலோசனைகளுக்கு தயவுசெய்து என்னை தொடர்பு கொள்ளவும்

MOHANKUMAR
RELATIONSHIP CONSULTANT
எனது உதவி எண் 7904061385

02/05/2026

இன்றைய எனது முதல் அரசியல் பதிவு. இந்த பதிவானது தளபதி விஜய்க்காக ஆதரவான பதிவு கிடையாது ஆனால் இன்றைய பல கட்சிகள் நமது மக்களை எந்த மாதிரி நினைத்து வைத்துள்ளனர் அப்படி அப்படிங்கறது தெளிவாக விளக்கி காட்டும் ஒரு பதிவு. இன்றைய திமுக அதிமுக தலைவர்கள் விஜய் என்ற ஒரு ஆளுமை அரசியலுக்கு வருவதை தொடர்ந்து அவர்களது ஒரு குறுகிய மனப்பான்மையை மக்களிடம் விதைத்து வருகின்றனர் தாங்கள் மட்டும்தான் ஆள வேண்டும் நாம் இருவரில் யாரேனும் ஒருவர் மட்டும்தான் ஆள வேண்டும் மீதி ஒருவர் விட்டுக் கொடுத்துப் போக வேண்டும் என்பதை மட்டுமே இந்த கட்சிகள் மக்களிடம் கூற வருகின்றனர் இடையே விஜயகாந்த் என்ற மிகப்பெரிய ஆளுமை எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வரை வந்து பிறகு மீடியாக்களால் சீர்குலைந்து அவரது உயிர் போன பிறகு அவரை நல்லவர் வல்லவர் என்று ஆதரவளித்து வருகின்றனர்.

ஆனால் இன்று விஜய் என்ற ஒரு ஆளுமை கட்சி ஆரம்பித்தவுடன் முதலில் அவர் நிலைக்க மாட்டார் அவருக்கு வேட்பாளர்கள் சீட்டு இருக்காது பூர்த்தி ஏஜென்ட் ஆள் இருக்காது அடிமட்ட கட்டமைப்பு கிடையாது என்று பலரும் கூறி வந்தனர் ஆனால் இன்று தளபதி விஜய் அவர்கள் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தையும் உறுதிப்படுத்தி தெளிவு படுத்தி இது அத்தனையையும் தனது பொறுமையாலும் நிதானத்தாலும் கடைபிடித்து இதுவரை கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார் மே நான்கு அன்று தளபதி விஜய் ஆளுமை பற்றிய மக்கள் வெளிப்பாடு மக்கள் செல்வாக்கு அன்றுதான் தெரிய வரும் ஆனால் அதற்குள் இந்த கட்சிகள் ஒரே ஒரு கரூர் சம்பவத்தை வைத்து மட்டுமே அவரை எந்த அளவுக்கு எண்ணி நையாண்டி செய்து வருகின்றனர் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது ஏனென்றால் கரூர் சம்பவத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் சட்டசபையில் விஜய் பற்றி கூறினார் அது மட்டும் இன்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொடி பறக்கிறதா பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றெல்லாம் கூறி வந்தார் ஏனென்றால் விஜய் தன்னுடன் கூட்டணிக்கு வருவார் என்று ஆனால் இந்த விஜயோ எதற்கும் மனம் இறங்காமல் எதனையும் கண்டு பதட்டப்படாமல் நிதானமாக பொறுமையாக மக்கள் ஆதரவை பெற்று வந்தார் அதுவே மற்ற கட்சிகள் அனைவருக்கும் கலக்கத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது அதுமட்டுமன்றி இந்த எக்ஸிட் போல் என்பது பல ஊடகங்கள் திமுகவிற்கும் மற்ற கட்சிகளுக்கும் சார்பு நிலை எடுத்து வரும் நிலையில் இந்தியா டுடே ஆக்சிஸ் நிறுவனத்தோடு இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் 98 முதல் 120 சீட்டு விஜய்க்கு கிடைக்கும் என்றவுடன் அது எப்படி கிடைக்கும் அதற்கு சாத்தியம் இல்லை என்று தன் கட்சிக்கு கிடைத்த ஆதரவை விட விஜய்க்கு ஏன் கிடைத்தது என்று கடித்து குதறி கொண்டு வருகின்றனர் இந்த திமுக மற்றும் அதிமுகவினர்கள் ஏன் இந்த கொலைவெறி ஏன் இந்த ரத்த வெறி ஏன் விஜய் வந்தால் உங்களால் கொள்ளையடிக்க முடியாதா உங்களால் எந்த ஊழல் செய்ய முடியாதா என்ற ஒரே காரணமா திமுக அதிமுக இருந்தால் மட்டும் தான் உங்களால் கொள்ளையடித்து சம்பாதிக்க முடியுமா ஊழல் பண்ணி சொத்து சேர்க்க முடியுமா அதற்காகத்தான் இந்த இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவளிக்கிறீர்களா பெண்கள் பாதுகாப்பு அப்படி என்பது அதிமுகவிற்கும் சரி திமுகவிற்கும் சரி இல்லையே இல்லை என்பது தான் உண்மை ஏனென்றால் அதிமுகவிற்கோ பொள்ளாச்சி சம்பவம் திமுகவிற்கோ பொழுதுக்கும் ஒரு சம்பவம் இப்படி இருக்கும் போது பெண்கள் பாதுகாப்பு எப்படி இருக்கும் இதை தீர்த்து வைக்க தான் இதற்கான முடிவை காணத்தான் விஜய் அவர்கள் தேர்தல் அறிக்கையில் திட்டங்களை விரிவாக கூறியுள்ளார் ஆகவே புதிதாக வரும் ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து தான் பார்ப்போமே அவர் சரியாக செயல்படவில்லை என்றால் மீண்டும் திமுக அதிமுக அவர்கள் ஓட்டு போடலாமே அதற்குள் எதற்கு இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனம் விஜய்க்கு ஓட்டு போட்டதால் தற்குறிகள் அப்படி என்றால் இதுநாள் வரை அந்த தற்குறிகளின் ஓட்டுகளில் தானே நீங்களும் என்று உள்ளீர்கள் இது ஏன் உங்களுக்கு தெரியவில்லையா

29/04/2026

ஒரே ஆட்டில் 20 திருமணங்களை கண்ட நிறுவனம் நமது மாங்கல்ய மாலை திருமண தகவல் மையம் அனைத்து இனத்தவர் மற்றும் அனைத்து மதத்தினருக்கும் பெண்களுக்கான பிரத்தியேக சிறப்பு திருமண தகவல் மையம்

21/04/2026

அது ஏதோ ஒன்னு சொல்லுறாங்களே விஜய்க்கு நிர்வாக திறமை இல்லை அப்படின்னு அது இல்ல விஷயம் 1992ல் அறிமுகமாகி அப்ப இருந்த ரஜினி கமல் விஜயகாந்த் சரத்குமார் எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு தன்னுடைய நடிப்பு திறமையை மேம்படுத்திக்கிட்டு தன் கிட்ட என்ன இருக்குதோ அதுல மக்களுக்கு என்ன பிடிக்குமோ அது தெரிஞ்சுகிட்டு மக்களோட உணர்வுகளை புரிஞ்சுகிட்டு அவங்களுக்கு புடிச்ச மாதிரி படங்களை செலக்ட் பண்ணி அதுல வந்து வசூல் காட்டி ஒரு வசூல் சக்கரவர்த்தியா இன்னைக்கு விஜய் தமிழ் சினிமால ஒரு பெரிய ஆளுமையாய் இருக்கிறார் என்றால் அவரைப் பத்தி என்னடா நினைக்கிறீங்க ஆளுமை இல்லாமல் ஒரு மனுஷன் ஒரு துறையில் நம்பர் ஒன் பொசிஷன்ல இருக்க முடியுமானு கேட்டா அவருக்கு நிர்வாக திறமை இல்லை அப்படின்னு சொல்றீங்க திரைத்துறையிலேயே நம்பர் ஒன் இடத்துக்கு வந்தவரால் நம்ம தமிழ்நாட்டை ஒட்டு மொத்த இந்தியாவிலும் நம்பர் ஒன் மாநிலமா கொண்டு வர முடியாதா அவரால கண்டிப்பா முடியும் விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள். விஜய் 2026 தமிழக முதலமைச்சராக வரவேண்டும்

Address

Bishop Cross Road
Tiruchirappalli
620017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Master Roast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share