21/05/2021
#என்ன_கொடுமை_இது
பணப்புழக்கம்
ஏன் இங்கு இல்லை .
இந்தியாவில் குறிப்பாக
தமிழ்நாட்டில் பணப்புழக்கம் மிகப்
பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது இதற்குக் காரணம் ஏன் எது ?
தமிழர்கள் உடல் உழைப்பை விரும்புவதில்லை ....
அதோடு சாராயம் , மது
மற்றும் சோம்பேறித்தனம் லேசான
வேலையைச் செய்ய , உழைக்காமல்
தினமும் இரு நூரு ரூபாய் கிடைத்தால்
போதும் என்ற மன நிலை .
அரசியல் , கட்டப் பஞ்சாயத்து
அல்லது போராட்டத்தில் மூன்று
மணி நேரத்தில் சம்பாத்தியம் ,
அரசியல்வாதிகளைப்
போல் கொள்ளையடித்து ஏமாற்றி
பொய் சொல்லி வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள் .
நான் கடந்த இருபத்தைந்து
ஆண்டுகளாக பில்டிங் கட்டுதல் ,
ரோடு மற்றும் பாலங்கள் கட்டுதல் ,
கார்மெண்ட்ஸ் நிறுவனம்
நடத்தினேன் .
அதில் பல ஆயிரம் பேர்களுக்கு
வேலை கொடுத்து வேலை வாங்கி உள்ளேன் .
வண்டி வாகனங்கள் இதை
யெல்லாம் வைத்து வேலை வாங்கி அதில் வேலை செய்த தமிழர்கள் இப்பொழுது வேலை செய்வது இல்லை ,
முழுவதும் வட நாட்டு
மக்களுக்குத்தான் வேலை .
தமிழர்கள் இப்பொழுது கிடைப்பது
இல்லை .
அதனால் வெளி
மாநிலத்தவர்கள் இங்கே
உடல் உழைப்பு தந்து தமது
பொருளாதாரத்தை வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .....
விரைவில் தமிழனும் பிச்சை
எடுப்பான் அன்று புரியும் .
ஹார்டுவேர்ஸ் , பெயின்டர்கள் கார்பெண்டர் ,பெரிய ஆள் ஹெல்பர்கள் , பிட்டர்கள், டெயிலர்கள் , மேஸ்திரிகள்.
முக்கியத் தொழிலாக
ஹோட்டல்கள் , ஹோட்டல்களில்
வேலை செய்பவர் மாஸ்டர்களே
இப்பொழுது வட நாட்டவர் என்றால்
பார்த்துக் கொள்ளுங்கள் .
எல்லா தரப்பட்ட உடல்
உழைப்பு தரும் ஆட்கள் ....
தாம்பரத்தில் முக்கிய
ஹோட்டலில் தோசை மாஸ்டர் வட
நாட்டவர் .
அவரிடம் பேசினோம்
அவர் சொன்ன விவரங்களால்
தலை கிறுகிறுத்தது ,
மாதம் மாதம் 10.000 (பத்தாயிரம்)
தன் ஊருக்கு அனுப்புகிறேன் என்று அந்த வடமாநிலத்துத் தொழிலாளி சொன்னார் . அப்படியா என்று கேட்டு விட்டு வந்து விட்டேன் .
வந்தபின்தான்
யோசித்தேன் .
இந்த ஒருவர் மாதம் 10.000
அனுப்புகிறார்
இப்படி 10.பேர் அனுப்பினால்
ஒரு இலட்சம்
நூறுபேர் அனுப்பினால் ஒரு கோடி
ஆயிரம் பேர் அனுப்பினால்
பத்துகோடி
ஒரு இலட்சம் பேர் அனுப்பினால்
ஆயிரம் கோடி
இதயம் அய்யய்யோ என்று அதிர்ச்சியடைந்தது .
முதலில் இவா்களின் கூட்டம்
தமிழகத்தில் எவ்வளவு இருக்கிறது
என்று குத்து மதிப்பாகக் கணக்கு
எடுப்போம் என பலரிடம் கேட்டேன் .
தொழில் நகரங்களான பெரும்
நகரங்களில் மாவட்ட அளவில்
உதாரணத்திற்கு ...
திருப்பூரில் மூனு இலட்சம் பேரும்
கோவையில் ஏழு இலட்சம் பேரும் சென்னையில் இருபது இலட்சம்
பேரும் இருப்பார்கள் எனச்
சொன்னார்கள் .
அப்படியென்றால்
சேலம் , ஈரோடு போன்ற இன்ன
பிற மாவட்டங்களில் எவ்வளவோ ,
தெரியாது என்றார்கள் . அதிர்ச்சியில்
உறைந்துபோனேன் நான் .
சென்னை , கோவை , திருப்பூர்
அளவில் மட்டும் கணக்கில் எடுத்துக்
கொள்வோம் என முடிவெடுத்து ,
கணக்குப் பார்த்தேன் .
மொத்தம் முப்பது இலட்சம் பேர்
ஒருவர் மாதம் மாதம் பத்தாயிரம்
என்றால் 30 இலட்சம் பேருக்குக்
கணக்குப் போட்டேன் .
மூவாயிரம்கோடி எனக்
காட்டி விட்டு கால்குலேட்டரே தன்னை காலாவதியாக்கிக் கொண்டது .
மாதம் மாதம் 3.000 கோடி
என்றால் வருடத்திற்கு 36,000 கோடி
இவை அனைத்தும் தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்தால் அந்த சிறு
பணம் புழக்கம் கொண்டு ,
தமிழக மக்களையும் சிறு குறு
பெரும் வியாபாரிகளை வளமாக வாழ வைக்க வேண்டிய இந்தப் பணம் வடமாநிலங்களில் புழங்கிக் கொண்டுருக்கிறது .
அங்கே இருக்கும் மக்களையும்
சிறு குறு பெரும் வியாபாரிகளையும்
வாழ வைத்துக் கொண்டிருக்கிறது .
இது வெறும் தமிழகத்தின்
மூன்று மாவட்டத்திற்கான கணக்கு
மட்டுமே .
மீதம் இருக்கும் 36 மாவட்டத்திலும். வடமாநிலத் தொழிலாளிகளைக் குத்து மதிப்பாய் கணக்கெடுத்து கூட்டிப் பார்த்தால் , தலை சுற்றிதி மயக்கம் வந்து மூர்ச்சையாகி இறந்தாலும் இறந்து விடுவோம் .
இது வட மாநிலத் தொழிலாளர்கள்
கணக்கு .
இன்னும் வடமாநில சுய
தொழில் செய்யும் வியாபாரிகள் , முதலாளிகள் போன்றோர்களைக் கனக்கெடுத்து ,
அவர்கள் ஈட்டும் வருமானங்களைக்
கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்யய்யோ
நினைத்து பார்க்க முடியவில்லை .
இன்னொரு பிரச்னை , பணப் புழக்கம்
இல்லாமல் இருக்கும் காரணம் ,
கைத்தொழில் .
எல்லா வகையான சிறு பொருட்கள்
சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது .
அதனால் இலட்சக்கணக்கான
பொருட்கள் அதாவது உளி , சுத்தியல்
ஆரம்பித்து மருத்துவர் போடும் ஊசி
வரை.
அப்போது ஏற்கெனவே
இங்கு இருந்த இந்த தொழில் அது
ஒரு தனிக் கதை.
சத்தமின்றி யுத்தமின்றி தமிழன் சாராயத்தாலும் உழைப்பில்லாமலும்
இந்த மாபெரும் பொருளாதாரப்
போராட்டத்தில் தமிழன் அழிக்கப் பட்டுக்
கொண்டு இருக்கிறான் என்பதை மட்டும்
உணர முடிகிறது .
இதை தமிழன் எப்போது
உணர்வது ...?
மிகவும் கொடுமையானது
ஆனால் நம்பி ஆகவேண்டிய உண்மை விவரம் .
பயிர்த் தொழில் இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக வட நாட்டவர் கைகளில் சென்று கொண்டுள்ளது
களை எடுத்தல் , அறுப்பு அறுத்தல் , மருந்து அடித்தல் என வர ஆரம்பித்து விட்டார்கள் . இனி என்னாகும் யோசியுங்கள் .
பட்டாலும் கெட்டாலும் வருந்தாத
திருந்தாத தமிழன் இருக்கும்வரை
தமிழனுக்கு எதிரான இந்தப்
பொருளாதாரப் போராட்டம்
தொடர்ந்து ,
நாம் பிச்சைக்காரர்கள் மாதிரி வாழ வேண்டும் .
தமிழா இதையெல்லாம் நீ உணர்ந்து விழிக்கும்போது உன் பொருளாதார வளம் வறண்டு இருக்கும் அல்லது மாண்டு இருக்கும் ?
வாழ்க தமிழ் ;
வாழ்க தமிழ்நாடு ;
வாழ்க தமிழ் மக்கள் ;
என்று கூறி கொண்டு நம்மை
அழிக்கும் கூட்டம் எப்போது ஒழியும் ?
எழுதப்பட்ட கருத்தில்
உண்மைகள் உள்ளன .
திருந்தாத ஜென்மங்கள்
இருந்தென்ன இலாபம் ?