DYFI Tindivanam

DYFI Tindivanam Democratic Youth Federation of India (DYFI) is a political organisation in India.

பொய் வழக்கில் சட்ட விரோதமாக 13 மணி நேரம் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்ட DYFI நிர்வாகி திருமுருகன் நீண்ட போராட்டத்...
29/01/2025

பொய் வழக்கில் சட்ட விரோதமாக 13 மணி நேரம் காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்ட DYFI நிர்வாகி திருமுருகன் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

திண்டிவனம் வட்டம் விட்டாலாபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் செய்யபட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி வட்டாட்சியரிடம் மனு கொடுத்த வாலிபர் சங்க நிர்வாகி திருமுருகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட DYFI நிர்வாகி திருமுருகன் மீதே பொய் வழக்கு போட்டு அதிகாலை 5 மணியளவில் சட்டவிரோதமாக கைதுசெய்யப்பட்டு 13 மணி நேரமாக ரோசனை காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டார்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு வாலிபர் சங்க நிர்வாகி திருமுருகன் காவல் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டார்.
வாலிபர் சங்க நிர்வாகி திருமுருகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய விட்டாலாபுரம் கிராமத்தை ஜெயபால் மீது வழக்கு பதிந்து கைது.

திண்டிவனம் வட்டம் விட்டாலாபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்து, நீரோடையை தூர்த்து முன்னாள் ஊ...
28/01/2025

திண்டிவனம் வட்டம் விட்டாலாபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கை ஆக்கிரமித்து, நீரோடையை தூர்த்து முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டன் என்பவர் தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் விட்டாலாபுரம் கிராம அருந்ததியர் சமூக சுடுகாட்டையும் ஆக்கிரமித்து அராஜகம் செய்து வருகிறார் முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டன்.

நீலகண்டனிடம் லஞ்சம் பெற்றுகொண்டு விட்டாலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் லட்சுமிபதி ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார், திண்டிவனம் வருவாய் ஆய்வாளரும் இதற்கு உடந்தை.

நீரோடையை தூர்த்து விவசாயம் செய்வதால் மழை காலத்தில் மழைநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடும் அபாயம் உள்ளது என்றும்,
அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திண்டிவனம் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது.

இருப்பினும் ஆக்கிரமிப்பை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திண்டிவனம் வட்டாட்சியரும் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார் .

இன்று 28.01.2025 ஓடை புறம்போக்கு மற்றும் வண்டிபாதை புறம்போக்கில் சவுக்குமர கன்றுகளை நடவு செய்தும், மக்கள் பயன்படுத்தும் பாதையில் வாகனங்கள் சென்று வர முடியாத அளவுக்கு குழி வெட்டியும் உள்ளார் முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டன்.

இந்த தகவலை திண்டிவனம் வட்டாட்சியரிடம் மாலை 4.30 மணியளவில் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார் DYFI நிர்வாகி திருமுருகன்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து விட்டாலாபுரம் திரும்பிய திருமுருகனை 5 மணியளவில் வழிமறித்து முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டனின் ஆதரவாளரும், நீலகண்டன் நிலத்தை பராமரிப்பு செய்து வருபவருமான ஜெயபால் என்பவர் ஆக்கிரமிப்பை அகற்ற சொல்லி மனு கொடுப்பியாடா என்று சொல்லி தன் கையிலிருந்த மண்வெட்டியால் DYFI நிர்வாகி திருமுருகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார்.

அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு மற்றும் வண்டிபாதை புறம்போக்கை ஆக்கிரமித்த விட்டாலாபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் நீலகண்டன் மீதும்,

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு கொடுத்த DYFI நிர்வாகி திருமுருகன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய விட்டாலாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மீதும் வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும்,

அரசுக்கு சொந்தமான வண்டிபாதை புறம்போக்கு மற்றும் ஓடை புறம்போக்கில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பை அகற்றாமல், ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் விட்டாலாபுரம் கிராம நிர்வாக அலுவலர், திண்டிவனம் வருவாய் ஆய்வாளர், திண்டிவனம் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும்,

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களையும், தமிழக அரசையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்...

திண்டிவனம் நகராட்சி நிர்வாகமே!நடவடிக்கை எடு!
07/03/2024

திண்டிவனம் நகராட்சி நிர்வாகமே!
நடவடிக்கை எடு!

குடிநீர், மின்விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கீழ் ஆதனூ...
23/02/2024

குடிநீர், மின்விளக்கு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கீழ் ஆதனூர் மற்றும் கீழ்சேவூர் கிளைகள் சார்பில் ஒலக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது..

திண்டிவனம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான தோண்டப்பட்ட சாலைகளை உடனே சீரமைக்கவும், திண்டிவனம் மேம்பாலத்தில் நகரும் மி...
17/02/2024

திண்டிவனம் நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான தோண்டப்பட்ட சாலைகளை உடனே சீரமைக்கவும், திண்டிவனம் மேம்பாலத்தில் நகரும் மின் படிக்கட்டு (எஸ்கேலேட்டர்) அமைக்க வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திண்டிவனம் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது..

29/06/2022

13331 தற்காலிக ஆசிரியர் பணியை வாபஸ் பெற்று,
TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுடன் சென்னை DPI வளாகத்தில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை ஆதரத்து, DYFI சி.பாலசந்திரபோஸ் மாநில இணைச்செயலாளர் பேசினார்.
மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் சந்துரு ஆகியோர் உடனிருந்தனர்.

05/04/2022

விழுப்புரம் மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோரிக்கை வெற்றி திண்டிவனம் நேரு வீதியில் ஸ்டேட் பேங்க் எதிரில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த கழிவறையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தி நகராட்சி ஆணையாளர் மற்றும் திண்டிவனம் சார் ஆட்சியரிடம் திண்டிவனம் நகர DYFI சார்பில் மனு அளித்திருந்தோம். நமது கோரிக்கையை ஏற்று தற்போது கழிவறையை சீரமைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது. விரைவில் கழிவறை மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.

#விழுப்புரம் மாவட்டம்

23/02/2022

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017-ம் ஆண்டு நிலவரப்படி 1,060 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்துவதற்கான விண்ணப்ப நடைமுறைகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நிலையில் அதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பதாரர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து தொலைத்தூரங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்ற பிரச்சினை எழுந்த உடன் தேர்வு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 2021 ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி தேர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால் விண்ணப்பதாரர்களின் வசிப்பிடத்தில் இருந்து தொலைதூரங்களிலே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் நடைபெறும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தொலை தூரங்களில் தேர்வு எழுதும் மையங்கள் போடப்பட்டு வருகிறது.

இதனால் பலர் தேர்வுக்குச் செல்ல முடியாத நிலையும் தேர்வுக்குச் சென்றவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்குச் செல்ல முடியாததால் தேர்வு எழுத முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, வசிப்பிடத்திற்கு அருகாமையிலேயே தேர்வு மையங்கள் அமைத்துக் கொடுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்கெனவே 2 முறை தள்ளிவைக்கப்பட்டு, கடந்த டிசம்பரில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் தேர்வில் மீண்டும் குளறுபடி நடந்திருப்பதாக தேர்வர்கள் தமிழக அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர் என அறிகிறோம். பல்வேறு குளறுபடிளோடு தேர்வு நடந்ததாலும் தேர்வு எழுதியவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிருந்தனர். இந்நிலையில் தேர்வு முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் முடிவுகள் இன்னும் அறிவிக்கபடததால் மாணவர்கள் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

எனவே இனி வரும் காலங்களில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடி ஏற்படுவதை தடுத்து நிறுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், உடனடியாக கடந்த 2021-டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகளை வெளியிடவும் தமிழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்
என்.ரெஜீஸ்குமார்
மாநிலத் தலைவர்
எஸ்.பாலா
மாநிலச் செயலாளர்

ஊடகங்களுக்கு விடுக்கும் அறிக்கை: 23/02/2022

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு மாநிலக்குழு.

| | | Chief Minister of Tamil Nadu

29/09/2021

ஒன்றிய அரசே! தென்னக ரயில்வே நிர்வாகமே!!

வடகிழக்கு ரயில்வேயிலிருந்து தென்னக ரயில்வே உதவி ஓட்டுநர் பணியில் நியமிக்கப்பட்ட 54 பேரை திருப்பி அனுப்பு.

தென்னக ரயில்வேயில் காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு அந்தப் பணியிடங்களை வழங்கிடு.

கண்டன ஆர்ப்பாட்டம்.

2021.செப்-30.காலை 10 மணி, தென்னக ரயில்வே மேலாளர் அலுவலகம் அருகில், சென்னை.



Ashwini Vaishnav

24/09/2021

ஒன்றிய பாஜக அரசே!

அஸாமில் நிலத்தில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் துப்பாக்கிச்சூடு, அப்பட்டமான மனித உரிமை மீறல், இருவர் உயிரிழப்பு.

வன்மையாக கண்டிக்கிறோம்.

|

08/09/2021
21/08/2021



Address

Tindivanam

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Tindivanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DYFI Tindivanam:

Share