07/03/2023
ஒரு வீட்டிற்கு ஒரு மின்சார இணைப்புதான்!"- மின்சார ஒழுங்குமுறை வாரியம் செக்
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒரு வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் இருந்தால், அதை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி,
1. ஒரு வீடு அல்லது குடியிருப்பு அல்லது இடத்தில் ஒரு மின்சார இணைப்பு மட்டும் தான் தரப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், அவை இணைக்கப்பட வேண்டும் அல்லது 1டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும்.
2. ஒரு வீடு அல்லது குடியிருப்பு அல்லது இடத்தில் ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்பு தரப்பட்டிருந்தால், அந்த இணைப்பை கட்டண விகித மாற்ற உத்தரவு 1ஏ-வின்படி முறையான நோட்டீஸ் மூலம் ஒரே இணைப்பாக மாற்றப்பட வேண்டும்.
3. இந்த இணைப்பிற்கு நுகர்வோர் ஒப்புக்கொள்ளாவிட்டால், அவர்களது மின்சார இணைப்புகளை கட்டண விகித பட்டியல் 1டி-யாக மாற்ற வேண்டும்.
4. ஒரே வீட்டில் சொந்த பந்தங்கள் கூடி வாழும்போது, அவர்களிடம் வாடகை ஒப்பந்தமோ அல்லது குத்தகை ஒப்பந்தமோ இருக்காது. அதனால் 2004 மின் பகிர்மன விதியின்படி அனுமதி பெற்றிருந்தால் மற்றும் தனி ரேசன் கார்டுகள் இருந்தால், அவர்களால் 100 யூனிட் இலவச மின்சாரம் பெற முடியும்.
5. ஒரு குடியிருப்பில் பொதுவாக பயன்படுத்தப்படும் மின்சார இணைப்பை 1-டி கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும்.
தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் உள்ள வீடுகளுக்கு, அவைகளை இணைக்க மின்சார வாரியம் நோட்டீஸ் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Vikatan