Thiruvarur நம்ம திருவாரூர்

Thiruvarur நம்ம திருவாரூர் social activity

ஒவ்வொறு நாளும் குற்ற செயலின் வேகம் கூடி கொண்டே போகிறது .குற்றம் இல்லாத நாள் இனி என்று வருமோ என்ற அச்சம் இப்போது மக்களிடம...
17/06/2026

ஒவ்வொறு நாளும் குற்ற செயலின் வேகம் கூடி கொண்டே போகிறது .
குற்றம் இல்லாத நாள் இனி என்று வருமோ என்ற அச்சம் இப்போது மக்களிடம் ஏற்பட்டுள்ளது .
கூட்டணி ஆட்சி என்று சொல்லிவிட்டு கூட்டம் கூட்டமாக நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க தவறிவிட்டார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது .

பெண்பிள்ளைகள் பாதுகாப்பு என்றும் கேள்வி குறிதான் ?ஜேசப் விஜய் மக்களிடம் நம்பிக்கையை இழக்கிறார்.
17/06/2026

பெண்பிள்ளைகள் பாதுகாப்பு என்றும் கேள்வி குறிதான் ?
ஜேசப் விஜய் மக்களிடம் நம்பிக்கையை இழக்கிறார்.

இன்று பிறந்தநாள் காணும் திருவாரூர் TVS பாரத் குழுமத்தின் உரிமையாளர்,திரு. பாரத் Rtn.R.பிரபாகரன்* அவர்கள்நீண்ட ஆயுளுடனும்...
17/06/2026

இன்று பிறந்தநாள் காணும் திருவாரூர்
TVS பாரத் குழுமத்தின் உரிமையாளர்,
திரு. பாரத் Rtn.R.பிரபாகரன்* அவர்கள்
நீண்ட ஆயுளுடனும்,
குறையாத செல்வமும்,
மங்காத புகழும் கொண்டு பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

அதிகாரத்தை கைப்பற்றும் அ. ராசா - கனிமொழி .... இனி இவர்கள் கட்டுப்பாட்டில் திமுக... ஓரங்கட்டப்படும் சீனியர்கள்... நடந்து ...
17/06/2026

அதிகாரத்தை கைப்பற்றும் அ. ராசா - கனிமொழி .... இனி இவர்கள் கட்டுப்பாட்டில் திமுக... ஓரங்கட்டப்படும் சீனியர்கள்...

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அடைந்த தோல்வியிலிருந்து மீண்டும் கட்சியை மீட்டெடுப்பதற்கான வேலையில் உதயநிதி ஸ்டாலின் இறங்கி இருக்கிறார். அந்த வகையில் பல மாற்றங்களை திமுகவில் கொண்டு வருவதற்கு உதயநிதி ஸ்டாலின் முயன்று வருகிறார், இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் மாற்றங்கள் கொண்டுவர முயற்சித்தாலும் அதற்கு பல சீனியர் தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருக்கிறார்.

இருந்தபோதிலும் யார் முட்டுக்கட்டை போட்டாலும் பரவாயில்லை தோல்வியில் இருந்து மீண்டெழுந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் சற்று கரரான முடிவுகளை எடுத்து தீர வேண்டும் என்று முடிவு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின், அதில் பல சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளார், அந்த வகையில் திமுகவின் பொதுச் செயலாளராக இருக்கும் துரைமுருகனை அப்பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டு டி ஆர் பாலுவை நியமிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்த பேச்சு வார்த்தையின் பொழுது ஒரு உதயநிதி ஸ்டாலினுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள், குறிப்பாக இதுவரை பட்டியல் சமூகத்தினரின் வாக்கு திமுக பக்கம் இருந்தது, மேலும் விடுதலை சிறுத்தை கட்சியினரும் திமுகவுடன் கூட்டணியில் இருந்தார்கள். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பட்டியல் சமூகத்தினரின் பெரும்பாலான வாக்குகள் தமிழக வெற்றிக்கழகம் பக்கம் திரும்பியதின் விளைவு, திமுகவின் கோட்டையாக இருந்த சென்னையே தவெக கைவசம் சென்று விட்டது.

அந்த வகையில் திமுகவில் ஒரு பட்டியல் இன சமூகத்தைச் சார்ந்த ஒருவரை பொதுச் செயலாளராக நியமிக்கும் பொழுது தமிழகத்தில் உள்ள பட்டியல் சமூகத்தினருக்கு திமுக மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். அந்த வகையில் தற்பொழுது திமுகவின் கொள்கை போர்வாள் என்று அழைக்கப்படும் ஆராசாவை திமுகவின் பொதுச் செயலாளர் நியமிக்கலாம் என்று உதயநிதியிடம் சிலர் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போது நடக்கும் தமிழக வெற்றிக்கழக ஆட்சிக்கு எதிராகவும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகவும் கவுண்டர் கொடுக்கக்கூடிய சரியான நபர் ஆ ராசா தான் என்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய தலைவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதே போன்று திமுக பொருளாளராக இருக்கக்கூடிய டி ஆர் பாலுவை மாற்றுவது தொடர்பாக எழுந்த பேச்சு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கையில், அந்த பொறுப்புக்கு கே என் நேரு மற்றும் ஏ வ வேலு ஆகியோர் கடும் போட்டி போட்டுக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் பொருளாளர் பதவிக்கு சாதுரியமாக அரசியல் காய்களை கனிமொழி நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகிறது. இருந்தாலும் ஆ ராசா கனிமொழி ஆகியோர் கட்சியின் உயர் அதிகாரத்திற்கு வந்துவிட்டால், நாம் அவர்களை கட்டுப்படுத்த முடியாது என்கின்ற அச்சம் உதயநிதி ஸ்டாலினுக்கு இருந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் துரைமுருகன் பொதுச் செயலாளர் இருந்து மாற்றப்பட்டால் ஆ ராசா கனிமொழி இவர்கள் இருவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பதவி அளிக்க வேண்டும் என்று திமுகவில் இருக்கக்கூடிய மூத்த தலைவர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போர் கொடி தூக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் திமுகவின் அதிகாரமிக்க பதவிகளை கைப்பற்ற ஆ ராசா மற்றும் கனிமொழி இருவரும் காய்களை நகர்த்தி வரும் வேலையில், அடுத்து வரும் தேர்தல்களில் டெல்லி அரசியலை கைவிட்டு விட்டு மாநில அரசியலில் இருவரும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

17/06/2026
பிபின் மஞ்சு  #புழல் சிறையில் அடைப்பு
16/06/2026

பிபின் மஞ்சு #புழல் சிறையில் அடைப்பு

காலநிலை மாற்றம்
16/06/2026

காலநிலை மாற்றம்

அருள்மிகு திருவாரூர் தியாகிசப்பெருமான்  திருக்கோவிலில் முசுகுந்த அர்ச்சனை பெயரில் அர்ச்சகர்கள் அடிக்கும் கொள்ளை திருச்சி...
15/06/2026

அருள்மிகு திருவாரூர் தியாகிசப்பெருமான் திருக்கோவிலில் முசுகுந்த அர்ச்சனை பெயரில் அர்ச்சகர்கள் அடிக்கும் கொள்ளை திருச்சி பக்தர் புகார்..

நீண்ட நாட்களாக திருவாரூர் கோயிலில் ஒரு கூட்டம் தன் கட்டுபாட்டில் அனைத்தையும் வைத்துள்ளது . அர்சகர்கள் ஒருபுறம் , அரசியல்வாதிகள் ஒருபுறம் , கோவில் பணியாளர்கள் ஒருபுறம் என கோவில் ஆன்மீகத்திற்கான இடம் என்பதை விட சதிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது .

இது போன்ற செயல்களுக்கு முற்றுபுள்ளி வைத்து வெளியூர்களில் இருந்து இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு சரியான, சம வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பாரா ?
அல்லது தியாகராஜர் நடவடிக்கை எடுப்பாரா ?

2000 வருஷங்களுக்கு முன்னாடி, உலகத்திலேயே மிகப்பெரிய வல்லரசா இருந்தது ரோமானியப் பேரரசு. அங்க இருக்குற செல்வந்தர்களும், கு...
14/06/2026

2000 வருஷங்களுக்கு முன்னாடி, உலகத்திலேயே மிகப்பெரிய வல்லரசா இருந்தது ரோமானியப் பேரரசு. அங்க இருக்குற செல்வந்தர்களும், குறிப்பாக பேரரசிகளும் (Empresses) ஆடம்பரத்துக்குப் பெயர் போனவங்க. அவங்க எவ்ளோ ஆடம்பரமா வாழ்ந்தாங்கங்குறதுக்கு ஒரு மிரட்டலான ரகசியம், நம்ம பாண்டிய நாட்டோட கொற்கை துறைமுகத்துல ஒளிஞ்சிருக்கு.

சங்க இலக்கியங்கள்ல 'கொற்கை' அப்படிங்குறது முத்துக் குளித்தலுக்குப் பெயர் போன இடம்னு படிச்சிருப்போம். ஆனா, அந்த முத்துக்கள் ரோமானியப் பேரரசை எப்படி ஆட்டுவிச்சதுங்குறது தான் உண்மையான வரலாறு!

ரோமானியப் பேரரசி 'லோலியா பாலினா' (Lollia Paulina) அப்படிங்குறவங்க, ஒரு சாதாரண விருந்துக்கு போகும்போது கூட, அவங்க உடம்பு முழுசும் முத்துக்களையும், ரத்தினங்களையும் பதிச்ச ஆடைகளைத் தான் போட்டுட்டுப் போவாங்க. அவங்க அணிஞ்சிருந்த அந்த முத்துக்களோட இன்னைக்கு மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் க்கும் அதிகம்!

அந்த அத்தனை முத்துக்களும் நம்ம பாண்டிய நாட்டுல இருந்து ஏற்றுமதியானவை!

அந்த மிரட்டலான வணிக ரகசியம் என்ன தெரியுமா?
ரோமானியர்களுக்கு நம்ம ஊர் மிளகு (Black Pepper) எவ்ளோ பிடிக்குமோ, அதைவிட பல மடங்கு அதிகமாக நம்ம ஊர் கடல் முத்துக்கள் மேல பைத்தியமா இருந்தாங்க. குறிப்பாக, முழுமையாக உருண்டையா இருக்குற "ஆணி முத்துக்கள்" (Perfect Spherical Pearls) நம்ம கொற்கை கடல்ல மட்டும்தான் கிடைச்சது.

இந்த முத்துக்களுக்காக, ரோமானியர்கள் தங்களோட ஒட்டுமொத்த தங்கத்தையும், வெள்ளியையும் பாண்டிய நாட்டுக் கப்பல்கள்ல அள்ளிக்கொடுத்தாங்க.

வரலாற்று ஆய்வாளர் 'பிளினி' (Pliny the Elder) அப்படிங்குறவரு, "ரோமானியப் பேரரசோட செல்வம் முழுசும், இந்த முத்துக்களுக்காகவும், மிளகுக்காகவும் இந்தியாவுக்கு, குறிப்பாக பாண்டிய நாட்டுக்கு போகுதே" ன்னு ரொம்ப கவலையோட எழுதி வெச்சிருக்காரு. அந்த அளவுக்கு நம்ம முத்துக்கள் ரோமானியப் பேரரசின் பொருளாதாரத்தையே உலுக்கியிருக்கு!

ஒரு கட்டத்துல, ரோமானிய அரசாங்கம் "யாரும் முத்துக்களை அணியக்கூடாது, இதனால நம்ம நாட்டுத் தங்கம் எல்லாம் வெளியேறுது" ன்னு சட்டமே போடுற அளவுக்கு தமிழர்களின் இந்த முத்து வணிகம் பிரம்மாண்டமா இருந்தது.

உலகத்தையே ஆண்ட பேரரசை, நம்ம ஊர் கடல் சிப்பில இருந்து எடுத்த முத்துக்களை வெச்சு பொருளாதார ரீதியா கட்டுப்படுத்துன நம்ம தமிழர்களோட இந்த மாபெரும் வணிக திறமையை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?

இந்த முத்து வணிகம் பத்தி இதுக்கு முன்னாடி கேள்விப்பட்டிருக்கீங்களா? கமெண்ட்ல சொல்லுங்க!

ஆழ்ந்த இரங்கல்
13/06/2026

ஆழ்ந்த இரங்கல்

Address

Thiruvarur
610001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiruvarur நம்ம திருவாரூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Thiruvarur நம்ம திருவாரூர்:

Share

Category