10/10/2024
இன்று எனது காவல் பணியின்போது ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்...
#கும்பகோணம்
இன்று(09.10.24) இரவு 8 மணி இருக்கும்
நான் எனது காவல் வாகனத்தில் மாலை ரோந்து சென்றபோது கும்பகோணம் , சோலையப்பன் தெரு அருகில் ஒரு மின் கம்பத்தின் வெளிச்சத்தில் ஐந்து சிறுவர்கள் அமர்ந்திருப்பதை பார்த்து காவல் வாகனத்திலிருந்து இறங்கிச்சென்று அருகில் நின்று ஆர்வமாகப் பார்த்தேன்.உண்மையில்
மனம் நெகிழ்ந்துபோனேன்....
ஐந்து பேரில் இரண்டு சிறுமிகள் மூன்று சிறுவர்கள்.
அனைவரும் அந்த தெருவோர மின் கம்பத்தின் வெளிச்சத்தில் பள்ளி புத்தகங்களுடன் ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தனர்.
நான் அவர்களை உற்று நோக்கினேன்.
அனைவரது எழுத்துக்களும் முத்துக்களாக இருந்தது. அப்போது
என்னை பார்த்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினர்.அதுவும் மிக ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் கழித்து சற்று மெல்ல பேச்சு கொடுத்தும் படிப்பிலிருந்து அவர்களின் கவனம் சிதறவில்லை.
அதில் ஒரு சிறுமி 10 ம் வகுப்பு பயில்கிறார்.அவர் அனைவருக்கும் பாடமும் சொல்லிக்கொடுத்துக்கொண்டு தானும் படித்தார்....
அருகில் இருந்த பெரியவர் ஒருவரிடம் விசாரித்தபோது இவர்கள் அனைவரும் தினசரி இந்த இடத்திற்கு வந்து இதுபோன்று படிப்பதாகவும் இவர்களது தந்தை ஒரு கூலித்தொழிலாளி என்றும் தெரிவித்தார்.
தனியார் பள்ளியில் படித்தாலும், டியூசன் வைத்து தேற்றவேண்டிய இக்காலகட்டத்தில், கூட்டாக அமர்ந்து செல்போனில் மூழ்கி சீரழியும் சமுதாயத்தில்,...
தன் எதிர்காலம் கருதி
தன் குடும்பத்தின் நிலை கருதி,
சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,
யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல்,
கல்விதான் முக்கியம் என்று அறிந்து இக்காலத்திலும் தெருவோர மின்விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் இக்குழந்தைகள் உண்மையிலேயே சாதிக்கப்பிறந்தவர்கள்...
இவர்களது பெற்றோர்கள் புண்ணியம் செய்தவர்கள்...
இவர்களது ஆசிரியர்கள் போற்றக்கூடியவர்கள். ..
சிறுவர்கள் அனைவரையும் அழைத்து உற்சாகப்படுத்தி பாராட்டி நான் புறப்பட்டபோது மணி இரவு 9.30 .பின்னர் அங்கிருந்த 5 வயது சிறுவன் மட்டும் எனக்கு கையசைத்து என்னையும் என் காவல் வாகனத்தையும் பார்த்துக்கொண்டே வழியனுப்பினான் .அவன் பார்வையில் மிகப்பெரிய லட்சியம் இருப்பது உறுதி....
அந்த இடத்திலிருந்து வந்துவிட்டாலும் மனம் அங்கேதான் நிற்கிறது.