13/06/2026
---
# # # *🙏 _அன்னையின் ஆசீர்வாதம்_ 🙏*
*முகநூல் உறவுகளே,*
*இன்று எங்கள் மனம் நெகிழ்ந்த நாள்.*
*பி.கே.ஆர் குரூப்ஸ் நிறுவனர்,*
*அன்பு சகோதரர் திரு. குட்டி ராஜா என்கிற கண்ணன் அவர்கள்,*
*தனது தாயாரின் நினைவு நாளை முன்னிட்டு,*
*நமது _தாயின் மடியில் அறக்கட்டளை_ மூலம்*
*150+ ஆதரவற்ற முதியோர்களுக்கு*
*சிறப்பான அறுசுவை உணவு வழங்கி*
*தன் தாய்க்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.*
*தாயை இழந்த துயரத்திலும்,*
*பல தாய்மார்களின் வயிற்றுப்பசியை போக்கி*
*அவர்களின் முகத்தில் புன்னகையை பார்த்த*
*உங்கள் உயர்ந்த உள்ளத்திற்கு*
*கோடி நன்றிகள் சகோதரா 🙏*
*நீங்கள் செய்த இந்த அன்னதானத்தால்*
*உங்கள் தாயாரின் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும்.*
*வானில் இருந்து உங்களை வாழ்த்தும்.*
*_தாயின் மடியில் அறக்கட்டளை_ சார்பாகவும்,*
*150 முதியோர்கள் சார்பாகவும் நாங்கள்*
*இறைவனை வேண்டிக்கொள்கிறோம்:*
*"எல்லாம் வல்ல இறைவா!*
*திரு. கண்ணன் அவர்களின் குடும்பத்தை*
*நோய் நொடி இல்லாமல் காத்திடு.*
*அவரது பி.கே.ஆர் குரூப்ஸ் தொழில்*
*மென்மேலும் வளர்ந்து செழிக்க அருள்புரி.*
*அவர் வாழ்வாங்கு வாழ வழிகாட்டு."*
*நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி 🙏*
*இப்படிக்கு,*
*A. கோமதிநாயகம்*
*தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை*
*8270024661*
*வாழ்க வளமுடன்* 🤲