SDPI வீராணம் நகரம்

SDPI வீராணம் நகரம் political

02/10/2023
02/10/2023

வெல்லட்டும் மதச்சார்பின்மை!

மதுரையில் SDPI கட்சியின் மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு!

எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் அறிவிப்பு

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (செப்.30) மதுரையில் உள்ள பிரசிடெண்ட் ஹோட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மாநில, மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறும்போது;

"நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களில் ஒன்று மதச்சார்பின்மையாகும். அரசின் சேவைகள், குடிமக்களுக்கான உரிமைகளில் மக்களுக்கு மத்தியில் எந்த விதத்திலும் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், துரதிஷ்டவசமாக தற்போதைய ஆட்சியில் நாட்டின் உன்னதமான மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வழிகளில் மதச்சார்பின்மைக்கு எதிராக ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. அரசியலமைப்பு சாசனத்திலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் வார்த்தைகளை நீக்கும் நடவடிக்கைகளை ஆளும் ஒன்றிய பாஜக அரசே செய்துவருகின்றது.

மதச்சார்பின்மை மீதான மறைமுகத் தாக்குதல்கள் அரசின் ஆதரவுடன் இப்போது நேரடியாகவும் வெளிப்படையாகவும் மாறிவிட்டன. அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகத் தன்மையை வீழ்த்திட, அதன் மீது தாக்குதல் தொடுப்பதும், சிறுமைப்படுத்துவதும், இறுதியில் அதனை ஒழிப்பதுமான பாசிச திட்டங்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒருபுறம் மதச்சார்பின்மைக்கு எதிராக அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் நடந்துவரும் வேளையில், மறுபுறம் மதவாதம் அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறிக்கொண்டிருக்கின்றது. மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மதவெறுப்புகள் அங்கிங்கெனாதபடி நாட்டின் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன.

இவையெல்லாவற்றிற்கும் தீர்வாக, அரசியலமைப்பை, அதன் உன்னத உயர்ந்த கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

ஆகவே, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் 'வெல்லட்டும் மதச்சார்பின்மை!' என்ற முழக்கத்தோடு எதிர்வரும் டிசம்பர் மாதம் மதுரை மாநகரில் மாபெரும் 'மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு' நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள மதச்சார்பின்மையை காக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்திட வேண்டும்.என தெரிவித்தார்.

#வெல்லட்டும்_மதச்சார்பின்மை


தென்காசி மாவட்டம் வீராணம் நகர SDPI கட்சியின் சார்பாக நகரத் தலைவரும் ஜமாத் கமிட்டி உறுப்பினருமான SK. சேட் அவர்களின் தலைமை...
26/08/2023

தென்காசி மாவட்டம் வீராணம் நகர SDPI கட்சியின் சார்பாக நகரத் தலைவரும் ஜமாத் கமிட்டி உறுப்பினருமான SK. சேட் அவர்களின் தலைமையில் வீராணம் ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன் அவர்களிடம் (26/08/23)அன்று தெரு நாய்கள் தொல்லை சம்பந்தமாகவும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது ஜமாத் கமிட்டியின் ஆலோசகர் VPS.சாகுல் ஹமீது அவர்களும் ஜமாத் கமிட்டி துணைச் செயலாளர் SONY கனி அவர்களும் SDPI மாவட்ட சமூக ஊடக அணி தலைவர் பாப்புலர் ஹக்கீம் அவர்களும் மற்றும் நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

1) நமது ஊரில் சில நாட்களாகவே தெரு நாய்களின் தொல்லை அதிகரித்தும் அதனைக் கொண்டு அச்சமும் அதிகரித்து வரும் நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு வருகை தந்த குழந்தைகளை விரட்டி சென்றுள்ளது இதனை அடுத்து பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அச்சத்துடன் பள்ளிக்கு கொண்டு வந்து விடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் மேச்சலுக்கு செல்லும் ஆடு மாடுகளையும் கடித்துள்ளது எனவே இந்த தெருநாய்களின் தொல்லையில் இருந்தும் அச்சத்தில் இருந்தும் மக்களை விடுபடச் செய்ய விரைந்து ஊராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டியும்

2)1வது வார்டு காளியம்மன் கோவிலில் இருந்து தெற்கு நோக்கி வரும் கால்வாய் குருவலான உள்ள நிலையில் கழிவுநீர் ரோட்டில் செல்லும் அவதியும் தேங்கி நின்று துர்நாற்றம் வீசும் நிலையிலும் உள்ளது எனவே அந்த கால்வாயில் அகலப்படுத்தி சீரமைத்து புதிய கால்வாய் அமைத்து தர வேண்டியும்.

அதேபோல் காளியம்மன் கோவில் அருகே உள்ள தண்ணீர் சேமிப்பு தொட்டி மக்கள் பயன்பாட்டில் இல்லாத நிலையில் உள்ளது அதை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்து மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியும்

3) வீட்டு குடிநீர் திட்ட பணியினை தொடங்கி அனைத்து வீட்டிற்கும் குடிநீர் கனெக்சன் தரவேண்டியும்

மேலும்
தெரு மினு விளக்கு இல்லாத இடங்களில் அமைத்து தரவேண்டியும் அதிலும் குறிப்பாக வண்டிக்காரத் தெரு பகுதியில் மின்விளக்கு இல்லாத சூழ்நிலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது அதில் புதிதாக மின்விளக்கு அமைத்து தர வேண்டியும்

வடக்கு பகுதியில் சிமெண்ட் களத்தில் உள்ள சிமெண்ட் சீட் ஆளான நிழல் குடை பழுதடைந்து இருப்பதையும் கவனத்திற்கு கொண்டு வந்து சரி செய்து தருமாறும் மற்றும்

சிமெண்ட் தளத்தின் அருகில் குளியல் தொட்டி கட்டித்தருமாறும்கோரிக்கைகளை முன்வைத்து ஊராட்சி மன்ற தலைவர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது..

மனுவைப் பெற்றுக் கொண்ட ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக விரைந்து நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்...

 #தென்காசி மாவட்டம்  #வீராணம் நகர SDPI ன் சார்பாக 77வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நகரத் தலைவரும், ஜமாத் கமிட்டி ...
15/08/2023

#தென்காசி மாவட்டம் #வீராணம் நகர SDPI ன் சார்பாக 77வது சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நகரத் தலைவரும், ஜமாத் கமிட்டி உறுப்பினரும் SK. சேட் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட சமூக ஊடக அணி தலைவர் பாப்புலர் ஹக்கீம் அவர்கள் முன்னிலை வகித்தார் ,
மேலும்
சிறப்பு விருந்தினராக வீராணம் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது முஜாஹிதீன் அவர்கள் கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்பித்தார்கள்,
மற்றும்
ஜமாத் கமிட்டி துணைச் செயலாளர் SONY கனி அவர்களும் ஜமாத் கமிட்டி உறுப்பினர் மீரா உசேன் அவர்களும் மற்றும் வீராணம் ஊராட்சி மன்ற 3வது வார்டு உறுப்பினரும் முன்னாள் சத்துணவு அமைப்பாளருமான சாகுல் ஹமீது அவர்களும் மேலும் சிந்தாமுதார், அப்துல் ரஹீம், மைதீன் மற்றும் வீராணம் ஜும்மா பள்ளியின் மோதினார் அவர்களும் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் SDPI கட்சி செயல்வீரர்கள்அனைவரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக SDPI நகர பொருளாளர் இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது...

SDPI கட்சியின் 15- வது துவக்க விழாவை முன்னிட்டு,SDPI- கட்சி  வீராணம் நகரம் சார்பாக, கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி இனிப்ப...
21/06/2023

SDPI கட்சியின் 15- வது துவக்க விழாவை முன்னிட்டு,
SDPI- கட்சி வீராணம் நகரம் சார்பாக, கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது,

இந்நிகழ்வில்
நகர தலைவர் SK. சேட் அவர்கள் தலைமை தாங்கினார் மேலும் மாவட்ட சமூக ஊடக அணி தலைவர் பாப்புலர் ஹக்கீம் நகர பொருளாளர் இஸ்மாயில் செயற்குழு உறுப்பினர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சியின் தென்காசி மாவட்ட பொருளாளர் Er M.கல்வத் கனி அவர்கள் கலந்துகொண்டு கொடியெற்றி சிறப்பித்தார்.
மேலும் சிறப்பு விருந்தினர்களாக சுரண்டை நகர தலைவர் கோல்டன் பாதுஷா மற்றும் நகரச் செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் திமு கழக ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் SK.சதாம் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....

இவன் :
SDPI வீராணம் நகரம்

SDPI கட்சியின் 14 வது ஆண்டு நிறைவுற்று ஜூன், 21, SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு, துவக்கத்தை  கொண்டாடும் என் உயிருக்கு உயிரா...
20/06/2023

SDPI கட்சியின் 14 வது ஆண்டு நிறைவுற்று ஜூன், 21, SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு, துவக்கத்தை கொண்டாடும் என் உயிருக்கு உயிரான அன்பும், நேசமும் நிறைந்த SDPI கட்சியின் உறவுகள் அனைவருக்கும் SDPI கட்சியின் 15 ஆம் ஆண்டு துவக்க தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

உன்னை வீழ்த்தும் அளவிற்கு விதிகள் எழுதப்பட்டிருந்தால்...

விதிகளை வீழ்த்தும் அளவிற்கு வழிகளும் நிறுவப்பட்டிருக்கும்

#தளராதே... #துணிந்து_செல்..💚❤

இவன்:
SDPI வீராணம் நகரம்

03/06/2023

அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பார்ந்த சகோதரர்களே சென்ற வருடம் போலவே இந்த வருடமும் கூட்டு குருபானி கொடுப்பதற்கு வீராணம் நகர SDPI கட்சியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய பங்கினை கொடுத்து கூட்டு குர்பானி சேர்ந்து கொள்ளலாம் பங்கு ஒன்றுக்கு 5000 ரூபாய்
என தீர்மானிக்கப்பட்டுள்ளது மேலும் தகவலுக்கு தொடர்புக்கு....
9629415576 - g pay num
9947112680
7904424307
8821670197

28/05/2023

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

*மௌத்*(மரண) அறிவிப்பு:

வீராணம், சதாம் உசேன் நகரை சார்ந்த( காளியம்மன் கோவில் தெரு) மர்ஹும்,முகம்மது இஸ்மாயில் ராவுத்தர் ( குட்ட முகம்மது) அவர்களின் மனைவியும்,SDPI நகரச் செயற்குழு உறுப்பினர் R.செய்யது இப்ராஹிம் அவர்களின் ராரியும் ஜனாபா,அசன் பாத்து அவர்கள் இன்று (28-05-2023) இரவு 08:00 மணி அளவில் வஃபாத் ஆகிவிட்டார்கள்....

*இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்...*

அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யுமாறுகேட்டுக்கொள்கிறோம்.


SDPI,
வீராணம்.

முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு-2022-2023நம்பள்ளியின் சாதனையாளர்கள்.தேர்வு எழுதியோர் - 36தேர்ச்சி ...
21/05/2023

முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி,
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு-2022-2023

நம்பள்ளியின் சாதனையாளர்கள்.

தேர்வு எழுதியோர் - 36
தேர்ச்சி பெற்றோர். -35

தேர்ச்சி சதவீதம் - 97%

முதல் மதிப்பெண்- S. ஸப்ரின்--463

இரண்டாம் மதிப்பெண். M.சுமானா-462.

மூன்றாம் மதிப்பெண். 1)S. அப்ரின் பாத்திமா---461
2) K.. சுமையா மஹ்முதா---461

450 க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள்
A. அனிசா --- 454
S. ஸமீமா --- 453
S. தீபிகா ---- 452

400-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் - 12.

சாதனை படைக்க ஊக்குவித்து உழைத்த -
தலைவர் - தாளாளர்,
நிர்வாக அலுவலர்,
தலைமை ஆசிரியர்கள்,
அனைத்து ஆசிரியப் பெருமக்கள்,
ஜமாத் & கல்விக் கமிட்டி உறுப்பினர்கள்,

அனைவருக்கும் வீராணம் நகர SDPI கட்சியின் சார்பாக வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்...

SDPI- வீராணம் நகரம் தென்காசி மாவட்டம்

வீராணம் நகர தலைவர் SK.சேட் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் SDPI மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..தென்காசி மாவ...
05/05/2023

வீராணம் நகர தலைவர் SK.சேட் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் SDPI மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்பு..

தென்காசி மாவட்டம் SDPI கட்சியின் வீராணம் நகர தலைவர் SK.சேட் அவர்களின் இல்ல புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் SDPIகட்சியின் மாவட்ட தலைவர் T.சிக்கந்தர், மாவட்ட பொதுச் செயலாளர் A.மஹ்மூத், மாவட்ட பொருளாளர் Er M.கல்வத் கனி,
மாவட்ட சமூக ஊடக அணி தலைவர் பாப்புலர் ஹக்கீம் , நகர செயலாளர் உதுமான் கனி, நகர பொருளாளர் இஸ்மாயில் மற்றும் நகர,கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் ,
உடன்
திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் S.ஷேக் முகமது ,
ஒன்றிய சிறுபான்மை அணி அமைப்பாளர் SK.சதாம் உசேன் ,
கிளை பொருளாளர் P.அமானுல்லா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...

Address

Veeranam
Tenkasi
627861

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI வீராணம் நகரம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share