24/10/2025
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
தமிழ்நாடு மாநிலக்குழு
பத்திரிகை செய்தி
தேதி 24-10-2025
குரூப் 04 பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்திடுக
2025 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு, ஜூலை மாதம் 12 ஆம் தேதி தேர்வு நடந்தது. ஏறக்குறைய 11 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் 22/10/2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4662 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப்பணிடங்கள் உள்ளன. இந்த ஆண்டு நிலவரப்படி 30 லட்சத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். குரூப் 4 பிரிவில் அதிக அளவு காலிப்பணியிடங்கள் உள்ளன.
2022 ஆம் ஆண்டு 10178 பணியிடங்கள் நிரப்பப்பட்டன . 2024 ஆம் ஆண்டு குரூப் 4 பிரிவில் சுமார் 9532 பணியிடங்கள் நிரப்பப்படட்டன. ஆண்டுக்கு ஆண்டு குரூப் 4 பணியிடங்கள் மூலம் நிரப்பப்படும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறைந்து வருவது கவலையளிக்கும் விசயமாகும். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு வெறும் 4662 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியௌ ஏற்படுத்தியது. அப்போதே அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை பரவலாக எழுந்தது .
படித்து முடித்த இளைஞர்கள் சமூக பாதுகாப்பான வேலையில்லாமல் தனியார் துறையில் கிடைக்கின்றன வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
2021 ஆம் ஆண்டு திமுக தேர்தல் வாக்குறுதியில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 3 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தது . ஆனால் 5 ஆண்டுகளில் ஆட்சி முடியும் நிலையில் இதுவரை 3 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பாக குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் மீண்டும் இந்த பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. எனவே குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன்பாக கூடுதல் காலிப்பணிடங்களை அறிவித்து அதற்கேற்ப பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்துகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு 6244 காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வு அறிவிக்கப்பட்டது. அது படிப்படியாக உயர்த்தி இறுதியாக 9532 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆகையால் தமிழ்நாடு அரசு உடனடியாக காலிப்பணியிடங்களை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறோம்.
DYFI Chennai South DYFI Tamil Nadu Dyfi Virugambakkam DYFI Tambaram DYFI மதுரவாயல் SFI Southchennai Dyfi Saidapet
தோழமையுடன்
செல்வராஜ்
மாநில தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநில செயலாளர்