25/11/2021
மக்களின் உயிரோடு விளையாடும் கருங்குளம் பஞ்சாயத்து மீது நடவடிக்கை எடுக்கக் கோரி.,
தூத்துக்குடி மாவட்டம் - திருவைகுண்டம் வட்டம் - கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் - கருங்குளத்தில் பல ஆண்டு காலமாக குப்பைக் கூளங்களோடும், சாக்கடையாகவும், இறந்த உயிரினங்களின் உடல்கள் வீசப்பட்ட, பயன்படுத்தாமலும் தூர்வாராமல் கிடந்த கிணற்றுத் தண்ணீரை கருங்குளம் காமராஜர் தெரு, பாரதியார் தெரு, சி.எம்.எஸ் தெரு, வ.உ.சி தெரு, வன்னியராஜா கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்குக் குடிதண்ணீர் இணைப்பு வழியாக கொடுத்து நோய்த் தொற்று உருவாகக் காரணமாகியிருக்கும் கருங்குளம் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
கருங்குளம் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதைக் காரணமாகக் காட்டி கடந்த ஒரு வாரகாலமாக குடி தண்ணீர் விடாமலும் தண்ணீர் குறைந்த பின்னரும் ஆற்றிலிருந்து தண்ணீர் விட முயற்சி செய்யாமல் மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நோய்களை உருவாக்கும் வகையில் தூர்வாரப்படாத கிணற்றுத் தண்ணீரை விநியோகிக்க முயற்சிக்கிறார்கள்.
மேலும் வெள்ளக் காலங்களில் தண்ணீர் விநியோகிப்பதற்காகவே 30 ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஆற்றங்கரைகளில் அரசே போர் போட்டு கொடுத்துள்ளது. ஆனால் பஞ்சாயத்து நிர்வாகமோ அதனை பயன்படுத்தாமல் தூர்வாரப்படாத சாக்கடையும், மழை நீரும் கலந்த சுகாதாரக் கேடான கிணற்றிலிருந்து தண்ணீர் விநியோகிக்க முயற்சி செய்து மக்களைக் கொல்லப் பார்க்கிறார்கள். எனவே சுகாதாரக் கேடான அந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதை உடனடியாக நிறுத்தக் கோரியும், ஆற்றில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் ஆற்றங்கரையில் உள்ள போர் பம்ப் களில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யக் கோரியும், மேலும் இது போன்ற மக்களின் உயிரோடு விளையாடும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அனுப்புநர் :
ச.உடையார்,
செயலாளர்,
கிராம மக்கள் நலக்குழு,
திமுக கருங்குளம் மத்தியக் கிளை அவைத் தலைவர்,
கருங்குளம்,
திருவைகுண்டம் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம்.
9488231026,
9659681888.