Tamilnadu Corporation and Municipal Pensioner's Association

  • Home
  • India
  • Salem
  • Tamilnadu Corporation and Municipal Pensioner's Association

Tamilnadu Corporation and Municipal Pensioner's Association A community of Corporation and municipal Pensioners of Tamilnadu

அன்பார்ந்த ஓய்வூதிய/குடும்ப ஓய்வூதிய நண்பர்களே வணக்கம்வருகின்ற 16-03-2024 சனிக்கிழமை காலை 10 மணியளவில்  நமது சங்க  45வது...
17/02/2024

அன்பார்ந்த ஓய்வூதிய/குடும்ப ஓய்வூதிய நண்பர்களே வணக்கம்

வருகின்ற 16-03-2024 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நமது சங்க 45வது மாநில செயற்குழு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் நகர கிளைச்சங்க 16ஆம் ஆண்டு விழா கூட்டமும் ஒருசேர இணைந்து கோபிச்செட்டிப்பாளையம் ,சீதா கல்யாண மண்டபத்தில்( ஈரோடு-சத்தியமங்கலம் மெயின்ரோடு) வைத்து கோபிச்செட்டிப்பாளையம் நகர கிளைச்சங்கத்தின் சார்ப்பில் மாநிலத்தலைவர் திரு.B.K.கோபால்
அவர்கள் தலைமையிலும், கோபி நகர கிளைச்சங்க தலைவர் திரு.T.பழனிச்சாமி மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது அதுசமயம் கோபி நகர்மன்றத்தலைவர் திரு.N.R.நாகராஜன் , நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி. P.தீபா,நகராட்சி ஆணையாளர் திருமதி. T. சசிகலா,மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சீத்தாராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். மாநில செயற்குழு அழைப்பிதழை நண்பர்களின் பார்வைக்கு பகிர்ந்துள்ளேன். எனவே நமது நண்பர்கள் அனைவரும் அலைகடலென பெருந்திரளாக வந்து கோபி நகரில் நடைபெறவுள்ள நமது சங்க 46வது மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் மாநிலச்சங்கத்தின் சார்பிலும், கோபிச்செட்டிப்பாளையம்மநகர கிளைசங்த்தின் சார்பிலும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கோபி நகர கிளைச்சங்கத்தின் சார்பில் சிறப்பான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இரா. பாஸ்கரன்,
மாநில இணைப்பொதுசெயலாள்ர்

அன்பார்ந்த ஓய்வூதிய/குடும்ப ஓய்வூதிய நண்பர்களே வணக்கம் !!!தமிழக அரசு சி & டி பிரிவுஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதி...
08/01/2024

அன்பார்ந்த ஓய்வூதிய/குடும்ப ஓய்வூதிய நண்பர்களே வணக்கம் !!!

தமிழக அரசு சி & டி பிரிவு
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை
₹.500/- வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்த நிலையில் அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது என்பதை அன்புடன்
உங்களுககு தெரிவித்துக்கொள்கிறேன்
அரசாணை எண்.8 ,நிதி(ஓய்வூதியம்) துறை ,நாள் 5-1-2024

இரா.பாஸ்கரன்,
மாநில இணைப்பொதுச்செயலாளர்

05/01/2024
05/01/2024

சி மற்றும் டி பிரிவு
ஓய்வூதியர்கள்/
குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல்பரிசு ₹.500
வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

தேசிய பணிநிறைவர் ( ஓய்வூதியர்) நாள் இன்று: டிசம்பர் '17ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்...
17/12/2023

தேசிய பணிநிறைவர் ( ஓய்வூதியர்) நாள் இன்று: டிசம்பர் '17

ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.

டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

வரலாறு:

அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது. இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களைப் பிரிவினைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 17 டிசம்பர் 1982 ஆண்டில் உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

மேலும் டி. எஸ். நகரா வழக்கில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-இன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.

ஆகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாள், ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அனைத்து பணிநிறைவு பெற்ற தொழிலாள உறவுகளை வாழ்த்தி வணங்குகின்றேன்.💐💐💐🙏

27/07/2023

தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநிலத்துணைத் தலைவர் குமரகுருபரன் காலமானார்

 #கண்ணீர்_அஞ்சலிநமது மாநில சங்க துணைத் தலைவரும், நமது நெருங்கிய நண்பரும், கடலூர் கிலைச்சங்க பொருளாளருமான திரு. ஈ. முத்து...
27/07/2023

#கண்ணீர்_அஞ்சலி

நமது மாநில சங்க துணைத் தலைவரும், நமது நெருங்கிய நண்பரும், கடலூர் கிலைச்சங்க பொருளாளருமான திரு. ஈ. முத்துக்குமர குருபரன் அவர்கள் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று 27.7.2023 காலை 6:30 மணியளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். ஓய்வூதியர்களின் நலனில். தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு வாழ்ந்து வந்தார். தனது கடைசி வாழ்நாள் வரை ஓய்வூதியர்களின் நலனுக்காகவே வாழ்ந்து வந்த அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டிக்கொள்வோம். அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழந்த
அனுதாபத்தையும், இரங்கலையும்
தெரிவித்துக்கொள்வோம்

B. K. கோபால்-
மாநிலத்தலைவர் மற்றும்
மாநிலச்சங்க நிர்வாகிகள்

19/12/2022
 #ஓய்வூதியர்கள்_சங்க_மாநில_செயற்குழு #கூட்டம்தமிழ்நாடு மாநகராட்சி மற்றும்நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க 42வது மாநிலசெயற்குழ...
19/12/2022

#ஓய்வூதியர்கள்_சங்க_மாநில_செயற்குழு
#கூட்டம்

தமிழ்நாடு மாநகராட்சி மற்றும்
நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க 42வது மாநிலசெயற்குழுக்கூட்டம், டிசம்பர் 17 ஓய்வூதியர் உரிமைநாள் மற்றும் காஞ்சிபுரம்
கிளைச்சங்க 14வது ஆண்டுவிழா மூன்றும்
இணைந்த முப்பெரும் விழா நேற்று (18.12.22)
காஞ்சிபுரம் ஸ்ரீமச்சேச பெருமாள் திருமண
மண்டபத்தில் வைத்து காலை 10.00 மணி அளவில் மாநிலத்தலைவர் பி.கே.கோபால்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் கிளைச்சங்க தலைவர் ஜெயராமன் வரவேற்புரைக்குப்பின் மண்டல
தலைவர் (செங்கல்பட்டு) ஜீவானந்தம்
மாநில சங்க நிர்வாக அறிக்கை வாசித்தார்.
மாநில பொருளாளர் வெங்கிடாசலம் நிதிநிலை அறிக்கையை வாசித்து பதிவு
செய்தார். சிறப்பு அழைப்பாளர்களாக
காஞ்சிபுரம், உத்திரமேரூர், சட்டமன்ற
உறுப்பினர்கள் திரு.எழிலரசன், சுந்தர்,
காஞ்சிபுரம் மேயர் திருமதி.மகாலட்சுமி
யுவராஜ், துணைமேயர் குமரகுருநாதன்
நகராட்சி ஆணையாளர் கண்ணன், நகராட்சி
பொறியாளர் கணேசன்,மற்றும் காஞ்சிபுரம்
கிளைச்சங்க கௌரவத்தலைவர் ரவி
ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரை
ஆற்றினார்கள்.மாநிலச்சங்கம் எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் குறித்து மாநிலத்தலைவர் கோபால் அவர்கள் விளக்கமாக உரையாற்றினார். மண்டலத்
தலைவர்கள் கருத்துரை வழங்கினார்கள்.
மாநிலச்சங்க செயற்குழுவில் 1.7.22ல்
மத்திய அரசு வழங்கியுள்ளதைப்போல்
மாநில அரசும் 38% அகவிலைப்படி உயர்வு
வழங்க கேட்டுக்கொள்ளவும், தொகுப்புத்
தொகை பிடித்தம் 15ஆண்டுகளுக்குப்பதில்
12ஆண்டுகளாக குறைத்து உத்தரவிடவும்,ஓய்வுபெற்ற நகராட்சி/
மாநகராட்சி பணியாளர்களின் பணிப்பதி
வேடுகளை 5ஆண்டுகளுக்குபிறகு அழிப்பதை தவிர்த்து அவர்களிடமே திரும்ப
ஒப்படைக்க அரசு மான்யூவலில்(MANUAL)
திருத்தம் செய்ய தமிழக அரசைக்கேட்டுக்
கொள்ளவும்,ஓய்வூதியர்கள் குடும்ப பாதுகாப்பு நிதி தொகை ₹.50,000/-லிருந்து
₹.1,00,000/-ஆக உயர்த்தி உத்திரவு வழங்க
அரசைக்கேட்டுக்கொள்ளவும்,, பழைய
ஓய்யவூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த
அரசாணை வெளியிடுமாறும் தமிழக அரசை
கேட்டுக்கொள்வது போன்ற முக்கிய
தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்
பட்டது கிளைச்சங்க பொருளாளர் .
கன்னியப்பன் நன்றியுரையாற்றினார்
கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்
அனைவருக்கும் சிறப்பான மதிய விருந்து
பரிமாறப்பட்டது.. மாநில செயற்குழு
கூட்டத்தை சிறப்பான முறையில் ஏற்பாடு
செய்திருந்த காஞ்சிபுரம் கிளைச்சங்கத்
தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
அனைவருக்கும் மாநிலச்சங்கத்தின் சார்பில்
நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தக்கொள்கிறேன்
மாநில செயற்குழுக்கூட்டம் காஞ்சிபுரத்தில்
சிறப்பாக நடை பெற மிகவும் உறுதுணையாக
இருந்து செயல்பட்ட செங்கல்பட்டு மண்டலத்
தலைவர் ஜீவானந்தம் அவரகளையும் மாநில
சங்கத்தின் சார்பில் மனதாரப்பாராட்டுகிறேன்

இரா.பாஸ்கரன்,
மாநில இணைப்பொதுச்செயலாளர்

Address

Varathappan Street, KOTTAI
Salem
636001

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 7pm
Sunday 9am - 7pm

Telephone

+91 94431 22996

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamilnadu Corporation and Municipal Pensioner's Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share