அருந்தமிழர் விடுதலைக் கழகம்

  • Home
  • India
  • Salem
  • அருந்தமிழர் விடுதலைக் கழகம்

அருந்தமிழர் விடுதலைக் கழகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from அருந்தமிழர் விடுதலைக் கழகம், Political organisation, Thoppur, Salem.

அருந்தமிழர் விடுதலைக் கழகம்
ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்!
சாதி அடக்கு முறைக்கு எதிராகவும், கல்வி – வேலைவாய்ப்பு – நில உரிமை – அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் சம உரிமை பெறவும் போராடும் அமைப்பு.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோபாலனூர் அருந்ததியர் பகுதியை சார்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞர் Ujjivan small Finance Ban...
13/03/2026

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோபாலனூர் அருந்ததியர் பகுதியை சார்ந்த சந்தோஷ் என்கின்ற இளைஞர் Ujjivan small Finance Bank
மைக்ரோ பைனான்ஸ்-ல் இருசக்கர வாகன கடன் பெற்றுள்ளார். இரண்டு மாதம் தவணைத் தொகை நிலுவையில் இருந்த நிலையில் அந்த மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் சந்தோஷின் வீட்டிற்கு வந்து அவமரியாதை செய்து சாதியின் குறித்து இழிவாகப் பேசி, வாகனத்தை அடாவடி செய்து பிடுங்கிக் கொண்டது. அதன் பிறகு சந்தோஷ் இரண்டு மாத தவணை தொகையை செலுத்தி விடுகிறார். அதன் பிறகும் அந்த நிறுவனம் அவருக்கு இருசக்கர வாகனத்தை கொடுக்க மறுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அநியாயமாக பறிபோனது அருந்ததியர் இளைஞர் உயிர்.

தமிழ்ப்புலிகள் கட்சியின் இரா செல்வ குமார் அவர்களின் போராட்டத்திற்கு பிறகு இதுகுறித்து சங்ககிரி காவல்துறையினர் விசாரணை செய்து சுந்தரலிங்கம், சரவணன், விக்னேஷ் பாபு ஆகியோர் மீது sc/st வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது.

மேற்படி எதிரிகள் பிணை கேட்டு கணம் SC/St சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். மேற்படி எதிரிகளுக்கு பிணை வழங்கக் கூடாது என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் ஆட்சேபனை மனு கொடுக்கப்பட்டது.

களத்தில் அருந்தமிழர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் சங்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் துரை.மாதேசு, தமிழ்ப்புலிகள் கட்சியின் பொறுப்பாளர் சங்ககிரி பிரதாப்.

Durai.Mathesh

04/03/2026

காதலித்து ஏமாற்றியதற்காக தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி பலி.
பெண்ணின் குடும்பத்தை மிரட்டும்ஆதிக்க சமூகத்தின் செயலுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி - மாதர் சங்கம் கண்டனம்....

சேலம், மார்ச் 04-

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவியை காதலிப்பதாக சொல்லி உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஏமாற்றியதை கண்டித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. தொடர்ந்து மாணவியின் குடும்பத்தினருக்கு சாதிய ரீதியாக மிரட்டல் விடும் ஆதிக்க சமூகத்தின் செயல்பாட்டை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் வன்மையாக கண்டித்து தனது அமைப்பின் சார்பில் கண்டனம் தெரிவித்து அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்காக நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகில் உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ரமேஷ் இவரது மகள் கோபிகா நங்கவள்ளி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரை இளம்பிள்ளை பகுதியில் குடியிருந்து வரும் சக்திவேல் என்பவரின் மகன் வன்னியர் சமூகத்தை சேர்ந்த கார்த்திகேயன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

நான்கு ஆண்டுகளை கடந்து காதலித்து வந்த இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி உள்ளனர் தற்போது மூன்றாம் ஆண்டு படித்து வரும் கோபிகா கல்லூரி படிப்பை முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார் இதற்கு கார்த்திகேயன் நீ தாழ்ந்த சமூகத்தை சேர்ந்தவர் அதனால் திருமணம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

இதை சற்றும் எதிர்பாராத கோபிகா மனம் உடைந்து கடந்த 13 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இது சம்பந்தமாக ஆட்டையாம்பட்டி காவல் துறையினர் முறையான விசாரணையில் ஈடுபடாமல் மெத்தன போக்குடன் செயல்பட்டு உள்ளதாகவும் தங்களின் மகளுக்கு உரிய நீதி வேண்டும் என கோபிகாவின் தாய் ரதி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

நெருக்கமாக பழகி வந்து உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்திய கார்த்திகேயன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டையாம்பட்டி காவல்துறையினர் கார்த்திகேயன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பாதிக்கப்பட்ட கோபிகாவிற்கு உரிய நீதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து காதலித்து ஏமாற்றிய கார்த்திகேயன் காவல்துறையினர் முறையாக விசாரணைக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அழித்திருந்த நிலையில்,

மாணவி கோபிகா மார்ச் மூன்றாம் தேதி மாலை அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

மாணவியை இளம்பிள்ளை அருகில் உள்ள சித்தர் கோவில் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று காதலன் கார்த்திகேயன் மற்றும் கார்த்திகேயனின் நண்பர்கள் மூன்று பேர் என மொத்தம் நான்கு பேர் சாதிய ரீதியாக மிரட்டி துன்புறுத்துதல் நடத்தியதால் மாணவி தற்கொலைக்கு மெயின் ரோடு உள்ளார் என ஆதாரங்களுடன் கோபிகாவின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் தெரிவித்த போதும் முறையான விசாரணை நடத்தவில்லை தற்போது தற்கொலைக்கு முயன்று தனது மகள் உயிரிழந்துள்ளார் அதற்கு நீதி வேண்டும் எனவும்,

தற்கொலைக்கு காரணமாகஇருந்த கார்த்திகேயன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும், உயிரிழந்த மானகியின் குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து கோபிகாவின் குடும்பத்தினர் குடியிருந்து வரும் பகுதியில் ஆதிக்க சமூகத்தினர் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோபிகாவின் உடலை வாங்க மறுத்து சேலம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போராட்டத்தை தொடர்ந்து காவல் உதவி ஆணையாளர்கள் இருவர் தலைமையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இந்திய மாணவர் சங்கம், அருந்ததியர் மக்கள் அமைப்பு ஒன்றாக சேர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

காதலிப்பதாக கூறி தற்போது ஒரு மாணவி உயிரிழந்த கொடூரம் நடந்துள்ளது கருத்தில் கொண்டு தமிழக அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கேட்கும் உதவிகளை செய்ய வேண்டும் எனவும், செயலில் ஈடுபட்டவர்கள் நான்கு பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்ட தலைவர் ஆர் குழந்தைவேல்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட பொருளாளர் பெருமா,இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி,இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் டார்வின், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் கனகராஜ், அருந்ததியர் மக்கள் அமைப்பின் நிர்வாகிகள் இராவண பிரபு, அருந்தமிழர் விடுதலைக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மாதேஸ் மற்றும் திராவிடர் தமிழர் கட்சி ராமசந்திரன் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்

பிறந்தநாள் வாழ்த்து! ~~~~~~~~~~~~~தமிழகத்தின் சமூக நீதி அரசியலை நடைமுறை ஆட்சியாக மாற்றி, திராவிட மாடலை மக்கள் வாழ்வில் ப...
01/03/2026

பிறந்தநாள் வாழ்த்து!
~~~~~~~~~~~~~
தமிழகத்தின் சமூக நீதி அரசியலை நடைமுறை ஆட்சியாக மாற்றி, திராவிட மாடலை மக்கள் வாழ்வில் பதித்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
M. K. Stalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் புரட்சிகர நல்வாழ்த்துகள்!

சமத்துவம், சமூக நீதி, சாதியின்மை, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய உயரிய இலக்குகளை தன்னலமின்றி முன்னெடுத்து வரும் தங்களின் அரசியல் பயணம், ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக திகழ்கிறது.

தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் உறுதியாக நடத்தி வரும் தங்களின் தீர்மானங்களும், துணிச்சலான செயல்பாடுகளும் மக்கள் ஆட்சியின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றன.

பெரியார்–அண்ணா–கலைஞர் வழியில் சமூக மாற்ற அரசியலை வலுப்படுத்தி, இளைஞர்களுக்கும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கும் அதிகாரப் பங்கீடு கிடைக்க செய்யும் தங்களின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

சமூக ஒற்றுமை மற்றும் மனிதநேய அரசியலின் அடையாளமாக திகழும் தங்களின் தலைமை மேலும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என்பது எங்கள் ஆவல்.

இந்த பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சமூக நீதி காக்கும் ஆட்சியும், மக்களாட்சி வலுப்பெறும் அரசியல் பாதையும் மேலும் உறுதியாகட்டும் என அருந்தமிழர் விடுதலைக் கழகம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.

நீண்ட ஆயுள் – உறுதியான தலைமை – மக்கள் நலன் நிரம்பிய ஆட்சி தொடர வாழ்த்துகள்!

தோழமையுடன்,
Durai.Mathesh
மாநில ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அருந்ததியர் இளைஞர் சங்கம்
அருந்தமிழர் விடுதலைக் கழகம்

இரங்கல் அறிக்கை~~~~~~~~~~~~இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மை போராளியும், எளிமை மற்றும் நேர்மையின் உருவகமாகத் திகழ்ந...
25/02/2026

இரங்கல் அறிக்கை
~~~~~~~~~~~~
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதன்மை போராளியும், எளிமை மற்றும் நேர்மையின் உருவகமாகத் திகழ்ந்த தலைவருமான அய்யா நல்லகண்ணு அவர்கள் மறைவுச் செய்தி எங்களை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழ்நாள் முழுவதும் விவசாயிகள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக்காக குரல் கொடுத்த அரிய அரசியல் தலைவர் அவர். அரசியல் என்பது அதிகாரப் பதவிக்காக அல்ல, பொதுநலனுக்காக என்பதைக் தனது எளிய வாழ்வால் உலகிற்கு எடுத்துக்காட்டியவர்.

சாதி, மத பேதமின்றி சமத்துவமும் சமூக நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு, தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இருக்கும். கொள்கையில் உறுதி, வாழ்வில் எளிமை, போராட்டத்தில் துணிவு — இவை அனைத்தும் அய்யா நல்லகண்ணு அவர்களின் அடையாளங்களாகும்.

அவரது மறைவு தமிழகம் மட்டுமன்றி, சமூக நீதி அரசியலுக்கும் பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்
அருந்தமிழர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கறிஞர் துரை.மாதேசு
மாநில ஒருங்கிணைப்பாளர்
அருந்தமிழர் விடுதலைக் கழகம்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தூயவன் அவர்கள் மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம்!~~~~~~~~~~~...
25/02/2026

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தூயவன் அவர்கள் மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறோம்!
~~~~~~~~~~~~~~~~~

வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் உடனடியாக கொண்டு வரப்பட வேண்டும்!
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. தூயவன் அவர்கள் மீது நடைபெற்ற கொலைவெறி தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் பொறுப்பில் இருக்கும் ஒரு வழக்கறிஞர் மீது இவ்வாறான திட்டமிட்ட வன்முறை நடத்தப்படுவது ஜனநாயகத்தின் அடிப்படைக் குணாதிசயத்திற்கே எதிரான செயலாகும்.

நீதித்துறையின் முக்கிய அங்கமாக விளங்கும் வழக்கறிஞர்கள், பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் போராளிகள் ஆவர். அவர்கள் மீது ஏற்படும் தாக்குதல்கள், தனிநபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல; நீதிக்கும், சட்டத்திற்கும் எதிரான சவாலாகும். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது மிகுந்த கவலைக்குரியது.

எனவே,
வழக்கறிஞர் தூயவன் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது தக்க மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தனித்துவமான “வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம்” உடனடியாக கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதிமன்ற வளாகங்களிலும், வழக்கறிஞர்கள் பணியாற்றும் இடங்களிலும் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட வேண்டும்.

அருந்தமிழர் விடுதலைக் கழகம், இந்த கொடூரமான தாக்குதலை கடுமையாக கண்டிப்பதோடு,
நீதிக்கும், வழக்கறிஞர்களின் பாதுகாப்பிற்கும் தமிழ்நாடு அரசு உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

வழக்கறிஞர் துரை.மாதேசு
மாநில ஒருங்கிணைப்பாளர்
அருந்தமிழர் விடுதலைக் கழகம்

“65% ஆதரவுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் திமுக வழங்க வேண்டும்!” அருந்தமிழர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல்~~~~~~~~~~~~...
22/02/2026

“65% ஆதரவுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் திமுக வழங்க வேண்டும்!”
அருந்தமிழர் விடுதலைக் கழகம் வலியுறுத்தல்
~~~~~~~~~~~~~~~~~~~
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து வெளியான கருத்துக் கணிப்புகள் மற்றும் அரசியல் ஆய்வுகள் படி, அருந்ததியர் சமூகத்தின் பெரும்பான்மையான வாக்குகள் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சமூகப் பிரிவுகளின் வாக்கு விருப்பங்களை ஆய்வு செய்த அறிக்கைகளில், அருந்ததியர் சமூகத்தில் சுமார் 65%–70% வரையிலான ஆதரவு அந்த கூட்டணிக்கு கிடைத்ததாக பதிவாகியுள்ளது.
இத்தகைய உறுதியான அரசியல் ஆதரவை வழங்கிய அருந்ததியர் மக்களுக்கு உரிய அரசியல் பிரதிநிதித்துவம் திமுக வழங்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.

எனவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அருந்ததியர் சமூகத்தின் உறுதியான ஆதரவை மதித்து, குறைந்தபட்சம் 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை அருந்தமிழர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

அருந்ததியர் மக்கள் நீண்ட காலமாக சமூக நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் உரிமைக்காக போராடி வருகின்றனர். அவர்களின் வாக்கு வலிமை வெறும் எண்ணிக்கையல்ல — அது அரசியல் மாற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் அடித்தளம் ஆகும்.

அதனால், எங்கள் சமூகத்தின் அரசியல் பங்களிப்பை கருத்தில் கொண்டு, உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவது காலத்தின் கட்டாயமாகும் என்பதை அரசியல் கட்சிகளும், கூட்டணித் தலைமைகளும் உணர வேண்டும்.

Durai.Mathesh
மாநில ஒருங்கிணைப்பாளர்
அருந்தமிழர் விடுதலைக் கழகம்.

31/08/2020

அண்ணன் நிலவேந்தன் அவர்களின் இடி முழக்கம்.

14/08/2020

சேலம் மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட இரண்டாவது காணொளி...

சேலம் மாவட்டம்,ஓமலூர் வட்டம், சக்கரைசெட்டிபட்டி கிராமம்,இந்திரா நகர் அருந்ததியர் பகுதியில் சுமார் 60 குடும்பங்களுக்கு மே...
13/08/2020

சேலம் மாவட்டம்,ஓமலூர் வட்டம், சக்கரைசெட்டிபட்டி கிராமம்,இந்திரா நகர் அருந்ததியர் பகுதியில் சுமார் 60 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்.

அங்கு மாற்று சமூகத்தை சார்ந்த ராஜாமணி என்பவர் ரைஸ்மில் வைத்து நடத்தி வருகிறார். மின் இணைப்பு பெற (HD Line) உயர்மின் அழுத்த கம்பியை அருந்ததியர் மக்கள் வசிக்கின்ற பகுதிக்குள் கொண்டுசெல்ல மின்கம்பங்கள் அமைத்தனர். இதுகுறித்து பகுதி மக்கள் கேட்கும்போது பழைய மின் கம்பங்களை மாற்றி புதிய கம்பங்கள் வைத்து தெருவிளக்குகள் அமைப்பதாக ஒரு பொய்யான தகவலை மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

மாற்று வழி இருந்தும் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் கொண்டு தீருவோம் என்று விதி முறைகளை மீறி மின்வாரிய ஊழியர்கள் பணியை செய்தது கண்டிக்கத்தக்கது.

மாற்றுப்பாதையில் மின்கம்பங்கள் அமைக்காமல் மீண்டும் பணிகள் தொடர்ந்தால் ஆதித்தமிழர் பேரவை போராட்டத்தை முன்னெடுக்கும் என்று பொதுமக்களுடன் ஓமலூர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்களை சந்தித்து மனு வழங்கினேன்.

களத்தில் மாவட்ட செயலாளர் துரை.மாதேசு மற்றும் முருகன்,ராஜேஷ் ஆகியோர்...

Address

Thoppur
Salem

Telephone

+919865117186

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருந்தமிழர் விடுதலைக் கழகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share