03/12/2024
அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்ஸிய கருத்துக்களை வாழ்வியலாக ஏற்கவைத்து முழு இயக்கவாதியாக ஒரு தோழரை முழுவதுமாக வென்றெடுப்பது அவ்வளவு சுலபம் அல்ல....
(பொட்டு,கயிறு, தீட்டு,சடங்கு, விதி மூடநம்பிக்கை,
பெண்ணடிமை )
ஆயிரம் மேடைகளில் தலைவர்களின் பேச்சை ஆழ்ந்து கேட்டு,
பல செய்திகளை, வரலாறுகளை தேடி படித்து....
மூத்த தோழர்களின் அற்பணிப்பை, சமூக பங்களிப்பை, களப்பணியை கேட்டு அறிந்து சிற்பி சிலையை அழகாக வடிப்பதை போல....
அநீதிக்கு எதிராக அறச்சீற்றமும்.., எல்லோரும் சமம் தானே...? என்கின்ற மனிதநேயமே....! ஒரு தோழரை உருவாக்கும்.
(மனிதர்களாக லட்சம் பேர் வாழும் மாவட்டத்திற்குள் கொள்கை பிடிப்புள்ள மனித நேயபண்புகள் கொண்ட தோழர்கள் ஒரு சிலரை விரல் விட்டு எண்ணி விடலாம். )
தோழர்களே.....
அடைய வேண்டிய இலக்கு (சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்) வெகு தெலைவில் உள்ளது.
இந்த சமூக மாற்றத்திற்காக எத்தனை அவமானங்களை, இழிவுகளை, வசவுகளை, விமர்சனங்களை தாங்கி கொண்டு சமூக விடுதலைக்கு பாடுபடும் ஒவ்வொரு தோழரின் உழைப்பையும் நேரத்தையும் ஆற்றலையும் இழப்புகளையும் யாராலும் ஈடு செய்ய முடியாது.
(தான் என்ற சயநலத்தோடு தன்பெண்டு தன்பிள்ளை என கடுகு வாழ்க்கை வாழ்வோர் மத்தியில்......)
சமூக விடுதலைக்காக தன்னை அற்பணித்துகொண்ட அனைத்து
#தோழர்களையும் போற்றுவோம்....!