25/10/2025
அரிமளம் - கே.புதுப்பட்டியில் அதிமுகவின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் அரிமளத்தை தனி தாலுகாவாக உருவாக்கிட முதன்முதலில் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசியது நான்தான் என புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் பிகே.வைரமுத்து பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கே.புதுப்பட்டி கடைவீதியில் அதிமுக கழகத்தின் 54-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் பொதுக்கூட்டம்
புதுக்கோட்டை அதிமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவருமான
PK.வைரமுத்து BA.EX.MLA, தலைமையில்,
நடைபெற்றது.இதற்கு முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன்,கழக செய்தி தொடர்பாளர் அப்சராரெட்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர்கள் சுரேஷ்குமார், காசிராமன் மாவட்டதுணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜநாயகம், ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர். அரிமளத்தை தனி தாலுகாவாக அறிவிக்க முதன்முதலில் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்து பேசியது நான்தான் எனவும், அரிமளம் ஒன்றியத்தில் அதிமுக செய்த சாதனைகள் பற்றியும் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக மாவட்ட செயலாளர்
PK.வைரமுத்து BA.Ex.MLA விரிவாக பேசினார். மேலும் தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி அமைய கழகத் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என சூளுரைத்தார்.இந்நிகழ்வில் அரிமளம் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக மாவட்ட, ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.