03/11/2024
அர்த்தமுள்ள இந்து மதம்
கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு
பகுதி உங்களுக்காக : -
ஆசையின் விளைவு - கோபம், பொறாமை, கொலை, களவு மற்றும் பாவம்.
இதற்கு அடிப்படை காரணம் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை.
எனவே தான் இந்து மதம் பற்றற்று இரு என்கின்றது. பற்றற்று என்றால் சந்நியாசி ஆவதல்ல. இருப்பது போதும், வருவது வரட்டும், போவது போகட்டும், மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பது பற்றற்ற வாழ்க்கை.
உன் உள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக இருக்கின்றது என்பதற்கு அடையாளமாகவே அனுதினமும் நெற்றியில் திருநீறு பூசச்சொல்கிறது.
உன் உடம்பு நோய் இன்றி ரத்தம் சுத்தமாக இருக்கின்றது என்பதற்கு
அடையாளமாகவே குங்குமம் வைக்கச் சொல்கிறது.
இவள் மணமானவள் என்று உணர்த்துவதற்காக கழுத்தில் மாங்கல்யம் சூட்டுகிறது. தன் கண்களால் ஆடவர்களை கிளறி விடக்கூடாது என்பதற்காக தலை குனிந்து நடக்கச் சொல்கிறது.