BJP - Pollachi Nagaram

BJP - Pollachi Nagaram This page will represent the activities of Pollachi Nagaram BJP.

பொள்ளாச்சி அழகப்பா லே-அவுட் வெங்கடேசா காலனி பகுதியில் பொள்ளாச்சி நகராட்சி மூலம் மக்கள் குடியிருப்பு, சார் ஆட்சியர், நீதி...
22/07/2024

பொள்ளாச்சி அழகப்பா லே-அவுட் வெங்கடேசா காலனி பகுதியில் பொள்ளாச்சி நகராட்சி மூலம் மக்கள் குடியிருப்பு, சார் ஆட்சியர், நீதியரசர் குடியிருப்பு , வட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை அலுவலர் குடியிருப்பு பகுதி மற்றும் VAO அலுவலகம் அருகில் / பின்புறம் உள்ள சாலையின் ஓரமாக நடைபாதை கடை கட்டப்படுவது தவிர்க்க வேண்டி பொள்ளாச்சி நகர பாஜக தலைவர் திரு. பரமகுரு அவர்களின் தலைமையில் பொள்ளாச்சி நகர பாஜகவினர் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தல்.

மனு முழு விபரம் :

பொள்ளாச்சி அழகப்பா லே-அவுட் வெங்கடேசா காலனி என்ற பகுதியில் பொது மக்கள் குடியிருப்பு, சார் ஆட்சியர், நீதியரசர் குடியிருப்பு, வட்டாட்சியர், மருத்துவமனைகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர் குடியிருப்பு மற்றும் VAO அலுவலகம் அமைந்து உள்ளது.

இந்த பொள்ளாச்சி நகரின் மத்திய பகுதியாகும். இந்த பகுதியில் பேருந்து மற்றும் கனரக போக்குவரத்து அதிகம் இருக்கும்.

பொள்ளாச்சி பகுதியில் அவ்வப்பொழுது போக்குவரத்து மாற்றம் செய்யும் பொழுது, இப்பகுதி சாலை வழியாகத்தான் மாற்றம் செய்யப்படுகிறது.

கனரக வாகனங்களும் இவ்வழியாகத் தான் அதிகமாக செல்கிறது. அவ்வாறான பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க இப்பகுதிகளில் தற்பொழுது நடைபாதை கடைகள் கட்டப்படுவதாகவும், அதற்கான பணிகள் நகராட்சி மூலம் தற்பொழுது துவங்கப்பட்டுள்ளது.

40 அடி அகலமான சாலை பகுதியில் அமைந்துள்ள 25 அடி அகலமான தார் சாலையை நகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பு செய்து பாதுகாப்பு நிறைந்த சார் ஆட்சியாளர் குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை ஒட்டி ரோட்டில் குழி தோண்டப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத்தினால் சாலை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் கடைகளினால் மற்றும் அதற்கு வந்து செல்பவர்களின் வாகனங்களை நிறுத்துவதால் பொள்ளாச்சி நகரின் போக்குவரத்து பாதிப்பு அடையும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் முதலிய வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படும்.

நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் செயலாகும். சார் ஆட்சியாளர் மற்றும் பிற அரசு துறை குடியிருப்புகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகும்.

ஏற்கனவே, பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் பார்க்கிங் விதிகள் மீறிய காரணத்தால் 70 க்கும் மேற்பட்ட கடைகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ள சூழ்நிலையில் தற்போதைய நகராட்சி நிர்வாகத்தின் இந்த செயல் தவறானது.

மத்திய அரசு திட்டத்தின் மூலமாக சாலையோர வியாபாரிகளுக்கு கடைகளை சாலையில் கட்டப்படுவதற்கு பதிலாக பொள்ளாச்சி நகரில் தனி வளாகம் அமைத்து அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் பொது மக்களும் எளிதாக பொருட்களை வாங்கி செல்ல வழி வகுக்கும், இந்த விஷயத்தில் தாங்கள் நடவடிக்கை எடுக்க கனிவுடன் வேண்டுகிறோம்.

https://x.com/pollachi_bjp/status/1815414096797261858

தமிழக நகராட்சிகளிலேயே அதிக சொத்து வரி வசூலிக்கும் பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள சாலைகளை பராமரிப்பதில் தொடர்ந்து அக்கறை செ...
10/07/2024

தமிழக நகராட்சிகளிலேயே அதிக சொத்து வரி வசூலிக்கும் பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள சாலைகளை பராமரிப்பதில் தொடர்ந்து அக்கறை செலுத்தாமல் இருக்கும் திமுக நகராட்சி நிர்வாகம். கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ள நகராட்சி நிர்வாகம், இதனால் டெங்கு பரவும் அபாயம்.

பொள்ளாச்சி நகரில் பல இடங்களில் குண்டும், குழியுமான உள்ள சாலைகளை சரி செய்யவும் மற்றும் புதிய சாலைகளை தரமாக அமைக்க ஆறாவது முறையாக (கடந்த 2 ஆண்டுகளில்) பொள்ளாச்சி நகர தலைவர் திரு. பரமகுரு Paramaguru Paramasivam தலைமையில் பொள்ளாச்சி பாஜகவினர் சார் ஆட்சியரிடம் (Sub Collector ) நேரில் கோரிக்கை. அதுபோல், கொசுத்தொல்லையை கட்டுப்படுத்தவும் கோரிக்கை.

https://x.com/pollachi_bjp/status/1811079765303951454?t=LEgD-kjYuHW1DKUBpXLp9g&s=19

தமிழக நகராட்சிகளிலேயே அதிக சொத்து வரி வசூலிக்கும் பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள சாலைகளை பராமரிப்பதில் தொடர்ந்து அக்கறை செ...
08/07/2024

தமிழக நகராட்சிகளிலேயே அதிக சொத்து வரி வசூலிக்கும் பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள சாலைகளை பராமரிப்பதில் தொடர்ந்து அக்கறை செலுத்தாமல் இருக்கும் திமுக நகராட்சி நிர்வாகம் :

பொள்ளாச்சி நகரில் பல இடங்களில் குண்டும், குழியுமான உள்ள சாலைகளை சரி செய்யவும் மற்றும் புதிய சாலைகளை தரமாக அமைக்க ஆறாவது முறையாக (கடந்த 2 ஆண்டுகளில்) பொள்ளாச்சி நகர தலைவர் திரு. பரமகுரு Paramaguru Paramasivam தலைமையில் பொள்ளாச்சி பாஜகவினர் சார் ஆட்சியரிடம் (Sub Collector ) நேரில் கோரிக்கை.

கோரிக்கை மனு - முழு விபரம் :

பொள்ளாச்சி நகரில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. நிறைய இடங்களில் சாலைகளில் பெரிய பள்ளங்கள் உள்ளது. தற்போது, மழை காலம் என்பதால் சாலை பள்ளங்களில் மழை தேங்கி உள்ளது.

இது சம்பந்தமாக பொள்ளாச்சி நகர பாஜக சார் ஆட்சியாளர் அலுவலகத்தில் இதுவரை கொடுத்துள்ள மனுக்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1 ) மனு எண் மற்றும் தேதி : 1147 & 3/10/2022
2) மனு எண் மற்றும் தேதி : 56 & 9/1/2023
3) மனு எண் மற்றும் தேதி : 385 & 20/3/2023
4) மனு எண் மற்றும் தேதி : 698 & 22/5/2023
5) மனு எண் மற்றும் தேதி : 1309 & 28/8/2023

இதுவரை ஐந்து முறை சார் ஆட்சியாளர் அலுவலகத்திலும் மற்றும் பல முறை நகராட்சி அலுவலகத்திலும் பொள்ளாச்சி நகரில் உள்ள பழுதடைந்த சாலைகளை சரி செய்ய கடந்த இரண்டு ஆண்டாக தொடர்ந்து நேரில் மனுக்கள் வழங்கி வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பொள்ளாச்சி நகர சாலைகளின் தரம் தொடர்ந்து மிகவும் மோசமாக உள்ளது மிகவும் வருத்தத்திற்குரியது.

தமிழகத்திலேயே அதிக சொத்து வரி வசூலிக்கும் பொள்ளாச்சி நகராட்சி சாலைகளை பராமரிப்பதில் தொடர்ந்து அக்கறை செலுத்தாமல் இருப்பது மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

பாதாள சாக்கடை மூடிகள் சாலையில் பல இடங்களில் சேதமடைந்து வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. இந்த பழுதடைந்த சாலைகளினால் வாகன விபத்துகள் நடக்கின்றன, வாகன ஓட்டிகளுக்கு முதுகுவலி உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன.

அதுபோல, சாலையில் உள்ள குழிகளினால் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். எனவே, பொள்ளாச்சி நகரில் உள்ள பழுதடைந்த சாலைகளை உடனடியாக தரத்துடன் சீரமைக்க வேண்டுகிறோம், சாலை மோசமாக உள்ள இடங்களில் சாலைகளை தோண்டி மீண்டும் புதிய சாலை தரமாக அமைக்க வேண்டுகிறோம்.

ஆனால், பழைய சாலைகளின் மீதே புதிய சாலைகள் பொள்ளாச்சி நகரில் போடப்படுகிறது. இதனால் வீடுகள் மற்றும் கடைகள் சாலை மட்டத்தின் கீழே சென்று விடுகிறது. இதனால், மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் வாழ்கை பாதிக்கிறது.

பொள்ளாச்சி நகரில் அமைக்கப்படும் சாலை எத்தனை ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது என்பதையும் பொள்ளாச்சி நகராட்சி சாலைகள் அமைக்க நகராட்சி எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்பதையும் தெரிய விரும்புகிறோம்.

பொள்ளாச்சி நகராட்சில் அமைக்கப்படும் சாலைகள் முறையாகவும், தரமாகவும் அமைக்கப்படுகிறதா என்பதை தாங்கள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க கனிவுடன் வேண்டுகிறோம்.

https://x.com/pollachi_bjp/status/1810349042947256571

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் திரு. GD கோபாலகிருஷ்ணன் அவர்களின் படத்துக்கு பா.ஜ.க மாநில தலைவர் திரு. அண்ணாமலை  அவ...
30/06/2024

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் திரு. GD கோபாலகிருஷ்ணன் அவர்களின் படத்துக்கு பா.ஜ.க மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் இன்று மதியம் மலர் தூவி மரியாதை செய்தார், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பொள்ளாச்சி நகர தலைவர் திரு. பரமகுரு அவர்கள் உடனிருந்தார்.

https://x.com/pollachi_bjp/status/1807431059338121261?t=BPUdfMyPWGYnEuRan3kHOg&s=19

https://youtu.be/3ciul231yPc?si=XGed5sM3vSqZ9ZYQ

https://jeevapres.blogspot.com/2024/06/blog-post_30.html

பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூரில் மது குடித்த இருவர் வாந்தி மற்றும் மயக்கம். பொள்ளாச்சி பகுதிகளில் சட்டவிரோத மதுபான வி...
30/06/2024

பொள்ளாச்சி அடுத்த மஞ்ச நாயக்கனூரில் மது குடித்த இருவர் வாந்தி மற்றும் மயக்கம்.

பொள்ளாச்சி பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனை, 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகளிலும் / பார்களிலும் மது விற்பனை, மதுபான பாட்டில்கள் பதுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் இயங்கும் அனைத்து திமுக அரசு நடத்தும் மதுபான கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூடவும் வலியுறுத்தி பொள்ளாச்சி நகர தலைவர் திரு பரமகுரு Paramaguru Paramasivam அவர்களின் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை பொள்ளாச்சி சார் ஆட்சியாளரை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.

ஆனால் மதுவால் ஏற்படும் துயர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு தான் உள்ளது.

கள்ளச்சாராயத்தினால் உடனடி மரணங்கள், தீவிர உடல் பாதிப்புகள் நடக்கிறது. டாஸ்மாக் மதுபானங்கள் மெல்ல கொல்கிறது.

டாஸ்மாக் மதுபானங்களினால் குடிப்பவர்களின் உடல் நிலை மெல்ல மெல்ல பாதிக்கிறது, உழைப்பது குறைகிறது, குடும்பத்தில் சண்டை, பண விரயம், தந்தை குடித்து விட்டு வீட்டுக்கு வருவதால் குழந்தைகளின் படிப்பு மற்றும் மனநிலை பாதிக்கிறது.

குடி போதையால் சாலை விபத்துக்கள், கொலை / கொள்ளை, பெண்கள் மீதான குற்றங்கள் நிகழ்கிறது.

ஒட்டு மொத்த தமிழ் சமூகமே குடியால் பாதிக்கிறது. வருங்கால சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிறது.

மாநில தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின் வேண்டுகோள் படி உடனடியாக 1000 டாஸ்மாக் கடைகளை (குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில்) மூட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ள சாராயத்தை ஒழிக்க வேண்டும், விவசாயிகளின் நலன் மற்றும் குடிப்பவர்களின் நலன் கருதி கள்ளு கடைகளை திறக்க வேண்டும்.

மது பழக்கத்தில் இருந்து மீழ நல்வாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும்.


youtu.be/Qv5SfN2cXZI?si…

https://x.com/pollachi_bjp/status/1807266353197322269?s=19

பொள்ளாச்சி பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் / பார்களையும் உடனடியாக மூட பொள்ளாச்சி நகர பாஜக நான்காவது முறையாக பொள்...
24/06/2024

பொள்ளாச்சி பகுதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் / பார்களையும் உடனடியாக மூட பொள்ளாச்சி நகர பாஜக நான்காவது முறையாக பொள்ளாச்சி சார் ஆட்சியாளரிடம் நேரில் கோரிக்கை மனு :

சமீபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் மரணங்கள் போல பொள்ளாச்சி பகுதிகளில் நடக்காமல் இருக்க பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய 4 தாலுக்காவில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் / பார்களையும் உடனடியாக மூடவும் மற்றும் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு குடியில் இருந்து மீண்டு வர தமிழக அரசு "நல்வாழ்வு மையங்கள்" பொள்ளாச்சியில் அமைக்கவும் நான்காவது முறையாக பொள்ளாச்சி சார் ஆட்சியாளரிடம் நேரில் மனு கொடுத்து பொள்ளாச்சி நகர் பாஜக தலைவர் திரு. பரமகுரு PaParamaguru Paramasivamதலைமையில் பாஜகவினர் இன்று மனு அளித்தோம்.

https://x.com/pollachi_bjp/status/1805189173617271153

1) முதல் கோரிக்கை மனு எண் : 699 (தேதி : 22/05/2023)
2) இரண்டாவது கோரிக்கை மனு எண் : 1042 (தேதி : 17/07/2023)
3) மூன்றாவதுகோரிக்கை மனு எண் : 1925 (தேதி : 18/12/2023)

கோரிக்கை மனுவில் கேட்கப்பட்ட விபரங்கள்
/ கேள்விகள் :

1) பொள்ளாச்சி நகரின் முக்கிய பகுதிகளான பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் சாலை (ATSC திரையரங்கம் எதிரில்), ராஜா மில் சாலை மற்றும் கோட்டூர் சாலை (பழைய ஓம் பிரகாஷ் திரையரங்கம் எதிரில்) இயங்கும் மதுபான கடைகள் / பார்களினால் நடந்து செல்லும் பொது மக்கள் (குறிப்பாக பெண்கள், குழந்தைகள், மாணவர்கள்) தினமும் பாதித்து கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் இந்த மதுபான கடைகள் / பார்களை மூட இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?

2) நமது மாநிலத்தில் செயல்படும் அத்தியாவசிய கடைகள் ஆன மளிகை கடை, உணவகம், மருந்துக்கடை ஆகியவைக்கு கூட கடை திறக்கப்படும் நேரம் மற்றும் மூடப்படும் நேரம் என்று வரைமுறை உள்ளது. ஆனால், டாஸ்மாக் மதுபான கடைகளில் சில்லிங் முறையில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவது ஏன் ?

3) மாவட்டத்தில் ஒரு பகுதியில் பொதுவான குற்ற சம்பவங்கள் நடந்தால் ஆட்சியாளர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் மீது தான் முதல் கட்டமாக தமிழக அரசின் நடவடிக்கை பாய்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாங்கள் கடந்த 2 ஆண்டுகளில் பொள்ளாச்சியில் இயங்கும் மதுபான கடைகளையும், பார்களையும் மூடக்கோரி 3 முறை மனு கொடுத்து வலியுறுத்தியும் இது சம்பந்தமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?

4) பொள்ளாச்சியில் இயங்கும் மதுபான பார்கள் ஆளும் திமுக கட்சி நிர்வாகிகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆளும் திமுகவினர் பணம் சேர்ப்பதற்காக மதுபான பார்களை இயக்கி அப்பாவி மக்களை மதுவிற்கு அடிமையாக்குவது மற்றும் அவர்களின் குடும்பத்தை சீரழிப்பது சம்பந்தமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?

5) டாஸ்மாக் மதுபானக் கடை முன்போ / அருகில் பெண்கள் மீதோ அல்லது பொதுமக்களை பாதிக்கும் குற்ற சம்பவங்கள் (வழிப்பறி, கொலை, சாலை விபத்து) சம்பவங்கள் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது ?

பொள்ளாச்சி நகரத்தில் கோட்டூர் மாநில நெடுஞ்சாலையில் (ஓம் பிரகாஷ் திரையரங்கம் எதிரே) தமிழக அரசின் டாஸ்மாக் (TASMAC) மதுபானக்கடை (கடை எண் : 1862 - புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது) மற்றும் மதுபான பார் இயங்கி வருகிறது.
இந்த மதுபானக்கடை இருக்கும் பகுதியில் ருக்மணி அம்மாள் பள்ளி, குட் ஷெப்பர்ட் பள்ளி, ஆர். கே நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, சூளேஸ்வரன்பட்டி ஊராட்சி துவக்க பள்ளி ஆகியவை செயல்படுகிறது. ஓம் பிரகாஷ் திரையரங்கம் எதிரே உள்ள இந்த மதுபான கடைக்கு முன்பே குடிகாரர்கள் குடித்து அட்டூழியம் செய்கின்றனர்.

இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மதுபானக்கடைக்கு முன்பு இருக்கும் பேருந்து நிறுத்தம் மூலம் தான் பேருந்துகளில் பள்ளிக்கு வந்து செல்கின்றார்கள்.

குடிகாரர்கள் குடித்து விட்டு அட்டூழியம் செய்வதால் மாணவர்களும் (குறிப்பாக பெண் குழந்தைகள்), பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
பெண்கள் மற்றும் மாணவிகளை குடிகாரர்கள் கிண்டல் செய்யும் சம்பவங்களும் பல சமயங்களில் அரங்கேறியது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மதுபானக்கடை காரணமாக இளைஞர்கள், தினக்கூலி பெரும் தொழிலாளர்கள், சில தருணங்களில் பெண்களும் கூட தினமும் குடிக்கு அடிமையாகி உள்ளனர்.
பொள்ளாச்சி கோட்டூர் சாலை டாஸ்மாக் மதுபானக்கடை (ஓம் பிரகாஷ் திரையரங்கம் எதிரில்) அருகில் உள்ள கடைகள் முன்பு குடிமகன்கள் மது அருந்தும் செயல் தொடர்ந்து நடந்து வருகிறது.

பெரும்பாலும் ஏழை எளிய பட்டியல் இன மக்கள் தினமும் மது குடிப்பதால் உடல்நிலை (குறிப்பாக கல்லீரல் & சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகிறது) பெரிதும் பாதிக்கப்பட்டு பல்வேறு நோய்கள் உண்டாகிறது, நாளடைவில் அது மரணத்திற்கு காரணமாகிறது.
தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை மதுவிற்கு செலவு செய்வதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுறது, மேலும் தங்களின் குடும்பத்தின் தேவைகளுக்கு (குறிப்பாக குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம்) பணத்தை செலவு செய்வதை விட்டு பெருமளவு குடிக்கு செலவு செய்யப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலையில், பள்ளி மாணவர்கள் / மாணவிகள் & பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல், போக்குவரத்து பாதிக்கப்படும் சூழ்நிலையிலும் வால்பாறை, ஆழியார், சமத்தூர், கோட்டூர் முதலிய நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு செல்லும் முக்கிய மாநில நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை (ஓம் பிரகாஷ் திரையரங்கம் எதிரே) உள்ளது.

சமீபத்தில் நடந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் மரணங்கள் போல பொள்ளாச்சி பகுதிகளில் நடக்காமல் இருக்க பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய 4 தாலுக்காவில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் உடனடியாக மூடவும் மற்றும் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு குடியில் இருந்து மீண்டு வர தமிழக அரசு "நல்வாழ்வு மையங்கள்" அமைக்கவும் நான்காவது முறையாக கோரிக்கை.

தவறும் பட்சத்தில், பொதுமக்களை திரட்டி அறவழி தொடர் போராட்டங்களை நடத்த பொள்ளாச்சி பாஜக தயங்காது என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் சாதனை புரிந்த தமிழக மாணவர்கள். ஏழை மாணவர்களும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்க...
07/06/2024

சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் சாதனை புரிந்த தமிழக மாணவர்கள். ஏழை மாணவர்களும், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவம் படிக்கும் கனவு நீட் தேர்வால் எளிதாகிறது.

https://x.com/pollachi_bjp/status/1798929624233283933?t=v0TdWLB8Hiy1wsFDHgZl_w&s=19

K.Annamalai Paramaguru Paramasivam Sabari Sabari Thangaraj Siva Prakash Subbiyan Nithin Thangavel Vadivel Shanmuga Sundaram Moorthi Krishna Kumar

ஒரு வார்டு உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று எந்த ஒரு மக்கள் பிரதிநிதியாகவும் பொள்ளாச்சி நகரி...
06/06/2024

ஒரு வார்டு உறுப்பினரோ, சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினர் என்று எந்த ஒரு மக்கள் பிரதிநிதியாகவும் பொள்ளாச்சி நகரில் இருந்து பாஜகவினர் இது வரை ஆகாத போதும், பொள்ளாச்சி நகரில் மொத்தம் உள்ள 87 பூத்களில் மொத்தம் 13,135 வாக்குகள் (25 சதவீதம்) பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக வளர்ந்துள்ளது.

பொள்ளாச்சி நகர பாஜக தலைவர் திரு. பரமகுரு Paramaguru Paramasivam தலைமையிலான பொள்ளாச்சி நகர பாஜக இதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் என்ன செய்தது ?

1) மக்கள் பிரச்சனைகளை (நகராட்சி சொத்து உயர்வு, கணிம வளக் கொள்ளை, பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மருத்துவர், ஊழியர்கள் பற்றாக்குறை, வசதி குறைவு, மகாலிங்கபபுரம் - சுதர்சன் நகர் குப்பை கிடங்கு பிரச்சனை ஆகியவை) கையில் எடுத்து தொடர்ந்து மனு கொடுத்து வலியுறுத்தியது. தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாததால் களத்தில் இறங்கி மிகப்பெரிய அளவில் சாலை மறியல், நகராட்சி அலுவலகம் முற்றுகை ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டு வென்றது.

2) கணிம வளக் கொள்ளைக்கு எதிராக களத்தில் இறங்கி போராடியதாலும், பகவான் ஸ்ரீ ராமரை பழித்து பதிவிட்ட திமுக நிர்வாகியை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம் நடத்தியதால் நகர தலைவர் திரு. பரமகுரு உட்பட நகர பாஜக நிர்வாகிகள் சிறையில் அடைப்பு.

3) கடந்த 2 வருடங்களில், வாரம் தோறும் திங்கள்கிழமை அன்று ஒவ்வொரு வார்டு வாரியாக மக்கள் பிரச்சனைகளை (தரமற்ற சாலை, முறையற்ற குடிநீர் விநியோகம், தெரு விளக்கு இல்லாதது & பழைய மின்கம்பம், புதிய அரசாங்க மதுபானக்கடைகள் திறப்பது, நகராட்சி நிர்வாக குளறுபடி, முதலிய), கோரிக்கைகளை (அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை வசதிகள் ஏற்படுத்துவது, பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலைகளை பணிகளை விரைவுப்படுத்துவது, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது, ஆனைமலையாறு - நல்லாறு பாசன திட்டம் நிறைவேற்றுவது முதலியவை). கடந்த 2 ஆண்டுகளில் 121 மனுக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியாளரிடமும் (Sub Collector), 24 மனுக்கள் நகராட்சி ஆணையாளரிடம் நேரில் வழங்கி மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவும், கோரிக்கைகளையும் நிறைவேற்ற களத்தில் பணி செய்தது.

4) கடந்த செப்டம்பர் மாதம் மாநில தலைவரின் 'என் மண், என் மக்கள்' பாதயாத்தரையை பொள்ளாச்சியில் மாபெரும் முறையில் நடத்தி பொள்ளாச்சியை குலுங்க வைத்தது.

5) ஜூன் 2022 பொள்ளாச்சியில் மாநில தலைவர் கலந்து கொண்ட மாவட்ட மாநாட்டில் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள், தொண்டர்கள், ஆதரவாளர்களை ஒன்று திரட்டி மாநாட்டின் வெற்றிக்கு பாடுபட்டது.

6) கட்சியில் புதியவர்களை (குறிப்பாக இளைஞர்கள்) இணைத்து கிளைகளை வலுப்படுத்தி அடிப்படை கட்டமைப்பை பலமாக உருவாக்கியது. நகரின் பல இடங்களில் கட்சி கொடி கம்பங்களை நிறுவியது.

7) ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் மக்கள் விரோத போக்கை (திமுக நகராட்சி நிர்வாகத்தின் முறைகேடுகள், மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பரம்பிக்குளம் ஷட்டர் உடைந்து நீர் வீணானது, முதலியவை) தைரியமாக சுட்டிக்காட்டி உண்மையான எதிர் கட்சியாக களத்தில் போராடியது.

8) மத்திய அரசு சம்பந்தமான கோரிக்கைகளை (பொள்ளாச்சி வழியாக புதிய ரயில்கள் இயக்கம், விவசாயம் சார்ந்த கோரிக்கைகள், பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகளை விரைவுப்படுத்த, மத்திய அரசு விளையாட்டு மையம் பொள்ளாச்சியில் அமைக்க, பொள்ளாச்சியில் பாஸ்போர்ட் அலுவலகம் அமைக்க கோரிக்கை, மத்திய அரசு கேந்த்ரா வித்யாலயா நிறுவ..) மாநில தலைவர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியது.

9) மத்திய அரசு திட்டங்களை முகாம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றது.

10) வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு கேட்டது.

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம்..

மாநில தலைவர் கூறியது போல அடுத்த 2 ஆண்டுகளில் பொள்ளாச்சி பாஜகவின் உழைப்பை இரட்டிப்பாக்கி, மக்கள் பணியை தொடர்ந்து செய்து, ஆளும் திமுக அரசாங்கம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மக்கள் விரோத போக்கினை களத்தில் வலுவாக எதிர்ப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் அன்பையும், ஆதரவையும் அதிகமாக பெற்று வெற்றி பெறுவோம்.

Nithin Thangavel Vadivel Shanmuga Sundaram Moorthi Krishna Kumar Sabari Sabari Siva Prakash Subbiyan Chakraa Prabhu Thangaraj K.Annamalai Senthilkumar

https://x.com/pollachi_bjp/status/1798725973879529667?t=D197_Cg63k5VEdqB4TyaMQ&s=19

கஞ்சா பயன்பட்டால் சீரழியும் பொள்ளாச்சி. பொள்ளாச்சி நகரில் கோட்டூர் ரோடு மேம்பாலம் கீழே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்க...
20/05/2024

கஞ்சா பயன்பட்டால் சீரழியும் பொள்ளாச்சி. பொள்ளாச்சி நகரில் கோட்டூர் ரோடு மேம்பாலம் கீழே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது. 1500 கிராம் கஞ்சா சிக்கியது.

#விடியாதிராவிடமாடல்

Paramaguru Paramasivam

https://x.com/pollachi_bjp/status/1792399435558965487?t=HMJC6CnEy3RIR-heY3_ABg&s=08

06/05/2024

மருத்துவ படிப்புகளில் சேர நீட் (NEET) தேர்வு நிச்சயம் தேவையென்று நேற்று நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவிகள் இந்த காணொளியில் கூறுகின்றனர். நீட் தேர்வு உள்ளதால் தான் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் (7.5 % ஒதுக்கீட்டில்) மருத்துவ படிப்பில் சேர முடிகிறது என்று தெளிவாக கூறுகின்றனர்.

NEET தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும் தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

வருங்காலத்தில் NEET தேர்வு எழுதும் தமிழக மாணவர்களின் கனிவான கவனத்திற்கு,
இந்த காணொளியில் தேர்வு எழுதிய அக்காக்கள் சொல்வது போல NCERT புத்தகங்களை நன்கு படியுங்கள், நிறைய மாதிரி தேர்வுகள் (Model Practice Exam) எழுதுங்கள், NEET தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேருங்கள்.

Paramaguru Paramasivam

https://twitter.com/pollachi_bjp/status/1787326936940786108?t=CUx4iV5HItKylxuvPcvocQ&s=19

https://twitter.com/polimernews/status/1787117372014276874?t=GlI4DlpwYJpllVXwanx56Q&s=19

முருக பக்தர்கள், பொது மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் திருச்செந்தூர் - பாலக்காடு தினசரி முன்பதிவில்லா...
04/05/2024

முருக பக்தர்கள், பொது மக்களின் நலன் கருதி பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் திருச்செந்தூர் - பாலக்காடு தினசரி முன்பதிவில்லா ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க பொள்ளாச்சி நகர பாஜக Paramaguru Paramasivam ரயில்வே துறையிடம் கனிவுடன் வேண்டுகிறது.

Pollachi Nagar BJP requests Railways Ministry of Railways, Government of India to include additional coaches (atleast 5 more coaches) in the Palakkad - Tiruchendur Unreserved Express via. Pollachi. Passengers (especially elders, women and children) are suffering as they are traveling by standing for 8 hours (one way) from Pollachi to Tiruchendur and in return direction.

Kindly take immediate and appropriate action on this demand which is not fulfiled for more than 5 years.

https://x.com/pollachi_bjp/status/1786592157710921744?t=Hcfpk4-PG5DWiBxqKu4J3g&s=08

இன்றைய திமுக திராவிட மாடலின் தமிழக போதை முக்கிய 3 செய்திகள் (1/5/2024):1) புத்தூர் அருகே போதை தலைக்கேறிய திராவிட மாடல் ர...
01/05/2024

இன்றைய திமுக திராவிட மாடலின் தமிழக போதை முக்கிய 3 செய்திகள் (1/5/2024):

1) புத்தூர் அருகே போதை தலைக்கேறிய திராவிட மாடல் ரேஷன் கடை ஊழியர்.

2) ஈரோடு தாளவாடியில் போதையில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன்.

3) மன்னார்குடியில் போதை ஆசாமி மருத்துவமனையில் தாக்குதல்

மது போதை, கஞ்சா, செயற்கை போதை மாத்திரை, என பல்வேறு உருவங்களில் போதை பொருட்கள் தலைவிரித்து தமிழக மக்களை நாசமாக்கி கொண்டு இருக்கும் வேளையில் கொடைக்கானலில் கோல்ப் (Golf) விளையாடி மகிழும் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும் விடியா திமுக திராவிட மாடல் முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்கள்.

https://twitter.com/pollachi_bjp/status/1785543514962768177?t=nq7B7PLhY5yJ2ynPODVFKg&s=19

Paramaguru Paramasivam

Address

Pollachi
Pollachi
642001

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP - Pollachi Nagaram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP - Pollachi Nagaram:

Share