Chinna dhamal cheruvu

Chinna dhamal cheruvu Chinna dhamal cheruvu is one of the best & biggest panchayath in pernambut municipality, this pancha

10/07/2021

படிக்காமலே நினைவாகி விட்டது உன் நினைவுகள்.

🌏அகிலம் எல்லாம் விளங்கும்👸அம்மன் அருள்! ...அது 👫அடியவர்துயர் தீர்க்கும் !ஆயிரம் நலம் சேர்க்கும்அற்புத விருந்தாகுமே !!!🌏இ...
17/01/2021

🌏அகிலம் எல்லாம் விளங்கும்
👸அம்மன் அருள்! ...
அது 👫அடியவர்
துயர் தீர்க்கும் !
ஆயிரம் நலம் சேர்க்கும்
அற்புத விருந்தாகுமே !!!
🌏இவ்வுலகில் ✊எல்லோரும் 👌நலம் பெற்று வாழ 🙇அருள்புரிவாயாக...

🙏அருள்மிகு பட்டாளம்மன் சிரசு ஊர்வலம்🙏

நல்லா இருக்கு உங்க நியாயம்...
20/12/2020

நல்லா இருக்கு உங்க நியாயம்...

22/11/2020

Weather update

25 ம் தேதி நிவார் புயல் சென்னைக்கும் புதுவைக்கும் இடையில் கரையை கடக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புயலின் கண் எனப்படும் மைய பகுதிக்கு வடக்கே தான் அதீத கனமழை பெய்யும். அதனால் புதுவை முதல் மஹாபலிபுரம் வரை எங்கு கடந்தாலும் மிக சிறப்பு.

வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை , கடலூர் ,செங்கல்பட்டு,திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 100 மி.மீ மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது....

இந்த புயல் வேலூர் மாவட்டத்தை கடந்து குடியாத்தம் வழியாக ஆந்திரா சென்று வலுவிழக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதீத கனமழைக்கு தயாராகுங்கள். நிரம்ப சந்தோஷம்...

புயலின் கண் பகுதியை சுற்றி 50 கி.மீ பரப்பளவு வெறும் காற்று வெற்றிடம் இருக்கும் என்பதால் கண் பகுதி கடக்கும் இடத்தில் பெரிய மழை இருக்காது...

எப்படியோ வட மாவட்டங்களில் மழையை அள்ளி தர காத்திருக்கிறது நிவார்...

நன்றி :வேலூர் மண்டல வானிலை

22/09/2020
பிரம்மனாய் வந்து தங்களை படைத்ததும் நீர்..!உலக உயிர் இனங்களைக் காப்பதும் நீர்..!மறுவாழ்வு உண்டு என்று உணர்த்தியதும் நீர்....
21/09/2020

பிரம்மனாய் வந்து தங்களை படைத்ததும் நீர்..!
உலக உயிர் இனங்களைக் காப்பதும் நீர்..!
மறுவாழ்வு உண்டு என்று உணர்த்தியதும் நீர்..!
வாழ்நாளை நீடிக்கும் யுக்தியைக் கொன்டவர் நீர்..!
கடவுளை நம்பாதவர்களையும் இருக்கார் ஏன்று உணரவைத்ததும் நீர்..!
கொடிய நோய்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதும் நீர்..!
முயற்சி திருவிணையாக்கும் என்ற கூற்றிற்கு பெயர்ப் போனதும் நீரே..!!

என்றும் உங்கள் பிரிவில் வாடும் ..

உறவுகள்.

09/09/2020
09/09/2020



மோர்தானா அணை நிரம்புகிறது! மக்களே உஷார்!!கலெக்டர் எச்சரிக்கை!!!

கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே உள்ள மோர்தானா அணை நிரம்பி வருவதால் அணையை சுற்றியுள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோர்தானா கிராமம், கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே உள்ள மோர்தானா அணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சண்முகசுந்தரம் இ.ஆ.ப அவர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் பார்வையிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், மோர்தானா கிராமம், கௌண்டன்யா ஆற்றின் குறுக்கே மோர்தானா அணை 1990-ஆம் வருடம் பணிகள் தொடங்கப்பட்டு, 2001 ஆம் ஆண்டில் பணிகள் முடிக்கப்பட்டது.

கௌண்டன்யா ஆறு ஆந்திரமாநிலம் புங்கனூரிலிருந்து பலமநேர் வழியாக 25 கி.மீ தூரத்தை கடந்து தமிழக எல்லையான சைனகுண்டா கிராமத்தை வந்தடைகின்றது.

இந்த அணையானது 11.50 மீட்டர் உயரத்தில் நீரை தேக்கிவைக்கும் வகையிலும் 261.36 மில்லியன் கனஅடி கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் மூலம் 19 ஏரிகள் மூலமாகவும் மற்றும் நேரடிபாசனமாகவும் 8367 ஏக்கர் நிலங்களும், 49 கிராமங்களும் பயன்பெறுகின்றன.

07.09.2020 அன்று பெய்த கனமழையால் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் இன்று(09.09.2020) அணையின் நீர் மட்டம் 10.20 மீட்டர், அதன் கொள்ளளவு 223.071 மில்லியன் கனஅடி உள்ளது.

மேலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மோர்தானா அணை முழு கொள்ளவை விரைவில் எட்டவாய்ப்புள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

மோர்தானா அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட உள்ள நிலையில் ஆற்று கரைப்பகுதியில் உள்ள மோர்தானா, கொட்டாரமடுவு, ஜிட்டப்பள்ளி, சேம்பள்ளி, ஜங்காலப்பள்ளி, உப்பரப்பள்ளி, தட்டப்பாறை, ஆண்டகான்பட்டி, ரங்கசமுத்திரம், ரேணுகாபுரம், அக்ராவரம், பெரும்பாடி, மீனூர், முங்கப்பட்டு, சீவு+ர், குடியாத்தம் நகரம், இந்திராநகர், ஒலக்காசி, சித்தாத்தூர் மற்றும் ஐதர்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வருவாய்துறை மூலம் தண்டோரா மூலம் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து மோர்தானா கிராமம் பொதுமக்களிடம் தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதி, மழைநீர் சேமிப்பு குளம் அமைத்தல் போன்ற பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பொதுமக்களின் கோரிக்கைகளான வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நீர்வள ஆதாரம் எம்.சண்முகம், உதவி செயற்பொறியாளர் டி.குணசீலன், உதவி பொறியாளர் எம். தமிழ்செல்வன், வட்டாட்சியர் திருமதி. வத்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரி, திருமதி. ஹேமலதா மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், வேலூர்.

Address

Pernambut
Pernambut
635810

Telephone

9659941998

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chinna dhamal cheruvu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share