26/11/2013
இரவு, பகலாக நடந்த
தேடுதல் வேட்டையில், ஏடிஎம்
கொள்ளையனை போலீஸ்
நெருங்கி விட்டதாக,
பெங்களூருக்கு கிடைத்த தகவல்கள்
தெரிவிக்கின்றன. பெங்களூரில்
வங்கி பெண்
அதிகாரி ஜோதியை தாக்கிய மர்ம
நபரை இரவு, பகலாக தேடும்
பணியில் தனிப்படை போலீசார்
ஈடுபட்டுள்ளனர். ஆனால்,
இதுவரை அவனது பெயர்,
எங்கு இருக்கிறான்
என்பது தொடர்பாக எந்த தகவலும்
தெரியாததால், அவனை கைது செய்ய
முடியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம்
ஆந்திர மாநிலத்தில் மர்ம நபர்
பிடிபட்டதாக பரபரப்பு தகவல்
வெளியானது. இறுதியில், அங்கிருந்த
ஒரு ஏடிஎம் மையத்தில் பணம்
எடுப்பது போன்று,
கண்காணிப்பு கேமராவில் பதிவான
வீடியோ மட்டும் வெளியானது.
அந்த புட்டேஜ் கடந்த 12ம்
தேதி பதிவானவை.
ஜோதி மீது கொலைவெறி தாக்குதல்
நடத்துவதற்கு முன்பு, ஆந்திர
மாநிலம் தர்மாவரம் பகுதியை சேர்ந்த
55 வயது பெண்
பிரமிளாவை கொலை செய்துவிட்டு,
அவரது ஏடிஎம் கார்டை திருடி பணம்
எடுக்க வந்தபோது, ஏடிஎம்
மையத்தில் பதிவானதுதான் இந்த
புட்டேஜ். சம்பவம் நடந்த 2 நாட்களில்
மொத்தம் 1,900 ரூபாய்
எடுத்திருக்கிறான்.
அந்த பணத்தை கொண்டு பெங்களூர்
வந்து ஜோதியை தாக்கி விட்டு,
அவரிடம் இருந்து திருடிய
செல்போனை ஆந்திர மாநிலம்
இந்துப்பூரில் ஒரு மொபைல்
கடையில் விற்றிருக்கிறான்.
அதன்பிறகு அவன் எங்கு சென்றார்,
என்பது குறித்த எந்த தகவலும்
கிடைக்கவில்லை. இதையடுத்து,
கர்நாடகா மட்டுமல்லாமல் ஆந்திர
மாநில போலீசாரும்
குற்றவாளியை தீவிரமாக
தேடி வருகின்றனர். இந்நிலையில்,
குற்றவாளி அனந்தபூர்
அல்லது கடப்பாவை சேர்ந்தவராக
இருக்கலாம் என்று ஆந்திர போலீசார்
உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து பெங்களூர்
போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. ஆந்திரா விரைந்த
5 தனிப்படை போலீசார் கடப்பா,
அனந்தபூர்
மாவட்டத்தை முற்றுகையிட்டு,
ஆந்திர மாநில போலீஸ் உதவியுடன்
தேடி வருகின்றனர். இங்குள்ள
ஷாப்பிங் மால், பஸ் ஸ்டாண்ட்,
ரயில்வே ஸ்டேஷன், ஏ.டி.எம்
மையங்கள், வங்கிகளில் தீவிரமாக
தேடி வருகின்றனர். போலீசாரின் இந்த
நடவடிக்கையால் மர்ம நபர் தப்பிச்
செல்ல முடியாத
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில்,
குற்றவாளி பிடிப்படுவான்
என்று பெங்களூர்
தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆந்திர மாநில போலீசார்
கூறுகையில், ‘‘மர்ம
நபரை வலைவீசி தேடி வருகிறோம்.
கத்ரி போலீசில் பதிவான
கொலை வழக்கில், மர்ம
நபருக்கு தொடர்பு இருப்பதால்,
அவரை பிடித்து விசாரணை நடத்த
முடிவு செய்துள்ளனர். முதலில்
எங்களது விசாரணை முடிந்த பிறகே,
பெங்களூர் போலீசாரிடம்
குற்றவாளியை ஒப்படைப்போம்.
விரைவில் அவனை நாங்கள்
பிடித்து விடுவோம்’’ என்றனர்.
இதற்கிடையே, மர்ம
நபரை பிடித்து விட்டதாகவும்,
அவரிடம் ரகசிய இடத்தில் தீவிர
விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்,
பெங்களூருக்கு கிடைத்த
உறுதிப்படுத்த முடியாத தகவல்கள்
தெரிவிக்கின்றன.