இது,
மதுரை மாவட்ட
நாடாளும் மக்கள் கட்சியின்
முகநூல் பக்கம்
ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
நிறுவனத்தலைவர்,
நாடாளும் மக்கள் கட்சி
&
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை,
கட்சியில் இணைய தொடர்புக்கு:-
9176-345-468. நாடாளும் மக்கள் கட்சி - Naadaalum Makkal Katchi (NMK)
----------------------------------------------------------------------
நாடாளும் மக்கள் கட்சியின், நிறுவன
த் தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான
ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
பள்ளிப் பருவத்திலிருந்தே பல்வேறு சமூக நலப்பணிகளைச் செய்ததுடன், மாணவர்களின் நலனுக்காகப் பல்வேறு நலப்பணிகளைச் செய்துள்ளார்.
கடந்த 2001-2004ஆம் ஆண்டு, சென்னை மாநிலக்கல்லூரியில், தமிழ் இலக்கியம் படித்தபொழுது, பல்வேறு சமூக நல அமைப்புகளில் இணைந்து, சமூக நலப்பணிகளையும், மக்கள் நலப்பணிகளையும் செய்துள்ளார்.
கடந்த 2003ஆம் ஆண்டு, “இந்த இமயத்தின் சிகரங்கள்”என்ற முதல் கவிதை நூல் வெளியிட்டு, புரட்சிக்கவிஞராய் எழுத்துலகில் தனி முத்திரை பதித்தார்.
கன்னித்தமிழ்க் கவிஞர் (கவிஞர் சுரதா அவர்களால் வழங்கப்பட்டது), கவிமாலுமி, கவிராஜன், கவிமுகில், கவியருவி, இளம்பெரியார், எழுச்சிக்கவிஞர், வாழும் காந்தி, கவித்திலகம், அக்னி அரசன், இந்தியச்சிற்பி, சத்யாக்ரகி போன்ற விருதுகள் மற்றும் சிறப்பு பெயர்களை கற்றறிந்த பெரியோர்கள், தமிழ்ச் சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வழங்கி கெளரவித்துள்ளனர்.
கடந்த 2005ஆம் ஆண்டு, கோயம்புத்துார், அரசு சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டம் பயின்ற பொழுது, அக்னி மாணவர் நலச்சங்கத்தை நிறுவி, மாணவர்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தி, வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 12.01.2008ஆம் ஆண்டு, அக்னி பொதுநலச்சங்கத்தை நிறுவி, பல்வேறு மக்கள் நலம் மற்றும் சமூக நலப்பணிகளைச் செய்துள்ளார்.
அரசியல் பயணத்தின் முதல் முயற்சியாக, சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரில் முதுகலை சட்டம் பயின்ற பொழுது, “அகண்ட பாரதம் மக்களுக்கே” என்ற உயர்ந்த இலட்சியத்தில், “தேசபக்தி” என்ற இயக்கம் ஆரம்பித்து, கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற, நாடாளுமன்றத் தேர்தலில், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, 7,012 மற்றும் 490 வாக்குகளைப் பெற்று, மிகப்பெரிய அரசியல் அனுபவம் பெற்றார்.
மீண்டும், 2011ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, 1860 வாக்குகளைப் பெற்றார். “மக்கள் சக்தி” உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுடன் இணைந்து, தமிழ்நாட்டில் 35 இடங்களில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்களின் பேராதரவுடன், தொடர்ந்து மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கீழமை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணி செய்து கொண்டே, பல்வேறு மக்கள் நலப்பணிகளையும், சமூக நலப்பணிகளையும் செய்து வருகின்றார்.
மாணவர்களின் நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும், ஊழல் ஒழிப்பிற்காகவும் (அண்ணா ஹசாரேவின் ஜன்லோக்பால் நிறைவேற்றக்கோரியும்), இலங்கைத் தமிழர் நலனுக்காகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி என்று இதுவரை 25 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளார்.
“அரசியல் மாற்றம், நேர்மையான இளைஞர்களால் மட்டுமே ஏற்படும்” என்ற உயர்ந்த நோக்கத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைத்து, ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், நாட்டில் நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தவும், கடந்த 23.11.2020ஆம் தேதி, தன்னம்பிக்கையும், தைரியமும், நேர்மையும் மிக்க துடிப்பான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களால் "நாடாளும் மக்கள் கட்சி" ஆரம்பிக்கப்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு (பதிவு எண்.56/194/2020-2021),
கடந்த 2021 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவொற்றியூர், திருக்கோவிலூர், ரிஷிவந்தியம், மாதவரம், விக்கிரவாண்டி, நாமக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, முதல் தேர்தல் அரசியல் களம் கண்டது.
நாடாளும் மக்கள் கட்சி, தொடர்ச்சியாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்களில் போட்டியிட்டு, ஜனநாயகக் கடமையினை ஆற்றி வருகிறது.
அத்துடன், கடந்த 2023-ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, 324 வாக்குகள் பெற்று, கட்சிகள் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் போட்டியிட, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் "ஆட்டோ சின்னம்" ஒதுக்கப்பட்டது.
2024-நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் அதிக இடங்களில் போட்டியிட்ட கட்சிகளான,
நாம் தமிழர் கட்சி (39), பகுஜன் சமாஜ் கட்சி (39),
அதிமுக, பாஜக, திமுக ஆகிய ஐந்து கட்சிகளுக்கு,
அடுத்த நிலையில், 6வது இடத்தில்
நாடாளும் மக்கள் கட்சி (12+1)...
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற, விக்கிரவாண்டி இடைத்தேரதல் மற்றும் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் (392 வாக்குகள்) ஆகிய தேர்தல்களில் பங்கெடுத்து, தொடர்ந்து ஜனநாயகக் கடைமை ஆற்றிவருகிறோம்.
தற்பொழுது, தமிழ்நாடு மட்டுமல்லாமல், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, நாடாளும் மக்கள் கட்சி, தேசிய கட்சியாக வளர்ந்து வருகின்றது. இன்னும் பிற மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகின்றோம்.
நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை
உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்...
இளைய சமுதாயமே...! வாருங்கள்...!
வரலாறு படைப்போம்...!
தலைவனைத் தேடாதே...!
நீ தலைவனாக மாறு...!
தற்பொழுது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கட்சியை வலுப்படுத்தி வருவதுடன், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான மக்கள் பணி செய்து வருகின்றது.
சமுதாய மாற்றம்
மற்றும்
அரசியல் மாற்றம்
விரும்பும் மாணவர்களே...!
இளைஞர்களே...!
சமூக ஆர்வலர்களே...!
வாருங்கள்..!
ஒன்றிணைவோம்..!
வென்று காட்டுவோம்..!
ஜெ.அக்னி செல்வராசு, M.Sc., M.L.,
நிறுவனத்தலைவர்,
நாடாளும் மக்கள் கட்சி,
&
வழக்கறிஞர் & உறுதிமொழி ஆணையர்,
உயர்நீதிமன்றம், சென்னை.
கட்சியில் இணைய தொடர்புக்கு:- 9176-345-468.