15/03/2024
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் சார்பில் கடலூர் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் அவர்கள் ஒருங்கிணைப்பில் கடலூர் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக மாநில பொதுச் செயலாளர் ம.சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ அவர்கள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எஸ் முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர், அவர்களை முன்னாள் மாவட்ட செயலாளர் சா.முல்லைவேந்தன் அவர்கள் கௌரவித்தார்.
மாணவர் பேரவை தேசிய செயலாளர் A.R.அபுபக்கர் ரஸ்வி அவர்கள் கண்டன உரையாற்றினார்.
விசிக மாநில பொதுச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செலவன் அவர்களுக்கு முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.