26/06/2026
🟢⚪🟢 2019-வது நாளின் காலைத்தியானம் 26/06/2026 !!!
இந்த காலைவேளையில், "உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன்” ..... "I HAVE HEARD YOUR PRAYER AND SEEN YOUR TEARS" என்று (2 KINGS) 2 இராஜாக்கள் 20:5-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப்போகிறோம்.
நம் அன்பின் தேவன், நாம் ஊக்கமாய் ஏறெடுக்கிற விண்ணப்பத்தைக் கேட்டு, நாம் வேதனையில் வடிக்கிற கண்ணீரைப் பார்த்து நமக்கு ஆறுதலையும், விடுதலையும் தருகிறார்.
வேதத்திலே மரணத்தருவாயிலிருந்த எசேக்கியா, கர்த்தரை நோக்கி, அழுது விண்ணப்பம் பண்ணியபோது, ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக கர்த்தருடைய வார்த்தை உண்டாகி: “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்” என்று கூறி, சுகப்படுத்தியதாக இந்தநாளின் தியானபகுதி மூலமாக அறிகிறோம்.
மேலும், குழந்தையில்லாத அன்னாள் "… தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால்… நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்..." என்று மிகவும் அழுது, விண்ணப்பம் பண்ணினாள். கர்த்தர் அவள் கண்ணீரோடு ஏறெடுத்த விண்ணப்பத்தைக் கேட்டு, சாமுவேல் என்ற குழந்தையைக் கொடுத்து ஆசீர்வதித்தார் என 1சாமுவேல் 1-ம் அதிகாரத்தில் பார்க்கிறோம்.
எனவே பிரியமானவர்களே,
நம் தேவைகள் எதுவாயிருந்தாலும், கர்த்தரை நோக்கி விண்ணப்பம் செய்வோம். நாம் தனிமையிலே விண்ணப்பம் செய்யும்போது வடிக்கிற கண்ணீரை நம் அன்பின் தேவன் காண்கிறார். நம் கண்ணீரைத் துடைத்து, நம்மை ஆறுதல்படுத்தி, நம் தேவைகளை சந்திக்கிறார். ஆகவே தைரியமடைவோம்.
ஜெபம்: எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே, இந்த நாளின் வார்த்தையின்படியே, தேவனாகிய நீர் எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, எங்கள் கண்ணீரைக்கண்டு, எங்களை ஆசீர்வதிப்பீர் என விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே....ஆமென்.
ஜெப தேவைகளுக்கும், ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488.
WhatsApp- 7400472200
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India
NMPF - Mumbai India.