அருந்தமிழ்கண்ணன்

அருந்தமிழ்கண்ணன் this is YouTube page like share subscribe.

08/12/2024
பத்திரிக்கை செய்தி :23/09/2024அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி  கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக பணியாற்றி வந்த பிரதாப...
25/09/2024

பத்திரிக்கை செய்தி :23/09/2024

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராக பணியாற்றி வந்த பிரதாப் அவர்கள் கல்லூரி மாணவியிடம் ஒருவரிடம் பாலியல் வன்கொடுமை செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் NCC யில் பணியாற்றும்போது பாலியல் புகாரிக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதன் பின் என்சிசி பொறுப்பில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேற்கண்ட பேராசிரியர் மீது உயர்கல்வித்துறை துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் , கல்லூரி உள் விசாரணை குழு இது போலான பிரச்சனைகளில் உரிய தலையீடு செய்ய வேண்டும் மாதம்தோறும் மாணவிகளுக்கு நடைபெறக்கூடிய பிரச்சனைகள் குறித்த கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும்கல்லூரியில் மாணவிகள் பாதுகாப்பான முறையில் கல்வி கற்கும் சூழலை கல்லூரி நிர்வாகம் உருவாக்கிட வேண்டும் மாணவிகளுக்கு அவ்வப்போது உளவியல் ஆலோசனை வழங்கிட வேண்டும்

கல்வி நிலையங்களில் தொடரும் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது நிசார் தலைமை தாங்கினார் ,மாவட்டச் செயலாளர் தே.சரவணன் கண்டன உரையாற்றினார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.கன்னிகா,மாவட்ட குழு உறுப்பினர் சஞ்சய் உள்ளிட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

அரசுப் பள்ளியில் கஞ்சா போதை உச்சத்தில் அட்டூழியம் செய்த சமூக விரோதிகளை காவல்துறை கைது செய்திடுக, அரசு பள்ளிகளின் கட்டமைப...
05/09/2024

அரசுப் பள்ளியில் கஞ்சா போதை உச்சத்தில் அட்டூழியம் செய்த சமூக விரோதிகளை காவல்துறை கைது செய்திடுக, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவோம் அதனுடைய பாதுகாப்பை உறுதி செய்யவும் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு இந்திய மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் செப்டம்பர் 05/09/2024

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு அம்பேத்கர் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள நிலையில், திங்கட்கிழமை அன்று வழக்கம் போல காலை பள்ளியில் உணவு சமைப்பதற்காக பள்ளியில் உள்ள சமையல் ஊழியர் அரசு பள்ளிக்கு வருகை தந்துள்ளார். அப்பொழுது பள்ளியின் சுவற்றில் சமையலறை உள்ளிட்ட இடங்களில் மனிதக் கழிவால் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டு, பூட்டில் மனித கழிவு பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இதுகுறித்து எருமைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது இங்கு படிக்கக்கூடிய மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்
சமூக விரோதிகளின் இந்த செயலுக்கு இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தும், பள்ளிக்கு காவலர்கள் இல்லாமலும் உள்ளது. எனவே காவல்துறை உடனடியாக இந்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும், அதேபோன்று மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதற்கு மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் இந்திய மாணவர் சங்க நாமக்கல் ஒன்றிய செயலாளர் தோழர் தனுஷ்,மாவட்டத் தலைவர் தோழர் தங்கராஜ் மற்றும் ஒன்றிய துணைத் தலைவர் தோழர் ராகுல் உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் உடன் சென்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பள்ளி குறித்து அருகில் உள்ள பொதுமக்களிடம் விசாரிக்கும் போது இந்த ஊர்களில் உள்ள சில இளைஞர்கள் பள்ளி விடுமுறை நாட்களிலும் பள்ளி முடிந்த இரவு நேரங்களிலும் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கும் மற்றும் கஞ்சா அடிப்பதற்கும் இந்தப் பள்ளியினை பயன்படுத்தி வருகின்றனர் என கூறியுள்ளனர். இந்த எருமப்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை சந்து கடைகள் அதிகளவு நடைமுறையில் உள்ளதை கண்டித்து ஜனநாயக அமைப்புகள் ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தி உள்ளனர். இதனை அங்குள்ள காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.எனவே மாவட்ட காவல்துறை இதனை உடனடியாக சந்துக்கடைகளையும் கஞ்சா விற்பனையும் தடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பள்ளியில் வட்டார தொடக்க பள்ளி கல்வி அலுவலர் அலுவலகமும் உள்ளது. பள்ளிக்கல்வி துறையின் நிர்வாக சீர்கேட்டால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. எனவே வட்டார தொடக்கப்பள்ளி கல்வி அலுவலரையும் மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரையும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பாக இன்று மதியம் 2:30 மணி அளவில் நாமக்கல் CEO அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் யாழினி,ஒன்றிய செயலாளர் தனுஷ் ,துணைத் தலைவர் ராகுல் மற்றும் அபு உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் எருமப்பட்டி பகுதிகளில் போதை பொருட்கள் மற்றும் கஞ்சா பொருள்கள் ஏராளமாக நடைமுறையில் உள்ளது இதனை காவல்துறை உடனடியாக தடுத்து குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் எருமப்பட்டி காவல் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அரசு பள்ளியில் மீது முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் இவர்கள் தனியார் பள்ளிகளில் பணம் பெற்றுக் கொண்டு அரசு பள்ளிகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா என்ற கேள்வினை இந்திய மாணவர் சங்கம் சார்பாக முன்வைக்கப்படுகிறது என்று போராட்டத்தில் பேசப்பட்டது.
ஆர்ப்பாட்ட முடிந்து மாவட்ட கல்வி முதன்மை அலுவலரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டது.

இந்திய மாணவர் சங்கம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 19/09/2024 அன்று கல்லூரி முதல்வர் அறையில் உள்ளிருப்பு போராட்டம்...
04/09/2024

இந்திய மாணவர் சங்கம்
திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் 19/09/2024 அன்று கல்லூரி முதல்வர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் அறிவிப்பு

இந்திய மாணவர் சங்கம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி கிளைக் கூட்டம் இன்று 03/09/2024 நடைப்பெற்றது. இதில் கிளை தலைவர் ஜீவிதா தலைமை ஏற்றார். மாவட்ட தலைவர் தங்கராஜ் பங்கேற்றார்.
1. மாணவ மாணவிகள் கழிப்பறை சுத்தம் செய்தல்,
2. கல்லூரி சிற்றுண்டி அமைத்து தருதல்,
3. விடுதியில் தரமான உணவு வழங்குவதை உறுதி செய்தல்,
4. கல்லூரி வளாகத்தில் உள்ள புல்புதர்களை சுத்தம் செய்தல்,
5. வணிகவியல் துறை அருகில் உள்ள புதிய கட்டிடத்தை விலங்கியல் மற்றும் தாவரவியல் துறை பயன்பாட்டிற்கு விடுதல்,
6. பெற்றோர் ஆசிரியர் கழக வரவு செலவுகளை மாணவர்களுக்கு தெரியபடுத்துதல்,
7. கல்லூரி வகுப்பறைகளில் மின் விசிறி மற்றும் மின் விளக்குகள் அமைத்தல்,
8. ஆசிரியர் காலிபணியிடங்களை நிரப்புதல்
9. கல்லூரி முதல்வர் கல்லூரிக்கு 11:30 மணி அளவில் வருவதை தவித்துவிட்டு கல்லூரி நேரமான 8:40 மணிக்கு கல்லூரிக்கு வர வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டது. கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் 19/09/2024 அன்று கல்லூரி முதல்வர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை கல்லூரி முதல்வர் திரு பானுமதி அவர்களிடம் மனுவாக அழிக்கப்பட்டது.

அரசுப் பள்ளியில் கஞ்சா போதை உச்சத்தில் அட்டூழியம் செய்த சமூக விரோதிகளை கைது செய்திடுக இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்ந...
03/09/2024

அரசுப் பள்ளியில் கஞ்சா போதை உச்சத்தில் அட்டூழியம் செய்த சமூக விரோதிகளை கைது செய்திடுக இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்
நாமக்கல் செப்டம்பர் 3

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி டவுன் பஞ்சாயத்து 6வது வார்டு அம்பேத்கர் பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கல்வி பயின்று வரும் நிலையில், பள்ளி போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ள நிலையில், திங்கட்கிழமை அன்று வழக்கம் போல காலை பள்ளியில் உணவு சமைப்பதற்காக பள்ளியில் உள்ள சமையல் ஊழியர் அரசு பள்ளிக்கு வருகை தந்துள்ளார். அப்பொழுது பள்ளியின் சுவற்றில் சமையலறை உள்ளிட்ட இடங்களில் மனிதக் கழிவால் ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்டு, பூட்டில் மனித கழிவு பூசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இதுகுறித்து எருமைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது இங்கு படிக்கக்கூடிய மாணவர்களையும் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில்
சமூக விரோதிகளின் இந்த செயலுக்கு இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு வன்மையான கண்டனங்களை தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து நாமக்கல் மாவட்ட குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்தும், பள்ளிக்கு காவலர்கள் இல்லாமலும் உள்ளது. எனவே காவல்துறை உடனடியாக இந்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும், அதேபோன்று மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதற்கு மேல் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், இந்திய மாணவர் சங்கம் நாமக்கல் மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் இந்திய மாணவர் சங்க நாமக்கல் ஒன்றிய செயலாளர் தோழர் தனுஷ்,மாவட்டத் தலைவர் தோழர் தங்கராஜ் மற்றும் ஒன்றிய துணைத் தலைவர் தோழர் ராகுல் உள்ளிட்ட மாணவர் சங்க நிர்வாகிகள் உடன் சென்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். இப்பள்ளி குறித்து அருகில் உள்ள பொதுமக்களிடம் விசாரிக்கும் போது இந்த ஊர்களில் உள்ள சில இளைஞர்கள் பள்ளி விடுமுறை நாட்களிலும் பள்ளி முடிந்த இரவு நேரங்களிலும் போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கும் மற்றும் கஞ்சா அடிப்பதற்கும் இந்தப் பள்ளியினை பயன்படுத்தி வருகின்றனர் என கூறியுள்ளனர். இந்த எருமப்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்பனை சந்து கடைகள் அதிகளவு நடைமுறையில் உள்ளதை கண்டித்து ஜனநாயக அமைப்புகள் ஏற்கனவே பல போராட்டங்கள் நடத்தி உள்ளனர். இதனை அங்குள்ள காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.எனவே மாவட்ட காவல்துறை இதனை உடனடியாக சந்துக்கடைகளையும் கஞ்சா விற்பனையும் தடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பள்ளியில் வட்டார தொடக்க பள்ளி கல்வி அலுவலர் அலுவலகமும் உள்ளது. பள்ளிக்கல்வி துறையின் நிர்வாக சீர்கேட்டால் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது.

இந்திய மாணவர் சங்கம் நாமகிரிப்பேட்டை 4-வது ஒன்றிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய ஒன்றிய குழுவிற்கும் ஒன்றிய குழுவின...
03/09/2024

இந்திய மாணவர் சங்கம் நாமகிரிப்பேட்டை 4-வது ஒன்றிய மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட புதிய ஒன்றிய குழுவிற்கும் ஒன்றிய குழுவின் தலைவர் தோழர் சதீஷ்குமார் மற்றும் செயலாளர் தோழர் நர்மதா ஆகிய அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.....SFI NAMAKKAL

பத்திரிக்கை செய்தி:01:09:2024இந்திய மாணவர் சங்கம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய 4-வது மாநாடு நாமகிரிப்பேட்டை சித்தி விநாயகர் மண...
02/09/2024

பத்திரிக்கை செய்தி:01:09:2024

இந்திய மாணவர் சங்கம் நாமகிரிப்பேட்டை ஒன்றிய 4-வது மாநாடு நாமகிரிப்பேட்டை சித்தி விநாயகர் மண்டபத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக நாமகிரி பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி மண்டபத்திற்கு பேரணியாக சென்று மாநாடு துவங்கப்பட்டது.

மாநாட்டினை இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட செயலாளர் தோழர் தே.சரவணன் துவங்கி வைத்து பேசினார்.
மாநாட்டினை வாழ்த்தி இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் தோழர் ராமகிருஷ்ணன் நாமக்கல் ஒன்றிய செயலாளர் தோழர் ரா.தனுஷ் ஒன்றிய தலைவர் தோழர் நவீன் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் M.மணிகண்டன் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் தோழர் சின்னசாமி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் தோழர் சபாபதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் தோழர் ஏ டி கண்ணன் சிறப்புரை வழங்கினார்.

இறுதியாக புதிய ஒன்றிய குழுவினை தேர்வு செய்து அமைப்பின் மாவட்டத் தலைவர் தோழர் தங்கராஜ் நிறைவுறையாற்றினார். நாமகிரிப்பேட்டை ஒன்றிய புதிய தலைவராக தோழர் சதீஷ்குமார் செயலாளர் தோழர் நர்மதா 11 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.

இறுதியாக நன்றியுரை தோழர் தீபிகா கூறினார்.

தீர்மானங்கள்:
1)மங்களபுரத்தில் அரசு கலைக் கல்லூரி துவங்கிட
2) முள்ளுக்குறிச்சியில் அரசு ஐடிஐ கல்லூரி தொடங்கிட
3) நாமகிரிப்பேட்டையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி துவங்கிட
4) நாமகிரிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய
5) முள்ளுக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் நியமித்திட
6) அரசு பள்ளி மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகளில் மாணவர்களுக்கு தரமான உணவினை வழங்கிட

Address

63 THILLAIPURAM
Namakkal
637001

Telephone

+918508117541

Website

Alerts

Be the first to know and let us send you an email when அருந்தமிழ்கண்ணன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to அருந்தமிழ்கண்ணன்:

Share