17/04/2026
எங்கள் வாக்கு - எங்கள் உரிமை —விழிப்புணர்வு அடைந்த மண்டைக்காடு புதூர் மக்கள். இது ஒரு எதிர்ப்பல்ல, இது ஒரு ஜனநாயக விழிப்பு.
பொதுவாக தேர்தல் காலம் என்றாலே யாருக்கு சிறப்போ இல்லையோ மத குருமார்களுக்கு மிக சிறப்பு தான். பொதுவாக அனைத்து கட்சியினரும் மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் துவங்கி அரசியல் சார்ந்த முக்கிய இரகசிய கூட்டங்கள் வரை அனைத்து நாட்களும் திருவிழா நாட்கள் போன்றது தான். என்ன தான் ஆயர் பேரவை மூலம் குறிப்பிட்ட கட்சியினர் பல கோடிகளை கொடுத்து தமக்கான ஆதரவை திட்டினாலும் அதனை தமக்கெனறும் தமது குடும்பத்தினருக்கென்றும் சுருட்டிக்கொள்ளும் ஆயர் மற்றும் அவரை சுற்றி இருக்கும் சில நபர்களால் பலருக்கு பங்கு கிடைக்கவில்லையாம். இதில் தற்போது ஒரு அரசியல் கட்சி ரூ8000 கூப்பண் அறிவித்துள்ள நிலையில் இந்த கூப்பண் முறை இந்த பாதிரிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டதாம். சில ஆண்டுகளுக்கு முன்பு போகும் இடமெல்லாம் அடிதடிக்கு நடத்துவதில் புகழ் பெற்ற பாதிரி ஒருவர் மறைமாவட்டத்தை எதிர்த்து மாற்று கட்சிக்கு ஆதரவு திரட்டி ஒரு கார் வாங்கினார் என்பது பலரும் அறிந்த ஒன்று. சிலர் பல இலச்சம் மதிப்பீட்டில் தமக்கென தமது குடும்பத்தினர் பெயர்களில் நிலங்கள் வாங்கியும் உள்ளனர். இது தவிர சமீபத்தில் பியூஸ் புடுங்கப்பட்ட அரசியல்வாதி ஏற்பாட்டில் மாம்பழத்தாறு ஆணை அருகே உள்ள கெஸ்ட் ஹவுஸ் மற்றும் சில இரகசிய இடங்களில் நடக்கும் சிறப்பு விருந்துகளில் பங்கெடுப்பதும் வளக்கம்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் கனிமவள கடத்தல் லாரிகளால் ஏற்படும் விபத்துகள். வெப்பநிலை அதிகரிப்பு எங்கும் எதிலும் லஞ்சமும் ஊழலும் அதிகரித்து மாணவர்களிடயே போதை கலாசாரமும் பாலியல் அத்துமீறல்களும் அதிகரித்துள்ள நிலையில் இதில் எந்தவித பாதிப்புக்குள்ளாகாமல் மக்கள் பணத்தில் ஒய்யாரமாக வாழும் பாதிரியார்கள் அவர்களின் சுயலாபத்துக்காக மக்களின் வாக்குகளை அடமானம் வைத்து குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க கூறியது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் குழித்துறை மாவட்டத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்த தேர்தலிலும் இதே நிலை தொடர்வதால் அவர்கள் திருந்தாத பட்சத்தில் சில பாதிரியார்களின் லீலைகளின் வீடியேக்களை வெளியிடவும் அவர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள்.
இந்த நிலையில் எங்கள் வாக்கு - எங்கள் உரிமை —என்ற விழிப்புணர்வுடன் மீனவ மக்கள் எழுந்துள்ளனர். குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கோட்டார் மறை மாவட்ட ஆயரும் அருள் பணியாளரும் வாக்கு சேகரித்ததை மக்கள் எதிர்த்து எங்கள் ஓட்டு எங்கள் உரிமை என்று போராடினார்கள்
இந்த உணர்வு ஒவ்வொரு கிராமத்திலும் பரவ வேண்டும்; ஒவ்வொரு வாக்காளரும் தன் சுயமரியாதையை பாதுகாக்க வேண்டும். இந்த புரட்சியை ஏற்படுத்திய மண்டைக்காடு புதூர் கிராமத்தை சேர்ந்த மீனவ சொந்தங்களுக்கு பாராட்டுக்கள் புரட்சியின் தொடக்கம் குமரி மாவட்டம் புதூர் ஊரிலிருந்து துவங்குகிறது 🔥 #நாம்தமிழர்